எந்த வகை மின்னணுக்களாக இருந்தாலும் அலைகளுக்கிடையில் எதிர்ப்பு விசை உண்டு. காரணம் அனைத்தும் ஒரே வகையான எதிர் மின்னூட்டம் கொண்டவையாதலால் ஒன்றை யொன்று  எதிர்க்கும். இந்த எதிர்ப்பு விசையின் விளைவை அறிவியலறிஞர்கள் கணக்கிட்டிருக்கிறார்கள். பொதுவாக, இரண்டு தனி மின்னணுக்களுக்கிடையில் உள்ள எதிர்ப்பு அதிக பட்சம் இருக்கும். ஒரு தனி மின்னணுக்களுக்கும், ஒரு பிணைக்கப்பட்ட இணை மின்னணுக்களுக்கு மிடையே உள்ள எதிர்ப்பு முன்னதைவிடச் சற்றுக் குறைவாக இருக்கும். இரண்டுமே பிணைக்கப்பட்ட இணை மின்னணுக்களாக இருந்தாலும் இன்னும் குறைவாக ஈர்ப்பு விசை இருக்கும். 

ஒரு எடுத்துக்காட்டோடு பார்த்தால் இத் தத்துவம் எளிதில் விளங்கிவிடும். அம்மோனியா மூலக்கூறில் 3 N-H இணைக்கப்பட்ட இணை மின்னணுக்களும், ஒரு தனி இணை மின்னணுக் களும் உள்ளன. அவைகளுக்கிடையில், ஒன்றுக் கொன்று, ஒன்றையொன்று பாதிக் காத வகையில்  இணக்கமான சூழ்நிலை நிலவ வேண்டுமானால் படத்தில் காட்டியபடி தங்களை அவை அமைத்துக் கொண்டால்தான் அம்மோனியா மூலக்கூறு எந்த ஆபத்துக்கும் உட்படாமல் நிலையாக இருக்க முடியும்.  பிணைக்கப்பட்ட இணை மின்னணுக்களும் ஒரு பிரமிட் போன்ற அமைப்பில் தங்களை இருத்திக் கொண்டும், பிணைப்பில், ஈடுபடாத  தனி இணை மின்னணுக்கள் இரண்டும் மேற்புறம் நீட்டிக் கொண்டிருப்பது போல் வைத்துக் கொள்ளும்போது மூலக்கூறு முழுவதற்குமே சிரமம் எதுவுமில்லாமல் நிலைப்படுத்திக் கொள்ள முடிகிறது.  

ஒரு நுட்பம் இங்கே கவனிக்கப்பட வேண்டியுள்ளது. ஒரு மூலக்கூறுக்கு, அதற்கென்று ஒரு தனிப்பட்ட வடிவமும், அமைப்பும் இருக்கிறது. அந்த வடிவமும், அமைப்பும் அம்மூலக்கூறுக்கு எப்படி அமைகிறது? யார் இந்த மூலக்கூறு இந்த வடிவத்தில்தான் இருக்கவேண்டும் என்று தீர்மானிக்கிறார்கள்? ஆம்! ‘கிட்டப்போனால் முட்டப்பகை’ என்ற பழமொழியின் கருத்துதான் இதைத் தீர்மானிக்கிறது.

மூன்று இணை பிணைப்பு மின்னணுக்களும், ஒரு தனி இணை மின்னணுக்களுமாக உள்ள ஓர் அமைப்புக்கு ஒன்றுக்கொன்று பாதிப்பில்லாமல் ஒன்றையொன்று ஒத்துக்கொண்டு போகவேண்டுமானால் பிரமிட் போன்ற அமைப்புடன் மேற்புறம் நீட்டிக்கொண்டிருக்கும் நாற்பக்க அமைப்புத்தான் (Tedrahedran) அதற்குத் தீர்வாக அமைய முடியும். வேறு எந்த வடிவத்தில் அந்நான்கும் தங்களை அமைத்துக்கொண்டாலும் ஒன்றுக்கொன்று எதிர்ப்பு வலுத்து இறுதியில் மூலக்கூறு நிலைப்புத் தன்மை குன்றி உடைந்து போகும்.

ஆக, மூலக்கூறுக்கு என்ன வடிவம் இருக்க வேண்டும் என்று தீர்மானிப்பதே அதில் உள்ள பிணைப்பு இணை மின்னணுக்களும், தனி இணை மின்னணுக்களும்தான் என்பது தெளிவா கிறது.  அவை செயல்படும் விதத்தின் உள்ளார்ந்த கோட்பாட்டை நோக்கும்போது ‘கிட்டப் போனால் முட்டப் பகை’ பழமொழியின் கருத்துக் கிணங்க குறிப்பிட்ட தூரங்களிலும், குறிப்பிட்ட கோணங்களிலும் தங்களை நிலை நிறுத்திக் கொள் கின்றன.

