சங்கி என்பவரை ஏதோ தீவிரவாதி அளவிற்கு அணுக வேண்டாம். உண்மையில் சங்கி என்பவர் பரிதாபத்திற்குரியவர். சுய சிந்தனை இல்லாதவர், தனக்கு வரும், Whats App, Face book செய்திகளை உளமார நம்பி பல குழுக்களுக்கு பகிர்பவர். அவருக்கு என்று தனிப்பட்ட திறமைகள் இல்லை என்பதை அவரே புரிந்து கொண்டுள்ளதால் தன்னைப் பற்றிய பெருமிதம் எதுவும் இல்லாமல் இருப்பவர். அதனால் தன் ஜாதியின் மூலமும், மதத்தின் மூலமும் பெருமிதத்தை அடையலாம் என நம்பும் பரிதாபத்திற்குரியவர். தமிழ் இலக்கியங்களைவிட புராணங்களை உண்மை என்று நம்புபவர். அவர்களிடம் இந்து மதம் என்பதற்கான வரையறை என்ன? இந்து மதம் இந்துக்களுக்கு செய்த நன்மை என்ன? என்று கேட்டால் பேந்த பேந்த முழிப்பவர். தாய் மதத்திற்குத் திரும்புங்கள் என்பார்! எந்த சாதியில் கொண்டு சேர்ப்பீர்கள் என்று கேட்டால் 32 பற்களையும் காண்பிப்பவர்!

புத்தகத்தை முழுமையாக படிக்காதவர்

சங்கி என்பவர் ஒரு புத்தகத்தினைக்கூட முழுமையாக வாசித்தறியாத அபலை. இந்திய நாடு என்பது இந்து மதத்தாலும், புராணங்களாலும் உருவானது என்று சொல்லி அகண்ட பாரதம் குறித்து உணர்ச்சி வசப்படுபவர். இராமாயணத்தில் தசரதன் 60,000 மனைவிகளின் மூலம் குழந்தை பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று விஞ்ஞானிகள் மூலம் சொல்ல வைத்ததுடன் அந்நிகழ்வு நடந்த இடம் கோசலை (உத்தரப் பிரதேசம்) நாட்டிலுள்ள அவாத் என்னுமிடம் என்பதையும் குறிப்பிட்டு சொல்லி ஆனந்தப் பெருக்கு அடைபவர். சங்கி என்பவர் அவரை இயக்கும் பாண்டே, மாரிதாஸ், ஸ்டான்லி, போன்ற ஒரு சிலரால் கட்டுப்படுத்தப்படுகிறார். அனைத்துப் பதில்களும், கேள்விகளும் இவரது மண்டைக்குள் அவர்களால் திணிக்கப்பட்டு உருவாக்கம் செய்யப்பட்டதே

sangi bjp“ஜி” என்ற வடநாட்டு பண்பாடு

சங்கிகளுக்குள் சுற்றும் அனைத்துக் கேள்வி பதில்களும் அவர்களுக்குள் "ஈயடிச்சான் காப்பி" போல ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். அதனால்தான் ஆயிரம் முறை தெளிவான பதில் கிடைத்த பின்னரும் கூட "ஈ.வெ.ரா. தன் கிழ வயதில் மணியம்மையைத் திருமணம் செய்தது ஏன்? என்று எங்கு போனாலும் அதிபயங்கரமாகக் கேட்டுக் கொண்டே இருப்பர். தனது கட்சிக்கரர்களின் வீட்டிற்கு சென்று ஜி' இருக்கிறாரா என்று கேட்பர். 'என்னங்கஜி, வாங்க ஜி, உட்காருங்க ஜி' என்று தனக்கே உரிய ஜி' தமிழில் பேசி சிரிப்பையும் எரிச்சலையும் மூட்டுவர்.

கீழடி அகழ்வாராய்ச்சி நடக்கும்போது தோண்டத் தோண்ட ஏதாவது ஒரு இந்துத்துவ சிலையோ வேத புத்தகமோ, கிடைக்காதா என நம்பி நம்பி வெம்பி வெம்பித் திரிபவர். குஜராத்தைவிட தமிழ்நாடு எல்லா விதங்களிலும் முன்னேறிய மாநிலம் என்ற உண்மை அவர் முகத்திலறைந்த போதும் திராவிடத்தால் வீழ்ந்தோம் எனக் கூசாமல் யார் கேட்டாலும், கேட்காவிட்டாலும் பேசிக் கொண்டே இருப்பவர்.

