lady 288பேருந்துகளால் கைவிடப்பட்ட
பயணியர் நிழற்குடை ஒன்றின் கீழ்
அவளைக் காண்கிறேன்
நான்காவது நாளில்...
நீர் விளிம்பிட்ட கண்களில்
எதிர்பார்ப்பும் ஏக்கமும்...
நிறைந்திருந்த அவநம்பிக்கைகளுக்கிடையே
துளி நம்பிக்கை மொட்டு கண்கள்...
இரு சக்கர வாகனத் தேடல்
தொடங்கிவிடுகிறது தூரத்திலேயே
அவள் செவி வழியே...
கடந்து சென்ற வாகனப் புகையில்
கரைகிறது எதிர்பார்ப்பூக்கள்...
உறுதியான நேசக் கூற்றொன்றுக்கு
இரையாகி இருக்கலாம்
அவளின் திண்மை...
பருந்தொன்றின் தேகப் பசிக்கு
இரையாயிருக்குமோ பெண்மை...
சூழல் மறந்த தேடல் அவளிடம்...
தேடல் தராத விலாசங்கள்
விடை தேடி அவள் காலடியில்...
ஆதாரம் அறிந்திருந்தால்
பதில்கள் அனுப்பியிருப்பேன் காலடிக்கு
விதையும் தெரியாது
விளைவுகளும் அறியாது
நாளைய விடியலில்
கண்ணில் படக் கூடாது
என்ற வேண்டுதல் மட்டும்
என் வசம்...

Pin It