‘தூரத்துப் பச்சை கண்ணுக்கு அழகு’ என்ற பழமொழியின் கருத்தும் இதிலேயே அடங்கியிருப் பதை நாம் எளிதில் உணரலாம். இதே போன்று ஒவ்வொரு மூலக்கூறும் நடந்துகொள்வதால் குறிப்பிட்ட தூரங்களும், குறிப்பிட்ட கோணங் களும் தானாகவே ஏற்பட்டு, அதன் மூலம் அம் மூலக்கூறு என்ன வடிவத்தில் இருக்கவேண்டும் என்பது தீர்மானிக்கப்பட்டுவிடுகிறது.

ஆறறிவுடைய மனிதன் சிந்தித்துச் செயல் படுவது போல, ஆனால், அதைக் காட்டிலும் ஒருபடி மேலேயே சென்று செயலாற்றிக் கொண் டிருக்கும் மூலக்கூறுகளை நினைக்கும் போது, வியப்படையாமல் இருக்க முடியவில்லை.  இவற்றையெல்லாம் பார்க்கும் போது வேதியியல் வெறும் அறிவியல் பாடம் மட்டுமல்ல, மனிதன் எப்படி தங்களுக்குள் இணக்கமாக வாழவேண் டும் என்பன போன்ற உயரிய தத்துவங்களை மறைமுகமாகப்  போதிக்கும் அறிவுக் களஞ்சியம் அல்லவா அது!

வேதியியலில் ஒரு பிரிவு கனிம வேதியியல். அதில் ஒரு உள்பிரிவு உலோகங்களை அவற்றின் தாதுப்பொருள்களிலிருந்து பிரித்தெடுப்பதைப் பற்றி விளக்கும் பகுதியாகும். இதற்காகக் கடைப் பிடிக்கப்படும் முறைகளைக் கவனிக்கும் போது அவற்றில் அடங்கியுள்ள தத்துவம் நமக்கு சமைய லறையில் பழகிப்போன முறைகளாகவே அமைந் துள்ளதைக் காணமுடிகிறது.

தங்கம் போன்ற ஒரு சில உலோகத்தைத் தவிர மற்ற அனைத்தும் புவிக்கடியில் கூட்டுப் பொருள்களாகத்தான் கிடைக்கின்றன. அவற்றைத் தாதுப்பொருள்கள் என்று அழைக்கின் றனர். அவற்றிலிருந்து உலோகத்தைப் பிரித்தெடுக்கப் பல முறைகளைக் கையாளுகிறார்கள். தாதுப்பொருள்களுடன் தேவையற்ற தும்பு, தூசு, மணல், களிமண் போன்ற பொருள்கள் இருக்கக் கூடும். எனவே, தேவையற்ற பொருள்களிலிருந்து நமக்குத் தேவையான தாதுப் பொருள்களை மட்டும் பிரித்தெடுக்கும் முறைகளை, தாதுப் பொருள்களைத் தூய்மைப்படுத்தும் அல்லது ஒருமைப்படுத்தும் முறைகள் என்றழைக்கின் றனர். அவற்றுள் முதலாவதாக ‘நீரினால் கழுவு தல்’ அல்லது ‘ஈர்ப்பு விசையினால் பிரித்தல்’ என்ற முறையைப் பார்ப்போம்.

இம்முறையில் பொடியாக்கப்பட்ட தாதுப் பொருளைச் சற்றுச் சாய்வாக உள்ள ஒரு கிடை மட்டமான மேடை மீது பரப்பி வைத்து வலிமை யான நீரோட்டத்தை அதன் மீது பாய்ச்சுவார்கள். மிகவும் இலேசான மணல் மற்றும் இதர மண் சம்பந்தமான பொருள்கள் அனைத்தும் வலிமை யான நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டு விடும். கனமான தாதுப் பொருள்கள் அடியில் தங்கிவிடும். இதுதான் நீரினால் கழுவுதல் அல்லது ஈர்ப்பு விசையினால் பிரித்தல் என்றழைக்கப்படும் முறையாகும். 

இந்த முறையைக் கூர்ந்து கவனிக்கும் போது இதில் அடங்கியுள்ள தத்துவமும், அது கையாளப்படும் விதமும் நமக்கு ஒன்றும் புதிய தல்ல என்று தெரிகிறது. கடையில் வாங்கி வந்த அரிசியில் நிறைய உமி மற்றும் சிறு சிறு கற்கள் இருப்பதுண்டு. எனவே, அதை அப்படியே சமைய லுக்குப் பயன்படுத்த முடியாது.

அந்த அரிசியை ஒரு பாத்திரத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி சற்று நேரம் ஊற வைத்து பின் வலதுகை விரல்களை ஒன்று சேர்த்து குவித்து வைத்து பாத்திரத்தில் உள்ள நீருக்குள் சற்றே மூலமாக முழுகியிருக்கு மாறு வைத்துக்கொண்டு இடது கையினால் அந்த பாத்திரத்தை முன்னும் பின்னும் மாற்றி மாற்றி அசைக்கையில் பாத்திரத்தில் உள்ள அரிசி மற்றும் நீர் சேர்ந்த கலவையிலிருந்து அரிசி மட்டும் சிறிது சிறிதாக வலது கையில் ஏறி உட்கார்ந்து கொள்ள, கை நிரம்பியதும் அதை எடுத்து வேறொரு பாத்திரத்தில் போட்டுவிட்டு மீண்டும் மேற்கூறிய முறைப்படியே தொடருவார்கள். நம் வீடுகளில் ‘அரிசி களைதல்’ என்ற பெயரால் நம் தாய்மார்களால் தொன்று தொட்டு கடைப் பிடிக்கப்பட்டு வரும் இம்முறைக்கும் உலோகவியல் தொழிற்சாலைகளில் கடைபிடிக் கப்படும் முறைக்கும் தத்துவவாரியாகப் பார்த்தால் ஒரு வித்தியாசமும் இல்லை.