தன் கைபட ஒரு அணுகுண்டை தன் பாக் கெட்டில் வைத்து எடுத்துச் சென்று பாகிஸ் தான்மீது போட்டு அந்நாடு பஸ்பமாவதை கண்டு ரசிக்க வேண்டும் என்பது சங்கியின் ஆழமன அவா. தன் சக முஸ்லீம்களின் முன்னோர்கள் பாபரின் படையில் இருந்து இங்கு வந்து செட்டிலானவர்கள், வந்தேறிகள் என்பது அவரது திண்ணமான எண்ணம். அந்த எண்ணத்தை அவ்வப்போது உருவேற்றிக் கொண்டே இருப்பர்.

உலகப் பொருளாதாரம், தொழில் நுட்பம், வான்வெளி ஆராய்ச்சி சாப்ட்வேர் நானோ, தொழில் நுட்பம் (software, Nano technology, Micro biology)) மற்றும் எதிரி மீது எந்த நேரத்தில் போர் தொடுக்க வேண்டும் எந்த ஆயுதங்களைக் கொண்டு தாக்க வேண்டும் என்று இராணுவத் திற்கு அறிவுரை சொல்லும் ஞானம் பெற்றவராகவும், விஞ்ஞானியாகவும் தொலைநோக்கு சிந்தனை கொண்ட ஞானியாகவும் மோடி இருக் கிறார் என்பது சங்கிகளின் அசைக்க முடியாத நம்பிக்கை.

 செயற்கை நுண்ணறிவு, பிளாக்செயின், லாட், எ.ஐ.ஆர்.பி.எ. (Artificial intelligence, Block chain, Lot, RPA) நுட்பங்களைப் பற்றி அந்தக் காலத்திலேயே ரிக் வேதத்தில் சொல்லப் பட்டிருந்தது என்பது போன்ற வாஸ்ட்ஆப் செய்திகளைப் பார்த்து பிறவிப் பயனை அடைகின்றனர். இத்தகைய சமயங்களில் இவர் தன்னை ஒரு தேசம் காக்கும் வீரனாகவும், தான் இருக்கும் வாஸ்ட்ஆப் குழுக்களை போர்க்களமாகவும் கருதிக் கொண்டு படபடவென பலருக்கும் பார்வர்டு செய்து பரவசமடைவர். அப்படி பார்வர்டு செய்து கொண்டிருக்கும்போது மொபைல் hang ஆகி விட்டால் ஒருவேளை உள்ளூர் கம்யூனிஸ்டுகள் சீனக் கம்யூனிஸ்டுகளிடம் சொல்லி சீனர்களால்தான் தன் மொபைல் ஹேக் செய்யப்பட் டுள்ளதோ என்ற சந்தேகமும் அவருக்கு அடிக்கடி எழுவதுண்டு.

மனநிலை பாதிக்கப்பட்டவர்

பணவீக்கம், விலைவாசி உயர்வு, தொடரும் எரிபொருள் உயர்வு, வேலையின்மை, கருப்பு பண மீட்பு வாய்சவடால், பண மதிப்பிழப்பு, GST அதனால் ஏற்பட்ட கேடு என்று எதனையும் அவர்களால் பேசமுடியாத நிலையில் உள்ள மகாபாவிகள்! மோடி எதைச் செய்தாலும் வரலாற்றுச் சாதனையாக, உலக அதிசயமாக அதனை நினைத்து சிறிது நேரம் மெய் மறந்து விடுவர். அவர் பேப்பரில் தேன் என்று எழுதிக் காண்பித்தால்கூட அதனை நக்கிப் பார்த்து ஆகா! இனிக்கிறது என்று சொல்லும் மன நிலை பாதிக்கப்பட்டவர்.

