அண்டவெடிப்பு ஐங்குறு நூறிலும்.
அகத்தியன் சொம்பில் காவிரி நீரும்.
அவ்வைப் பாட்டி அணுவைப் பிளந்ததும்
அன்றே சொன்னார்கள்.
நானோ தொழில் நுட்பம் நமது கண்டுபிடிப்பு
ஏனோ மறந்தனர் இற்றை நாளில் -இவர்கள்
ஆனைமலையில் அணு உலை அமைத்து
அகிலம் முழுவதும் மின்திறன் அனுப்பிய
தமிழர் திறமையை- அன்றே சொன்னார்கள்.
வான ஓடத்தை கண்டவன் யார்? முதலில் கண்டவன் யார்?
பண்டைத் தமிழன் நம்மைத்தவிர வேறு யார்?
இராவணன் தேரில் சீதையை கடத்த
கண்ணகி கணவனுடன் மேலுலகு செல்ல
சீவகன் நினைத்த இடத்தில் மனம்கவர் கன்னியைப் புணர
வான ஓடத்தைக் கண்டவர் யார்? நம்மைத் தவிர வேறு யார்?
கம்பன் தன்னிலும் பெரிய அறிவியல் அறிஞன்
பாரினில் உண்டோ? இருந்தால் சொல்லும்!.
ராமன் எடுத்த வில்லின் சத்தம் ஒடிவதைக் கேட்டு
இற்றது சீதையின்- மேகலை இடுப்பு.
அல்குல் பெருத்தால் பாவம் மேகலை என்ன செய்யும்?.
பத்துப் பாட்டு, எட்டுத் தொகை காவியம் முதலாய்
எத்தனை முலைகள்! எத்தனை அல்குல்!.
அத்தனையும் அறத் தமிழ் பேசும்!
மணிமேகலை கையில் அட்சய சட்டி
அள்ளக் குறையாத அறுசுவை உண்டி
அய்யோ பாவம்! தொலைத்து விட்டாள்-அருந்தமிழர்
இன்று பட்டினியால் வாட விட்டாள்?
முலையைத் திருகி மதுரையை எரித்த முதல் தமிழச்சி
கண்ணகி அன்றோ?
நரியைப் பரியாக்கி பரியை நரியாக்கி கல் யானைக்கு
கரும்பு புகட்டி எத்தனை சிறப்பு தமிழன் சிறப்பு.
மாலிக்காபூர் வந்து படையுடன் நிற்க, அத்துணை சிறப்பும்
ஒளிந்தது எங்கே?
எல்லாம் சொன்னார்கள். எப்படியோ சொன்னார்கள்.
ஒன்றை மட்டும் சொல்லாது விட்டனர்.
பாவித் தமிழன் பல்லாயிரம் ஆண்டும்
பழைமை வாதம் பேசுதல் மறவான்!
பாட்டன் வெட்டிய கிண்ற்றின் உள்ளே பச்ச நாவி இருக்குது (poison)
ஆனால் தமிழன் அதையை குடிப்பான். மதி கெட்டு போவான்.
அனுமன் கொணர்ந்த மலையில் இருந்து
சிதறிய மருந்துகள் கொட்டிக் கிடக்குதாம்! முடிந்தால்
எடுத்து அவன் சித்தம் தெளிய வைத்தியம் செய்வீர்!
பாம்பு கடித்து பத்து நாள் ஆனாலும்
எரித்த சாம்பலை எறிந்துவிடாதீர்!
சைவத் தமிழன் பாட்டுப் பாட சாம்பலில் இருந்து
பாவை வருவாள்- பெண் பாவை வருவாள்.
ஐய்யம் இருப்பின் சம்பந்தன் பாடிய தேவாரம் பாரும்!
நோய்கள் தீர மருந்துகள் வேண்டாம்.
மாத்திரைகளே! நீங்கள் யாத்திரை செல்வீர்!
கோளாறு பதிகம் பாடி முடிந்தால் அத்துனை நோயும்
அற்றுப் போகும்- அன்று சொன்னது இன்றும் நடக்கும்.

Pin It