நாடியம்மா
வேளாங்கண்ணி மாதா
நாகூர் ஆண்டவா என
அருகில் வந்து
காசு கேட்டு நிற்பார்.

ஆட்களுக்குத் தகுந்த மாதிரி
சரியான
ஒன்றைச் சொல்வார்
துளிர்க்கும் இரக்கத்தற்காக.

ஒரு வேளை
சாமி சரணமும்
அரோகராவும்
என்னை
ஒன்றும் செய்யாததால்
மூன்றையும்
அழைத்திருக்கலாம்.

நீண்ட காலமாக
அவரும்
கேட்டுக் கொண்டே
இருக்கின்றார்.
நானும்
நகர்ந்து கொண்டே
இருக்கின்றேன்
இரக்கமற்றவனாக அல்ல...

எல்லாக் கடவுளையுமே
அழைக்கின்றார்.
அவர்
தொழிலுக்காக
நான்
தெரிவதற்காக.

இன்றாவது
நான்
கொடுக்கலாம்தான்
அவர்
குடிக்காமலிருந்தால்.

- ரவி அல்லது

Pin It