பெட்ரோல், டீசல் விலை ஏறினாலும் அதனையும் நியாயப்படுத்துவார். மோடி அதனைக் குறைத்தாலும் நியாயப்படுத்துவார் என்ற வகையில் நாம் என்ன பேசுகிறோம் என்று தெரியாமலே புலம்புவர். தமிழ்நாட்டின் இயற்கை கனிம வளங்கள் கொள்ளையடிக்கப் படுவதையும், காவிரியில் தமிழ் நாட்டு உரிமை மறுக்கப்படுவதையும், மத்திய அரசால் வரி வருவாயின் தமிழகப் பங்கைக் கொடுக்காமல் ஏமாற்றுவது குறித்தும், மாநில அரசுகளின் உரிமைகள் நாளுக்கு நாள் பறிக்கப்பட்டு வருவதையும் உணர முடியாத நிலையில் கோமாவில் இருப்பவர். கோமாவிலிருந்து விடுபட்டதும் இது குறித்து மீண்டும் கேட்டால் கோயில் நிலங்கள் பிற மதத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகக் கதறுவர்.

இந்தியா பல மாநிலங்களைக் கொண்ட ஒன்றியம் துணைக்கண்டம், மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி என்று இருப்பதுதான் ஜனநாயகம் என்று கூறினால் அது குறித்து விவாதிக்க முடியாத மன நிலையில், ஆன்ட்டி இந்தியன் (Anti Indian) பிரிவினைவாதி என்று மந்திரித்து விட்டவர் போல் பேசுபவர். நினைவு திரும்பியதும் மீண்டும் கேட்டால் ஆதி காலத்தில் இந்தியா 50 புராணத் தேசங்களைக் கொண்டிருந்தது என்பர். தருமபுர ஆதீனத்தை பல்லக்கில் தூக்கிச் செல்ல அனுமதி மறுக்கப்பட்டதைக் கண்டித்து அலறுவார்,

புத்தி பேதலித்த நிலை

இந்தியா விடுதலையடைந்து 75 ஆண்டு காலத்தில் பாடுபட்டு உருவாக்கப்பட்ட பொதுத் துறை நிறுனங்களையெல்லாம், அடிமாட்டு விலைக்கு அம்பானிக்கும் அதானிக்கும் மோடியால் விற்கப்படுவதையும் தொலைத்தொடர்பு நிறுவனமான BSNL-ஐயும் முடக்கி அழித்துக் கொண்டிருக்கிறதும்தான் தேசப்பற்றா என்று கேட்டால் 'சாமிக்கு முன் தண்ணீர் தெளித்து பலியிடுவதற்காக விடப்பட்ட ஆடு போல் மிரட்சியான நிலைக்குப் போய் பதிலளிக்காமல் நிற்பவர்'

நிலை குலைந்து, கண்ணீர் சிந்தி

பொதுத்துறை நிறுவங்களை விற்றது, விலைவாசி உயர்வு, பணவீக்கம், வேலை யின்மை கொடுமை என்பதைத் தவிர மோடியின் 8 ஆண்டுகால சாதனை என்ன என்று கேட்டாலோ ஊர் சுற்ற 8500 கோடியில் தனக்கான தனி விமானத்தை வாங்கியது என்பது ஊதாரித்தனமிலையா? என்று கேட்டாலோ, காஷ்மீர் மக்களின் உரிமையைப் பறித்தது நியாயமா என்று கேட்டாலோ உடனே அவர்கள் படேலுக்கும், இராமானுஜருக்கும் பல்லாயிரம் கோடி செலவு செய்து சிலை வைத்தது, இராமருக்கு 1000 கோடியில் கோயில் கட்டியது உலகத்தரத்தில் நாடாளுமன்றக் கட்டிடம் கட்டப்படு வருவது, இராணுவ பலத்தைக் கூட்டியது, யோகாவை உலக அளவில் பிரபலப்படுத்தியது, சீனாவையும், பாகிஸ்தானையும் எல்லையில் வாலாட்டினால் நடப்பதே வேறு என்று பயமுறுத்தி அடங்கச் செய்தது. இதன் மூலம் இந்தியாவை வல்லரசாக்கி உலக அரங்கில் தலைநிமிரச் செய்தவர் மோடி என்று கூறி உணர்ச்சிப் பெருக்கால் நிலைகுலைந்து கண்ணீரைச் சாரை சாரையாய் வடிப்பவர். நிலை குலைவிலிருந்து விடுபட்டதும் 2030-இல் இந்தியா பொருளாதாரத்தில் சீனாவை விஞ்சிவிடும் என்று பரசவப்பட்டு மீண்டும் சாரை சாரையாகக் கண்ணீர் வடிப்பவர்.

