வெறித்து நிற்கும் சாலையின்
இருபுறமும் சோடியம் விளக்குகள்
உதிர்க்கும் இளமஞ்சள் மழை....
அவை நனைக்கும்
மின்கம்பிகளின் இடையில் ஊர்ந்தேறுகின்றது
சொற்பமாய் தொக்கி நிற்கும்
கருநிற இருள்வலை..
 
எழுத்து சாளரங்கள் வழியே
சாலையின் தனிமையை
அலசியுதிர்த்து உட்கொள்ள இயலாமல்
உயிர்ப்பையும் இறப்பையும்
பின்னியெடுக்க ஆரம்பித்திருந்தன
கனவுகளில் அயன்றிருந்த விழிகளும் செவிகளும்..
 
இப்பெருநகர மௌனத்தைக்
கலைக்க மெலிந்துணரப்படும்
ஆலையின் இரைச்சல் மொழியோடு
இறப்பினை மீறிய அணுக்களின்
மௌனக்காகிதத்தில் நிறைவுற்றிருந்தது
துயிலா இரவென்று ஒன்று..
 
- தேனப்பன் [இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.]

Pin It