தமிழன்னை மீதும், மறைந்த தமிழ் அறிஞர்கள் மீதும் தாக்குதல் நடத்தியவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி இரண்டு மாதங்களுக்கு முன்னர் முதலமைச்சரின் தனிப்பிரிவிற்கு தமிழறிஞர்கள் கொடுத்த விண்ணப்பம் (மனு எண்: E/268872 நாள்: 3-09-2012) காவல்துறை ஆணையருக்குச் சென்றும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.

மீனவர்கள் மீன்களைக் கொல்வதால் மீனவர்களை சிங்களவர் கொல்கிறார்கள் என்று சின்மயி எழுதியுள்ளார். மேலும் தாழ்த்தப்பட்ட சாதிக்கும் பிற்படுத்தப்பட்ட சாதிக்கும் இட ஒதுக்கீடு தவறு என்றும் தொடர்ந்து கலகத்தைத் தூண்டும் நோக்குடன் எழுதினார். சின்மயி தூண்டியது வெளிவரவில்லை! அவருடைய தவறுகள் வெளிவரவில்லை. சமூக உணர்வுகளைத் தூண்டிவிட்ட சின்மயி மீதல்லவா வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு வந்திருக்க வேண்டும்? ஆனால் சின்மயி திட்டமிட்டுத் தமிழர்களைத் தொடர்ந்து உணர்ச்சிவயப்பட வைத்து தான் விரித்த வலையில் விழச்செய்து பின்னர் அவர்கள் மீதே கொடுத்த புகாரால் பாலியல் கொடுமை சட்டத்தின் கீழ் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

ஆனால் புகார் கொடுக்கப்பட்டு இரண்டு மாதங்களாகியும் (மனு எண்: E/268872 நாள்: 3-09-2012), பாவாணரைப் பற்றி நாகூசும் சொற்களால் கீழ்த்தரமாக எழுதியதற்கு என்ன நடவடிக்கை இதுவரை எடுக்கப்பட்டது ?

செர்மனியில் உள்ளவர் வா.கொ விசயராகவன். அவருக்குத் தனித்தமிழ் இயக்கம், திராவிட இயக்கம் , சமற்கிருத எதிர்ப்பு போன்ற காரணிகளால் தமிழர் மீது வெறுப்பு. 25-03-2010 அன்று அதாவது இரண்டரை ஆண்டுகட்குமுன்னர் “பெயர் மாற்றம்" என்ற குழு மடலாடலில் மின்தமிழ் வலைத்தளத்திலே மறைந்த மாபெரும் தமிழறிஞர்களைக் கீழ்த்தரமாக எழுதினார். மீண்டும் 2012- இல் ஆகத்து மாதத்தில் பாவாணரை நா கூசும் சொற்களால் எழுதினர்.

முதுபெரும் தமிழறிஞர்களையும், மொழியையும், இனத்தையும் ஒரு கூட்டம் தொடர்ந்து தாக்கிக்கொண்டே இருக்கிறது. இந்த அரசு தமிழ் எதிரிகளுக்கு ஆதரவான அரசு என்று பெயர் வாங்கிக் கொடுக்க பல்லாற்றானும் சதிவலைகள் பின்னப்படுகின்றனவோ என்ற அச்சம் எங்களுக்கு எழுகிறது.

இதில் இணைய வலைத் தளங்கள் என்ற போர்வையில் தமிழர்களைச் சீண்டுவதும் உணர்வுகளைத் தூண்டுவதுமாகக் கலகத்தை உருவாக்கி அரசுக்குத் தொல்லைகளைத் தந்திட சில தீய சக்திகள் அறிந்தே செயல்பட்டு வருவது அரசின் பார்வைக்கும் வந்திருக்கும். தமிழ் மரபு அறக்கட்டளை நடத்திவரும் 'மின் தமிழ்’ என்ற வலைத்தளத்தில் மறைந்த தமிழ்ச் சான்றோர்களை இழித்தும் பழித்தும் குழு மடலாடல் என்ற பெயரில் இழி செயல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இணையத்தளத்தில் முதுபெரும் தமிழறிஞர் மொழிஞாயிறு தேவநேயப் பாவாணரையும், தமிழ் மொழியையும், தமிழர்களையும் பண்பற்ற ஆங்கில சொற்களைப் பயன்படுத்தி தமிழர்களுக்குத் தீரா மனவலியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தி வருகிறார்கள். மின் தமிழ் வலைத்தளப் பக்கத்தில் விஜயராகவன் என்பவர் ஒருமையிலும், மறைந்த மனிதரைப் பற்றி இகழ்தலும் கூடாது என்று அறிந்தே இழிவுபடுத்தியும் மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணரைப் பற்றி எள்ளி நகையாடி எழுதியுள்ளார்:

“ஹஹஹ்ஹஹஹ்ஹஹஹஹஹ்ஹஹஹ் ஞானமுத்து தேவநேயனின் உளரல்களை பற்றிப் பேசினால், வழக்கா. இதை நான் மிகவும் ரசிக்கிறேன். லெமூரியர்களே, போடுங்கள் உங்கள் கேஸ்களை, எனக்கு ஜாலிதான். அவருடைய ஜாதி, மதம் , பொருளதாரம், அரசியல் பார்வைகள், பெண் உறவுகள், அவர் ஜெயிலுக்கு அனுப்பப்பட்டவரா இல்லையா, அவர் முனிவரா, கயவனா எதுவும் எனக்கு தெரிய வேண்டியதில்லை. அவருடைய மொழி பற்றிய எழுத்துகள்தான் படித்தேன் - அதைப்போல் உளறல்களை எங்கும் பார்த்ததில்லை. அதைத்தான் இங்கு படித்து, பகிர்ந்து கொண்டேன். இதுக்கு எந்த ஜோக்கராவது கேஸ் போடுவேன் என்றால், உலகம் தான் சிரிக்கும். இது தமிழுலகத்தில் அறிவுசார் விவாதங்கள் எவ்வளவு கீழ் மட்டத்தில் இருக்கிறது எனக்காட்டுகிறது. G.Devaneyan is a charlatan. ஞா.தேவநேயன் பூகோளம், சரித்திரம், இந்திய மரபு சொற்கள், மொழியியல் ஒன்றையும் மதிக்காமல் புருடா விட்டு வைத்துள்ளார். சரமாரியாக பொய்களை உதிர்க்கிறார் ஞானமுத்து தேவநேயன். அதற்கு மேல் தன்கால விஞ்ஞானத்தை ஜோக்காக கருதி, அறிவியல் துறையை கிள்ளுக்கீரையாக்கி அதன் மேல் “மொழியியலை” கட்டுபவன். fraudster , quake, charlatan" என்றெல்லாம் விஜயராகவன் எழுதியுள்ளார்.

இன்றும் தொடர்ந்து தமிழையும், தமிழறிஞர்களையும் தாக்கி எழுதி வருகின்றார். முன்பு இதே போல் மறைமலை அடிகள், இலக்குவனார், பெரியார், அண்ணா முதலியோரை இழிவாக ‘மின்தமிழ்’-ல் எழுதினார். இவ்வாறு தொடர்ந்து தமிழையும், தமிழறிஞர்களையும் இழிவுபடுத்தித் தமிழர்களின் உணர்வுகளைப் புண்படுத்துவதைக் கண்டிக்கிறோம். தாங்கள் உடனடியாகத் தக்க நடவடிக்கை எடுத்து, மின்தமிழ் வலைத்தளத்தை முடக்கவும் இணையத்தளக் குற்றவாளிகளைக் கைது செய்யவும் வேண்டுகிறோம். சின்மயி என்ற சினிமா பாடகி தமிழரை, மீனவரை, இட ஒதுக்கீட்டை கேவலமாக எழுதியது வெளிவரவில்லை.

எனவே இப்போதாவது உடனே தமிழ்நாடு காவல் துறை இணையக் குற்றப் பிரிவின் வழியே கடும் நடவடிக்கை எடுத்துக் குற்றவாளிகளைக் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தும்படி வேண்டும்.

முனைவர் இறையரசன்
தஞ்சை கோ.கண்ணன்
தமிழ் எழுச்சிப் பேரவை
ஈ-1, வேங்கடாத்திரி அடுக்ககம்,
11, மருத்துவமனை சாலை,
வளசரபாக்கம், சென்னை -60 00 87.
பேசி: 24763443, 9840416727.

Pin It