(அறிவியல் ஒளி டிசம்பர் 2011 இதழில் வெளியானது)

Pin It

அன்டோன் வொன் லியுவென்ஹோக் (Anton Von Leeuwen hock), (1623-1723) என்ற டச்சு அறிவியலார் நுண்நோக்காடியால் (microscope) பல சோதனைகள் செய்து கூர்நோக்கியில் நுண்ணுயிரிகளையும் பிற நுண்மங்களையும் (microbes) முதன் முதலாகக் கண்டறிந்தார். அறிவியலை அவர் முறையாகக் கற்றவரல்லர். ஆம்ஸ்டர்டாமில் துணி வாணிகத் தொழிலில் முதலில் ஓர் எழுத்தராகப் பணியாற்றினார். பிறகு தன் சொந்த ஊரான டெல்வ்ட் (Delft) டில் சொந்தமாக வாணிகம் புரிந்தார். அங்கே தன் பெரும்பாலான நேரத்தைப் பூதக்கண்ணாடி கொண்டு சோதனைகள் செய்வதிலும் கழித்தார். அப்போது நானூறு வளைக் கண்ணாடிகளுக்கு (lens) மேல் தேய்த்து ஒரு லென்ஸ் கொண்ட உயர்ந்த நுண்ணோக்காடிகள் உற்பத்தி செய்தார்.

அவர் கண்டுபிடித்த நுண்ணோக்காடி மூலமாக 'நுண் விலங்குகளின்' (tiny animals)) புதிய உலகம் கண்டார். மணல் மணிகளின் நிறை குவியலைப் போன்ற நுண்ணுயிர்த் தொகுதிகளை நூற்றுக்கணக்கில் கணக்கிட்டு மதிப்பிட்டார். "நான் நாள் தோறும் உப்பைக் (Salt) கொண்டு வாய்த்தூய்மை செய்கிறேன். இருப்பினும் நெதர்லண்டில் வாழும் மக்கள் தொகையை விட மிகுதியான உயிர்வாழ் விலங்குகளை நான் என் வாயில் சுமக்கிறேன். அது எப்படி முடியும்" என அவர் கேட்டு எழுதியுள்ளார். இலண்டனிலுள்ள ராயல் சொசைட்டிக்கு (Royal Society in London)1673 ஆண்டு முதல் அவர் தன் நுண்ணோக்காடியின் கூர் நோக்கியில் தொடர்ந்து கண்ட முடிவுகளை அனுப்பத் தொடங்கினார்.

லியுவென்ஹோக் சிறு வடிவங்கள் கொண்ட விலங்குகளின் வாழ்க்கையைக் குறிப்பாக ஆய்வு செய்தார். அந்துப்பூச்சி (Weevils), தெள்ளுப்பூச்சி (fleas), பேன் (lice) ஆகியவை தாமாகவே உற்பத்தியானவை அல்ல என்றும் குப்பையில் உற்பத்தியாகுபவை அல்ல என்றும் கண்டறிந்து இதுவரை எண்ணிவந்த இதற்கு எதிரான கருத்துகள் பிழையானவை என்றும் அவரால் காட்ட முடிந்தது. எறும்புகளை (ants) ஆய்ந்து அவற்றின் முட்டைகள் என இதுவரை நினைக்கப்பட்டு வந்ததை கிரைஸலிசஸ் (Chrysalises) என அழைக்கப்படும் முழுமையான பூச்சிகள் அவை என நிறுவினார். ஒரு காலத்தில் நினைத்தது போலச் சிப்பிகள் (mussels) மணலில் உருவானவை யல்ல என்றும் விலங்குமீன் அல்லது மலங்கு (eels) பனித்துளியால் (dew) ஆக்கப்படுவதில்லை என்றும் செய்முறை விளக்கம் காட்டி அந்நினைப்புகளைப் பொய்யாக்கினார்.

இருப்பினும் அவருடைய பணிகள் மருத்துவச் சிந்தனையில் உடனடிப் பயனை விளைவிக்கவில்லை. பல ஆண்டுகள் மக்கள் நுண்ணுயிர்கள் தாமாகவே உற்பத்தியாகின்றன என்றே நினைத்து வந்தனர். அறிவியலாளர்கள் கூட நீண்டகாலம் சிறு நுண்ணுயிரினம் தம்முள் இனப்பெருக்கம் செய்து கொள்பவை என்பதை ஏற்கத் தயங்கி வந்ததுண்டு.

