பாலாபிஷேகமா...
உன் வேண்டுதல் போல்
தாராளமாய்ச் செய்து கொள்;
சந்தன அபிஷேகமா...
உன் மனம் விரும்பியபடி
சாத்திக் கொள்;
குங்கும அபிஷேகமா...
உன் குடும்பத்தார் ஆசைப்படி
குதூகலத்தோடு கொண்டாடி மகிழ்;
புஷ்பாபிஷேகமா...
எவ்வளவு செலவானாலும்
செய்து முடி.
ஒன்றே ஒன்று மட்டும்
கேட்டறிந்து கொள்;
இத்தனைக்குப் பிறகும்
உன் வாழ்வில் இனி
எந்த இடையூறுகளும்
வராதென்று
சத்தியம் செய்து கொடுக்குமா
உன் குலசாமி...?