* சாமிப்படக் காலண்டரை
கழட்டியெறிந்தது
நாத்திகக் காற்று.
* விழுந்து கிடந்த தமிழ்ச்சமூகம்
எழுந்து நிமிர விழுதானது...
பெரியாரின் தாடி.
* அடிமை இருளை
அடித்து விரட்டியது...
பெரியாரின் ஒற்றைக் கைத்தடி
* மூட இருட்டை விரட்டு.
உனக்குள் ஒளிரும்
பகுத்தறிவுச் சுடர்.
* சாதி அழுக்கைக் களைந்தெறி.
மனிதக் கடலில் துளியாகு.
மானுடம் சொல்லும் மனிதன் நீயென்று.
- வந்தவாசி மு.முருகேஷ்