 (உடலும் மருந்தும் நூலிலிருந்து)

Pin It

கார்-எஞ்சின் எப்படி வேலை செய்கின்றது என்பதை அறியாமல், நாம் கார் ஓட்ட கற்றுக் கொள்ள முடியும். அது போலவே, எப்படி நம்-மூளை கற்கின்றது... சிந்திக்கின்றது என்பதை அறியாமல் நாம் கற்றுக் கொள்கின்றோம்... சிந்திக்கின்றோம். மூளை என்பது ஒரு கற்றுக் கொள்ளும் எந்திரம். சிறுவயது முதல், அது படிப்படியாக சிறுகச்சிறுக கற்றுக் கொள்கின்றது. இவ்வாறே நாம் கேட்க, பார்க்க, பேச. நடக்க, ஓட, சிந்திக்க, பகுத்து-அறிய என பலவற்றை கற்றுக் கொள்கின்றோம். நாம் எப்படி கற்றுக் கொள்கின்றோம் என்பதை இரு முக்கிய காரணிகள் நிர்ணயிக்கின்றன. நம் ஜீன்கள், நாம் வளர்ந்த/வாழும் சூழல். இதில் இரு முக்கிய சூழல்கள் உள்ளன: சிறுவயதில் நெருங்கிய பந்தங்கள், பிற்பாடு நாம் வாழும் சமூகம். சிறுவயதில் பதிந்து போனவை பசுமரத்தில் அடித்த ஆணி போன்றது தான்; பிறகு மாற்றுவது எளிதல்ல.

மூளை எப்படி கற்று கொள்கின்றது?

மூளை என்பது நரம்பு-செல்கள் (Neurons) பிணையப்பட்ட வலை (Neural Network). நாம் கற்கும்போது, புதிய நரம்பு-செல்-இணைப்புகளை உருவாக்கியோ அல்லது இணைப்புகளின் பலத்தை கூட்டியோ/குறைத்தோ நம் மூளை கற்றுக் கொள்கின்றது. இவ்வாறு புலன்கள் மூலமாக செல்லும் உலக விசயங்களை கொண்டு, மூளை மாதிரிகளை (Models) உருவாக்குகின்றது. இதில் ஒரு மாதிரியின் பலம் அல்லது நம்பிக்கை அதன் நிகழ்தகவை பொருத்தது. நாம் கற்று கொள்ளும்போது, அந்த மாதிரியின் நம்பிக்கை-நிகழ்தகவு அதிகரிக்கவோ, குறையவோ செய்யும்.

brain_240இந்த மாதிரிகளைக் கொண்டே, நாம் வாழ்க்கையை/உலகைப் புரிந்து/கணித்து வாழ்கின்றோம். புலன்கள் மூலமாக மூளைக்கு செல்லும் எந்த விடயங்களும் உலகைப் பற்றிய முழுமை அல்ல. அந்த முழுமையற்ற விடயங்களிலிருந்து மூளை ஒரு மாதிரியை (அறிவியல் தியரி போல்) உருவாக்கி, உலகை... வாழ்க்கையைப் புரிந்து... கணிப்பதையே அறிவு என்கின்றோம். அனைத்துமே முழுமையற்று இருப்பதால், அனைத்துமே நம்பிக்கை தான்; நம்பிக்கையின் நிகழ்தகவு வேறாக இருக்கலாம்; 100% நிச்சயம் என்று ஒன்றும் இல்லை. ஒவ்வொருவரின் மூடநம்பிக்கையும், அவரின் மூளையின்படி நம்பிக்கையே. ஆக, நம் நம்பிக்கை தற்சார்புடையது (Subjective). எனவே தான், பாரபட்சமற்ற வெளிசார்புடைய (Objective) ஆராய்ச்சி (அறிவியல்) தேவைப்படு கின்றது. அதைத் தான், கலிலியோ உட்பட பல அறிஞர்கள் நமக்கு காட்டினர். ஆனால், அதை எப்படி எல்லோருக்கும் நம்ப/புரிய வைப்பது?

எந்த ஒன்றும், பரிணாம வளர்ச்சி அடைய சில முக்கிய அம்சங்கள் உண்டு: (1) அதை சேமிக்க இடம் (Storage); (2) அதை நகல்கள் எடுத்தல் (Genes) இருக்கும்/சேமித்த இடம் DNA; அதன் நகல் எடுத்தலை இனப்பெருக்கம் என்றும் அதன் பிழைகளை மரபு-பிழைகள் என்கின்றோம். பரிணாம வளர்ச்சிக்கு நல்லது கெட்டதெல்லாம் தெரியாது; சூழலுக்கு ஏற்ப தக்கவைகள் பிழைத்து வளர்ச்சி அடையும். பரிணாம வளர்ச்சிக்கு மற்றொரு உதாரணம் மெம்கள் (Memes). மெம் என்பது ஒரு யோசனையைக் (Idea) குறிக்கும். கடவுள், மதம், அறிவியல், ஜாதகம், கலாச்சாரம், ஜாதி... இவை எல்லாம் மெம்கள் தான். இவை இருக்கும்/சேமித்த இடம் மூளை. இவை ஒரு மூளையிலிருந்து மற்றொன்றிக்கு காலகாலமாக மொழி, கலாச்சாரம் மூலம் பரவுகின்றது அல்லது நகல் எடுக்கப்படுகின்றது.

