ஆர்.எஸ்.எஸ. ஆளுநர் ஆர்.என். இரவி தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றிய 21 தீர்மானங்களைக் குடியரசுத் தலைவருக்கு அனுப் பாமல் கிடப்பில் போட்டுள்ளார். இதில் பல தீர்மானங்கள் பா.ஜ.க. தவிர ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டவை. ஆளுநர் ஆர்.என். இரவியின் செயல் தமிழக மக்களையும் அவர்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட சட்டமன்றத்தையும், இந்தியா மிகப் பெரிய ஜன நாயக நாடு என சொல்லப்படு வதையும் இழிவுபடுத்துவ தாகும். இதனைக் கணக்கிலெடுத்த திமுக கொள்கைப் பரப்புச் செயலாளர் ஆ. இராஜா மாநில சுயாட்சியை வலியுறுத்திப் பேசினார். இதற்கு பதிலாக "தமிழ்நாட்டை பாண்டிய நாடு, பல்லவ நாடு என்று இரண்டாகப் பிரிப்போம். அதற்கான இடத்தில்தான் நாங்கள் இருக்கிறோம்" என பா.ஜ.க. மாநில துணைத் தலைவர் நயினார் நாகேந்திரன் எம். எல்.ஏ., கூறியுள்ளார்.

rss leader 261இதற்கு முன் பா.ஜ.க.வின் முன்னாள் தமிழகத் தலைவர் எல். முருகன் கொங்கு நாட்டை உருவாக்குவோம் என செய்தியைக் கசிய விட்டார். 2024 தேர்தலுக்குப் பிறகு பிரதமர் மோடி இந்தியாவை 50 மாநிலங்களாக உருவாக்குவார் என கர்நாடக அமைச்சர் உமேஷ் கட்டி கூறியுள்ளார். இந் நிலையில் "தமிழகத்தை இரண்டாகப் பிரிக்க வேண்டிய தேவையில்லை" என மத்திய இணையமைச்சர் வி.கே.சிங் திருநெல்வேலியில் பா.ஜ.க. நிர் வாகிகள் கூட்டத்தில் தெரிவித் துள்ளார். இவை ஆராயப்பட வேண்டும்.

இராஷ்ட்ரிய சுயம் சேவக் (ஆர்.எஸ்.எஸ்.) சங்கம் அதன் துணை அமைப்புகளான பா.ஜ.க. உள்ளிட்ட சங்பரிவார் கும்பல் பார்ப்பனிய மேலாதிக்கத்தைக் கொண்ட சாதிய சமுதாயத்தைப் பாதுகாப்பதாகும். பார்ப்பனர்களிலேயே மிக உயர்வானவர் களாகக் கருதிக் கொள்ளக் கூடிய சித்பவன் பார்ப்பனர்களை மட்டுமே கொண்டு ஆர்.எஸ்.எஸ். அமைப்பு 1925 நாகபுரியில் தோற்றுவிக்கப்பட்டது. அதன் நோக்கம் இந்துராஷ்ட்ரம் அமைப்பது. இந்து ராஷ்ட்ரம் என்பது இன்றைய இந்திய எல்லைகளுடன் வடக்கே திபெத் முதல் தெற்கே இலங்கை வரையிலும், மேற்கு ஆப்கானிஸ்தானத்திலிருந்து கிழக்கே பர்மா வரையிலும் எல்லைகளை விரிவாக்கும் காலனியத் தன்மை கொண்டதாகும். இந்து ராஷ்ட்ரம் என்று சொல்லக் கூடிய அகண்ட பாரதத்தில் முஸ்லீம்களுக்கு, கிறித்தவர் களுக்கு, கம்யூனிஸ்டுகளுக்கு இடமில்லை. மனித குலத்தையே கொன்றொழித்த ஹிட்லரும், முசோலினியும் வகுத்த கொள்கைகள் தான் இவர்களுக்கு வழிகாட்டி, உலகை ஆளப் பிறந்தவன் தூய ஆரியன் என ஹிட்லர் சூளு ரைத்தான். அது போல இந்து ராஷ்ட்ரத்தை ஆள சூளுரைத்துள்ளனர். ஆரிய பார்ப்பனர்கள் அப்படியொரு இந்து ராஷ்ட்ரத்தை உருவாக் கும் முயற்சியில் ஆர்.எஸ்.எஸ். கும்பலும் அதற்குத் துணையாக மோடிக் கும்பலும் ஈடுபட்டுள்ளன. பார்ப்பனர்கள் எவ்வளவுதான் ஆரியத் தூய்மை பேசினாலும், இந்தியாவி லுள்ள பார்ப்பனர் தங்களை ஆரியர்கள் எனக் கூறுவதை ஹிட்லர் ஏளனம் செய்தான்.

இப்பார்ப்பனக் கூட்டம் மன்னர்கள் காலத்திலும், கிழக்கிந்திய கம்பெனியிலும், பிரிட்டிஷ் ஆட்சியிலும் அதிகார வர்க்கமாக மக்களை ஒடுக்குவதில் ஆலோசனை கொடுப்பவர்களாக இருந்தனர்.