தனக்கு வேண்டாதவர்களின் வீடுகளில் ரெய்டு நடத்தி பல்லாயிரம் கோடி கருப்புப் பணம் கைப்பாற்றியதாக அறிவிக்க வேண் டியது பின்னர் அதன் மீதான நடவடிக்கை குறித்தோ, அந்த பணம் என்ன ஆனது என்பது குறித்தோ நீதிமன்றத்திற்கோ, மக்களுக்கோ தெரிவிக்காமல் அவர்களிடம் கட்சி நிதி பெற்றுக் கொண்டு விஞ்ஞான ஊழல் செய்கிறீர்களே, லாட்டரி மார்ட்டின் வீட்டில் ரெய்டு நடத்தி பின்னர் அதன் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்க 100 கோடி கட்சி நிதி பெற்றுக்கொண்டு அவருக்கு எந்தவித டெண்டரும் விடாமல் கோவை-ஷீரடிக்கு இரயில் நடத்த அனுமதி கொடுத்துள்ளீர்களே, ஊழல் பேர்வழிகள், சமூக விரோதிகள், கொலை, கொள்ளைக்கார பேர்வழிகள் என்று அனை வரையும் எவ்வித பாகுபாடுமின்றி கட்சியில் சேர்த்துக் கொள்கிறீர்களே இதெல்லாம் அந்தக் கடவுளுக்கே அடுக்குமா? என்று கேட்டாலோ வலிப்பு நோய் வந்து வாய் ஒருபக்கமாக இழுத்துகொண்டு மூலையில் உட்கார்ந்து விடுபவர்.

சரி இதையெல்லாம் விடுங்கள்! உங் களுக்கு மதத்தைத் தவிர பிற வாழ்வா தாரங்கள் குறித்த சிக்கல்களைப் புரிந்து கொள்ள முடியாத நிலை இருப்பதால் தமிழகத் திலும், வட இந்தியாவிலும் சாதி மறுப்புத் திருமணங்கள் செய்பவர்களை ஆணவப் படுகொலை செய்கிறார்களே திருமணம் செய்து கொண்டவர்கள் இருவரும் இந்துக்கள் தானே, இது குறித்து நீங்கள் எதுவும் சொல்வதில்லை, கண்டிப்பதில்லையே இதற்காவது சரியான நேர்மையான பதிலைச் சொல்லுங்கள் என்று கேட்டால் காக்கை வலிப்பு வந்தவன் போல் வாயில் நுரை தள்ள கீழே விழுந்து விடுபவர்.

நாடே பைத்தியமானால்

             RSSஐ உருவக்கிய சித்பவன் பார்ப்பனர்கள் கூட யோசித்திருக்க மாட்டார்கள் தங்களுக்கு தசரதனைப் போல் 60,000 மனைவிமார்கள் கிடைத்து அவர்களின் மூலம் குழந்தைகளைப் பெற்றுத் தள்ளியிருந்தால்கூட இந்த அளவிற்கு மூளையற்ற சங்கிகள் கிடைப்பார்கள் என்று!

             இன்று குடியரசு தலைவருக்குப் போட்டி யிடும் யஷ்வந்த் சின்ஹா ஒரு முறை கூறினார், "மோடி ஒருவருக்குப் பைத்தியம் பிடித்திருந்தால் சமாளிக்கலாம்! நாட் டையே பைத்தியம் பிடிக்க வைத்துள்ளாரே” எப்படிச் சமாளிப்பது என்றார்!

             ஒரு பார்ப்பான் சங்கியாக இருக்கிறான் என்றால் அதில் ஞாயம் இருக்கிறது! பார்ப்பன அல்லாதவன் சங்கியாக இருக்கிறான் என்றால் அதில் என்ன ஞாயம் இருக்கிறது?

             என்ன செய்வது சங்கிகள் மீது பரிதாபப் படுவதா? வெறுப்புக் கொள்வதா, கோபம் கொள்வதா? என்றே புரியவில்லை! நீங்களே ஒரு முடிவு சொல்லுங்கள்.

- ந.மணிமாறன்

Pin It