 ஜீன்களைப் போலவே செத்துப்போன மெம்கள் கோடான கோடி. செத்துப்போன கடவுள்களும் கோடான கோடி. இன்று பிழைத்திருக்கும் அனைத்து மெம்களும் ஏதாவது ஒரு வகையில் சூழலுக்கு ஏற்ப வளர்ச்சி அடைந்தவைகளே! அந்த சூழலில், பல மூடநம்பிக்கைகளுக்கு நம் உணர்ச்சிகள் (உணர்ச்சிகள் ஜீன்களின் பரிணாம வளர்ச்சி) முக்கிய காரணிகளாக இருக்கின்றன. மனிதனின் ஆரம்ப கட்டத்தில், அறியாமையும் பய-உணர்ச்சியும் பல மூடநம்பிக்கைகளுக்கு முக்கிய காரணிகளாக இருந்திருக்கலாம். மெம்கள் வளர்ச்சி அடைய தேர்ந்த மொழி மற்றும் கலாச்சாரம் தேவை என்பதாலே, அதைக் கொண்ட மனிதனிடத்தில் மூடநம்பிக்கைகளும், அறிவியல் வளர்ச்சிகளும் காணமுடிகின்றது; மற்ற விலங்குகளில் அவற்றை காண முடிவதில்லை.

பகுத்தறிவு என்பது (Critical Thinking), ஒவ்வொரு விடயத்தையும் சீர்தூக்கி வெளிசார்புடன் (Objective) கற்று, அதற்கு ஏற்ப நம்பிக்கை-நிகழ்தகவுகளை அமைப்பது. ஆனால், அந்த அறிவும் நாம் வளர்ந்த/வாழும் சூழல்களைப் பொருத்தது. முறையான பகுத்தறிவு இல்லாத போது, மூளை எளிதாக ஏமாந்து நம்பிக்கை-நிகழ்தகவுகளை வெளிசார்பு-அறிவுக்கு (Objective-Knowledge) எதிராக அமைப்பதை மூடநம்பிக்கை எனலாம். ஆனால், பகுத்தறிவு என்பது நம் மூளையின் அறிவு-பகுதியைப் மட்டுமே ஏற்பதல்ல, நம் உணர்ச்சி-பகுதியையும் ஏற்பது தான்! மானிட உணர்ச்சி களுக்கு வடிகாலாகவும், சமூதாய வளர்ச்சிக்காகவும் சில விடயங்களை கடைபிடிப்பதும் பகுத்தறிவு தான்! இறந்தவருக்கு அஞ்சலி செலுத்துவதும், நினைவு சின்னங்கள் எழுப்புவதும், பாடுவதும், கொண்டாடுவதும் பகுத்தறிவு தான். பகுத்தறிவு என்பது, நாம் எதை செய்தாலும் அதை புரிந்து கொண்டு செய்கின்றோமா அல்லது குருட்டுத்தனமாக செய்கின்றோமா என்பதில் தான் உள்ளது!

Pin It

உலகின் பழங்கால அறிவியல் மையம்!

 பழங்கால கிரேக்கம் தான் இன்றைய எகிப்து. கிரேக்கம் நைல் நதியின் கொடை என வரலாற்றாளர்களால் வருணிக்கப்படுகிறது. அந்த எகிப்து, ஆப்பிரிக்காவின் வட பகுதியில் உள்ளது. உலகில் மனித நாகரிகம் உருவாகி வளர்ந்த ஆற்றுச் சமவெளிகளில் ஒன்றுதான் இந்த நைல் நதியின் நாகரிக களமான எகிப்து. இங்கே சுமார் 7,000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே வரலாற்றுப் பதிவுகள் கிடைத்துள்ளன. கிரேக்கத்தின் பெரிய நகரும், எகிப்தின் இரண்டாவது பெரிய நகரும் அலேக்சாண்டிரியாதான். இதனை மகா அலெக்சாண்டர் என்ற பேரரசர் கி.மு.337ல் (2,400 ஆண்டுகளுக்கு முன்) நிறுவினார். மத்தியதரைக்கடல் ஓரத்தில் அழகாக அமர்ந்துள்ள அலெக்சாண்டிரியாவின் கடற்கரை 32 கி.மீ நீளமுள்ளது. அன்றைய உலகின் பெரிய நூலகமான அலெக்சாண்டிரியாவும், அலெக்சாண்டிரியா பல்கலைக்கழகமும் இங்குதான் இருந்தன.