இந்தியாவில் இருந்து வருகின்றனர். பெரும் நில உடைமை, முதலாளிய வர்க்கத்துடன் குறிப்பாக பார்ப்பன பனியா முதலாளிகளுக்கு தொண்டூழியும் செய்யும் அதிகார வர்க்கமாக இருக்கின்றனர். இந்தியா விலுள்ள பார்ப்பனிய - பனியா முதலாளிகளின் பெரும் மூலதனத்திற்கு அகண்ட பாரதம் என்ற விரிவான சந்தை தேவைப்படு கிறது. அகண்ட பாரதம் என்பது காலனி தன்மை கொண்டது. அதற்கு உள் நாட்டிலும், வெளிநாட்டிலும் மக்களிடமிருந்து இயல்பி லேயே எதிர்ப்புகள் எழும். இதனை ஒடுக்கு வதற்கு இந்திய ஆளும் வர்க்கம் கண்டுபிடித்த கொள்கையே ஜனபதம்.

கி.மு. ஆறாம் நூற்றாண்டிற்கு முன் வட இந்தியாவில் மன்னர்களது முடியாட்சிப் பகுதிகள் ஜனபதம் என்றும், முடியாட்சி இல்லாத குடியரசு சாயல் கொண்ட அல்லது சுழற்சி முறையிலான இனக் குழு அரசுகள் கணம் என்றும் அழைக்கப்பட்டன. பார்ப்பனிய மேலாதிக்கம் கொண்ட சாதிய சமூக அமைப்பே ஜனபதம் ஆகும். அதில் மன்னன் கூட பார்ப் பனனுக்கு கட்டுப்பட்டவன். பார்ப்பனர்களே முழு அதிகாரத்தையும் கொண்டிருந்தனர். அப்பேர்ப்பட்ட ஜனபதத்தை இந்தியாவில் உருவாக்கும் நோக்கங் கொண்டு இந்தியா விலுள்ள 29 மொழி வழி மாநிலங்களை 100 ஜனபத மண்டலங்களாக பிரிக்க திட்டம் தீட்டியுள்ளனர். 1951 தேர்தல் அறிக்கையில் ஜனசங்கம் இதனை அறிவித்துள்ளது.

இந்தியாவை 100 ஜனபதங்களாகப் பிரிக்க பார்ப்பனிய - பனியா முதலாளிகளும் அவர் களுக்கு எடுபிடி வேலை செய்யும் மோடிக் கும்பலும் ஏன் அவசரப்படுகின்றனர்? இந்தியா என்பது பனியா முதலாளிகளும் பார்ப்பனிய அதிகார வர்க்கமும் பெற்றெடுத்த குழந் தையே. ஐரோப்பாவிலும் பிற நாடுகளிலும் தோன்றிய ஜனநாயகத்திற்கான இயக்கங்கள் பேரரசுகளை வீழ்த்தி மொழி வழியிலான தேசங்களைப் படைத்தன. அப்படியான திசை வழியில் இந்தியா நடைபோடுகிறது. தனித் தனியான இறையாண்மை கொண்ட மொழி வழி தேசங்கள் உருவாகுவதைத் தடுத்தாக வேண்டும் என ஆளும் உடைமை வர்க்கம் பதறுகிறது. தனித் தனியான இறையாண்மை கொண்ட மொழி வழி தேசங்கள் அமைந்து விட்டால் அது பெரும் பனியா முதலாளிகளின் விரிவான சந்தையையும பார்ப்பனர்களின் மேலாதிக்க நலனையும் சிதைத்து விடும்.

தமிழீழத்தில் வடக்கு, கிழக்கு மாகாணங்களைப் பிரித்து சிங்களம் எப்படி ஒடுக்கியதோ அது போல இந்தியாவிலுள்ள மொழி வழி மாநிலங்களை மண்டலங்களாகப் பிரித்து ஒடுக்க, சிதைக்க பா.ஜ.க. திட்டம் போடுகிறது. ஜம்மு காஷ்மீரை இரண்டாகப் பிரித்ததைப் போல தமிழ்நாடு உரிமை பெறுவதைத் தடுக்க இரண் டாக மூன்றாகப் பிரித்து ஒடுக்கத் திட்டமிடுகின்றனர்.

தமிழ்நாடு தனி நாடாக மலர்ந்திருந்தால் பொருளாதார வளர்ச்சியில் ஐரோப்பாவை எட்டிப் பிடித்திருக்கும் என்று இந்தியாவிலுள்ள பொருளாதார அறிஞர் அமர்த்திய சென் கூறினார். வெள்ளையர்கள் வருவதற்கு முன் இந்தியா என்ற ஒரு நாடே வரலாற்றில் இல்லை. ஆனால் தமிழ்நாடு பழமையான செம் மொழியையும், பண்பாட்டையும் கொண்ட நீண்ட வரலாற்றைக் கொண்டது. இதன் தொன்மையைப் பாதுகாக்கப் போகிறோமா? தமிழ்நாடு என்ற ஒன்று இல்லாதொழிக்க வடநாட்டுப் பார்ப்பன - பனியா கும்பலின் சதித் திட்டத்திற்குப் பலியாகி தமிழ்நாட்டை மண்டலங்களாகப் பிரித்துத் தாயக உரிமையை இழக்கப் போகிறோமா? உறுதியாக இல்லை.

பாவேந்தர் நம்மை எச்சரித்தார்.

"நாற்புறத்து பகைவர் கூட்டம் -

நடுப்புறத்தே தமிழ்த் தாய்!

காப்பதற்குத் தமிழரெல்லாம் சேருங்கள்

- பாரி

Pin It