காதலுக்கு நீ சம்மதித்த நொடியிலோ...
பிரிந்துவிடலாம் என்று நீ சொன்னதற்கு
முந்தைய நொடியிலோ...
உறைந்து போயிருக்கலாம் உலகம்.
--------------------------------------
காதலன் என்ற ராஜ அந்தஸ்த்தோடு
பெருமிதமாய் வலம்வந்த நான்
நீ பிரிந்த அந்த நொடியில்
மற்றுமொரு சக மனிதனாய்
பதவியிறக்கம் செய்யப்பட்டேன்.
--------------------------------------
எல்லாக் காதலனும் காதலிக்கு
இன்னொரு குழந்தை.
எல்லாக் காதலியும் காதலனுக்கு
இன்னொரு தாய்.
ஆனால், சில அம்மாக்கள்
குழந்தைகளை எளிதில்
பிரிந்துவிடுகிறார்கள்.
- சஜயன்
RSS feed for comments to this post