அலெக்சாண்டிரியா நூலகம்

alexandria_library_360அலெக்சாண்டிரியா நூலகத்தில் பல்லாயிரக்கணக்கான பாப்பிரஸ் சுருள்களும், ஆட்டுத் தோலில் எழுதப்பட்ட வரலாற்று ஆவணப் பதிவுகள் சுமார், 400,000-700,000 எழுத்துச் சுருள்கள் இங்கே வைக்கப்பட்டுள்ளன. இந்த நூலகத்தில், மாணவர்கள் படிக்க, விவாதிக்க, எழுத, ஆராய்ச்சி செய்ய என சுமார் 5,000 அறைகள் இருந்தன. இந்த நூலகத்தில் மூன்றாவது நூலகராகவும், நிர்வாக இயக்குனராகவும் இருந்தவர்தான் எரடோஸ்தனிஸ் என்ற கிரேக்க விஞ்ஞானி. இந்த அலெக்சாண்டிரியா நூலகம் பண்பாடு மற்றும் அறிவின் கிரீடம் ஆகத் திகழ்ந்தது. இங்கே அறிவுஜீவிகள் சுமார் 700 ஆண்டுக்காலம் அதனை ஆட்சி புரிந்தனர். ஆனால் இந்த அலெக்சாண்டிரியா சுமார் 1600 ஆண்டுகளுக்கு முன் அழிந்து போனது.

கிரேக்கத்தின் விஞ்ஞானி எரடோஸ்தனிஸ்!
 
 பழங்காலத்தில் கிரேக்கம்தான் அறிவியல் உலகில் கொடி கட்டிப் பறந்தது. அங்குதான் உலகின் தலைசிறந்த தத்துவஞானிகளும், அறிஞர்களும் வாழ்ந்தனர். கணிதத்தின் விற்பன்னர்களே, வானவியல் மற்றும் புவியியல் கண்டுபிடிப்புகளை நிகழ்த்தினர். கி.மு. 276 -194களில் வாழ்ந்த எரடோஸ்தனிஸ், சைராகுயூசின் (Syracuse) ஆர்கிமிடீசுக்கு நெருங்கிய நண்பர். ஆனால் எரடோஸ் வசித்தது அலெக்சாண்டிரியா நகரில்தான். இவர் சைரீனில் (Cyrene) பிறந்தார். இப்போது வட ஆப்பிரிக்க லிபியாவில் உள்ள ஷஹட்(Shahhat) தான் அன்றைய சைரீன். கிரேக்க அறிஞர் எரடோஸ் பல்துறை வித்தகர். இவரே கிரேக்கத்தின் மிகப் பெரிய கணித மேதை, அற்புதமான கவிஞர், சிறந்த விளையாட்டு வீரர், முக்கியமான வரலாற்றியலாளர் மற்றும் புவியியல் கண்டுபிடிப்பாளரும் கூட!

நூலகரும் வானவியலாளரும் பல்துறை வித்தகரும் .!

Eratosthenesஎரடோஸ்தனிஸின் பன்முகத்தன்மையால் இவர், பஞ்சாவதானி (Pentathalus) என்று பாராட்டப்பட்டவர். இவரை தத்துவத்தில் இரண்டாவது பிளேட்டோ என்றும், வானவியல் கணிப்பில் தாலஸூக்குப் பிறகு வந்த மிகச் சிறந்த வித்தகர் என்றும் பேசப்பட்டவர். இவருக்கு பீட்டா (Beta) என்ற பட்டப் பெயரும் உண்டு. புவியியல்(Geography) என்ற வார்த்தையை உருவாக்கியவர் இவரே. ஜியோகிரபி என்றால் பூமியைப் பற்றி எழுதப்பட்ட என்று பொருளாகும். உலகில் முதன் முதலில் பூமியின் விட்டத்தையும், சுற்றளவைவும் சரியாக அளந்தவர் எரடோஸ்தனிஸ்தான். அது மட்டுமல்ல பூமியின் அட்சரேகை, தீர்க்கரேகை என்ற முறையைக் கண்டுபிடித்தவரும் எரடோஸ்தனிஸ்தான். புவியியலின் ஒழுங்குமுறை விதிகளை நிர்ணயித்தவரும் இவரே..! ஐம்பதாண்டுகளுக்கும் மேலாக அலெக்சாண்டிரியா நூலகத்தின் நிர்வாக இயக்குநராக இருந்தார்.

சூரிய ஒளியும் நிழலும்= பூமியின் சுற்றளவு!

 எரடோஸ்தனிஸ் கி.மு.276ம் ஆண்டு வட ஆப்பிரிக்காவின் சைரீன் எனற தற்போதைய லிபியாவில் பிறந்தார். அலெக்சாண்டிரியாவில் இலக்கணமும், ஏதென்ஸில் தத்துவமும் பயின்றார். கி.மு 236ல் மூன்றாம் தாலமி எரடோஸ்தனிஸை அலெக்சாண்டிரியா நூலகத்தின் நூலகராக நியமித்தார். அங்கே இவர் கணிதத்திலும், அறிவியலிலும் ஏராளமான முக்கியமான கண்டுபிடிப்புகளைத் தந்தார். சூரியனின் வெப்பமும், அதன் ஒளியால் ஏற்படும் விளைவுகளும் உண்டு என்பதை நாம் அறிவோம். ஒளியின் மூலம் நிழல் உண்டாவதும் நமக்குத் தெரியும். ஆனால் நிழல் வழியாக ஓர் அறிவியல் கண்டுபிடிப்பு நிகழ்த்தி உலகை அசர வைத்தது எரடோஸ்தனிஸ் மட்டுமே..! பூமியின் மேல், சூரிய ஒளியால் உருவாகும் நிழலை வைத்து பூமியின் அனைத்து பரிமாணங்களையும் கண்டறிந்தார்.

