பாலாபிஷேகமா...

உன் வேண்டுதல் போல்

தாராளமாய்ச் செய்து கொள்;

 

சந்தன அபிஷேகமா...

உன் மனம் விரும்பியபடி

சாத்திக் கொள்;

 

குங்கும அபிஷேகமா...

உன் குடும்பத்தார் ஆசைப்படி

குதூகலத்தோடு கொண்டாடி மகிழ்;

 

புஷ்பாபிஷேகமா...

எவ்வளவு செலவானாலும்

செய்து முடி.

 

ஒன்றே ஒன்று மட்டும்

கேட்டறிந்து கொள்;

இத்தனைக்குப் பிறகும்

உன் வாழ்வில் இனி

எந்த இடையூறுகளும்

வராதென்று

சத்தியம் செய்து கொடுக்குமா

உன் குலசாமி...?

Pin It