எதிர்பார்ப்பின்
எதுகைகளாக
பயணிக்கிறோம்
மழை தேடும் நீயும்
உன்னை தேடும் நானும்....
உன்னை சேர்ந்தால்
மோட்சம் பெறுவேன் நான்...
நீ மழையை சேர்ந்தால்
மோட்சம் பெறும் மழை..
முக்கோண காத்திருப்பில்
மூன்று புள்ளிகளாய்
மையம் கொள்கிறோம்
நீ... நான்.... மழை....