வானியல் உற்று நோக்கல் போலவே, புவிக்கோளின் பல்வேறு தகவல்களைக் கணக்கிட்டு, பல அறிவியல் விஷயங்களை அறிந்தது இவரது மகத்தான சாதனையாகும். பூமி தன் அச்சில் சாய்வாக சுற்றுகிறது என்ற உண்மையை முதலில் கண்டறிந்தவரும் எரடோஸ்தனிஸ்தான். அது மட்டுமல்ல, புவியின் சுற்றளவையும், சாய்மானத்தையும் துல்லியமாகச் சொன்னவரும் இவரே. அத்துடன் நம் புவிக்கோளில் நான்கு வருடத்திற்கு ஒரு முறை உருவாகும் லீப் தினத்தையும் கண்டறிந்தார். தனக்குக் கிடைத்த தகவல்களிலிருந்து, உலகின் வரைபடத்தையும் உருவாக்கினார். இதெல்லாம் எரடோஸ்தனிஸின் தலையாய சாதனையாகும். அதனால்தான் இவரை உலகின் நில அளவீட்டாளர்/கணக்காளார்/கணக்காயர் (Surveyor of the world) என்றும், புவியியல் தந்தை (Father of Geography) என்றும், அறிவியல் காலப்பட்டியலின் தந்தை (Father of Scientific Chronology) என்றும் பெருமையுடன் அழைக்கிறார்கள்.

ஏன் சில நாட்களில் நிழல் சாய்வாக..?

சூரியக் கதிர்கள் விளைவால் ஒரு பொருளின் நிழல் பூமி மேல் விழுவதை எரடோஸ்தனிஸ் தொடர்ந்து கவனித்தார். வருடத்தின் ஒரு சில நாட்களில்/நாளில் சூரியக் கதிர் பகலில் உச்சி வேளையில், தலைக்கு மேலே இருப்பதையும், அதனால் ஒரு பொருளின் நிழல் அதன் அடிப்பகுதி/காலடியில் மட்டும் விழுவதையும் கவனித்தார். ஆனால் எல்லா நாட்களும் ஒரு பொருளின் நிழல் அவ்வாறு அதன் அடியில் மட்டுமே நேராக சரியாக விழுவதில்லை. அந்த நிழல் கொஞ்சம் வடக்கு/தெற்கே சாய்வாக இருக்கிறது.

சூரியனின் கதிர்களால் ஏற்படும் நிழல் என்பது, பூமி சுற்றுவதாலும், அது தன் அச்சில் 23.5 பாகை சாய்வாக உள்ளதாலும் உண்டாகிறது. எரடோஸ்தனிஸ் தினம் இடம் மாறும் நிழலைப் பார்த்தது மட்டுமின்றி, அதற்கான காரணமும் தேட ஆரம்பித்தார். எரடோஸ்தனிஸ் சூரியக் கதிர்கள் ஒரு பொருளின் மேல் படுவதால் ஏற்படும் நிழல் தினமும் ஒரே இடத்தில் ஒரே சாய்மானத்தில் இருப்பதில்லை. அந்த நிழலின் சாய்மானத்தையும், தினமும் சூரிய உதயம் என்பது 6 மாதம் வடக்கிலிருந்து தெற்காகவும், அடுத்த 6 மாதம் தெற்கிலிருந்து வடக்காகவும் நகர்ந்து கொண்டே இருக்கிறது என்பதை துல்லியமாக கவனித்தார். அதன் விளைவாக உருவானதுதான் பூமியின் சுற்றளவு எவ்வளவு என்ற வினாவும், அதற்கான விடை தேடுதலும். இதனை சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன் யாரும் நினைத்துப் பார்க்க முடியாத காரியம். அதுவும் இருந்த இடத்தில் இருந்து கொண்டே பூமியின் சுற்றளவை ஆதிகாலத்தில், எந்த அறிவியல் ஆதாரமும் தெளிவாக அறிய முடியாத 2,000 ஆண்டுகளுக்கு முன் ஒருவர் கண்டுபிடிக்கிறார் என்றால், அது எத்தனை வியப்புக்குரிய விஷயம்..! பூமியின் சுற்றளவைக் கண்டறிய, எகிப்தை விட்டு நகராமல், சூரியனால் ஒரு பொருள் மேல் ஏற்படும் நிழலின் சாய்மானத்தை வைத்தே, பூமியின் சுற்றளவை ஒருவர் கண்டறிகிறார் என்றால் அவர் படு கில்லாடிதானே..!

பூமியின் கோள வடிவமும், சுற்றளவும்..!
 
