இறுகி முறுக்கிக்கொண்ட
என் மரக்கதவுகள்
குளிர்காலம் வந்துவிட்டதை
எனக்கு உணர்த்துகின்றன
அடித்துச்சாத்திய காலங்கள்
கடந்து விட்டன
ஒலி எழுப்பாது
சாத்திக்கொள்ளும் அவை
எவ்வித எதிர்ப்பும்
தெரிவிக்காத என்னையே
பல சமயங்களில்
எனக்கு நினைவுறுத்துகின்றன
ஈரமிருப்பின் எல்லாம்
சுளுவாகிப்போவதை.

- சின்னப்பயல் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It