அன்று கோடைகாலத்தின் மிக நீண்ட பகல் தினம் (summer solstice). அப்போது சூரியன் வானில் தலைக்கு மேலே சரியாக பவனி வந்து, வெய்யிலை நம் மேல் கொட்டுகிறது. அன்றைய எகிப்தின் ஸ்வேனெட் (Swenet/Syene) நகரில், இன்று நாம் சொல்லும் கடக ரேகை என்பது அப்போது கிடையாது. ஏனெனில் அந்த அட்ச ரேகையை அன்று யாரும் வரையவில்லை. ஆனால் சூரியன் அப்போது கடக ரேகையின் மேல் இருந்தது. அதுவும் சரியாக சூரியன் தலைக்கு மேல் கொளுத்திக் கொண்டிருந்தது. அப்போது யாராவது குனிந்து ஒரு ஆழமான கிணற்றில் எட்டிப் பார்த்தால், அது அப்போது சூரியனின் பிரதிபலிப்பை மறைத்துவிடும், இந்தத் தகவலை யாரோ தெரிவித்திருந்தனர்.. ஆனால் அவரும்கூட இந்த உண்மையை ஒரு சோதனை மூலம் நிரூபிக்க முயற்சி செய்தார். அவரது சொந்த ஊரான சைநீனுக்குச் சென்றார். அலெக்சாண்டிரியாவில் சூரியனின் சாய்மானம் என்பது, அந்த வட்டத்தில் 50ல் ஒரு பங்கு என தீர்மானித்தார். இது ஒரு வட்டத்தில் 7.12 பாகை என்பதை எரடோஸ் தெரிவித்தார். அதே சமயம், பூமி ஒரு கோளவடிவம் என்று கிரேக்கர்கள் புரிந்து கொண்டனர். அதே கருத்தைத்தான் எரடோஸ்தனிஸும் கொண்டிருந்தார். 

eratosthenes_technique 
 
 அலெக்சாண்டிரியா சைனுக்கு (Syene) வடக்கே இருக்கிறது. எனவே, மெரிடியன் வளைவு (meridian arc) எனபது எவ்வளவு தூரம் எனபதை தூரத்துடன் இணைத்து கணக்கிட்டால், அந்த தூரம் என்பதுதான் புவியின் சுற்றளவு அறிய சரியான அளவுகோலாக அன்று எரஸ்டோஸ்தனிசுக்குப் பயன்பட்டது. ஏனெனில் சூரியனின் கதிர்கள் பூமி மீது இணை கோடுகளாகவே விழுகின்றன. அதன் சாய்மானம் அந்த இடத்தில் 50ல் ஒரு பங்கு என்றும், அதுதான் 1/50=7.2/360 பாகை என்ற கணக்கை படு துல்லியமாகப் போட்டார். அலெக்சாண்டிரியாவுக்கும், சைனீனுக்கும் இடையில் உள்ள தொலைவு என்ன என்று தெரிந்தால் இதற்கு விடை கண்டுபிடித்து விடலாம்.

அலெக்சாண்டிரியாவுக்கும், சைனீனுக்கும் இடையில் உள்ள தொலைவு அறிய சைனீனிலிருந்து அலெக்சாண்டிரியாவுக்கு சில வீரர்களை ஒட்டகத்தின் மீது ஏற்றி அனுப்பினார். இரு ஊர்களுக்கும் இடையிலுள்ள தூரத்தை அறிந்து கொள்ள அவர் எடுத்த ஒட்டக முயற்சிகள் மிகவும் சுவையானவை. அதனால்தான் அன்றைய எரடோஸ்தனிஸின் கணிப்பிலிருந்து பூமியின் சுற்றளவு கொஞ்சமும் தப்பவில்லை. அன்றைய எகிப்திய அலகான ஸ்டேடியன் (stadion) என் ற அலகில்தான் பூமியின் சுற்றளவைக் கணக்கிட்டார். அந்த அலகுப்படி, எரடோஸ்தனிஸ் கணக்கிட்ட புவியின் சுற்றளவு 250,000 ஸ்டேடியா (46,250 கி.மீ.). ஆனால் நிலநடுக்கோட்டில் பூமியின் சுற்றளவு  40,075 கி.மீ. ஸ்டேடியன் அலகில் உள்ள மாறுதகளைக் கணக்கில் கொண்டு, அன்றைக்கு அவர் கண்டுபிடித்த புவியின் சுற்றளவு 39, 690 கி.மீ.என்பதும் தெரிய வந்தது. அதாவது இன்றைய புவியின் சுற்றளவில் சுமார் 2% மட்டும் வித்தியாசம் இருந்தது. இதனை நாம் கணக்கில் கொள்ள வேண்டியதில்லை.

புவி மீது சோதனைகள்..!

எரடோஸ்தனிஸ் பூமியின் சுற்றளவு கண்டுபிடிக்கும் முயற்சி, ஒரே ஒரு சோதனையுடன் நிறைவு பெற்று விடவில்லை. அவரே. வேறு வேறு இடங்களுக்கு ஒட்டகத்தின் மேல் ஆட்களை அமரவைத்து அனுப்பி, அவைகளுக்கு இடையே உள்ள தூரம், சூரியக்கதிரின் சாய்மானம் போன்றவற்றைக்கொண்டு அந்த பகுதியிலும் புவியின் சுற்றளவு என்ன என்பது தெரிந்து கொண்டு, ஏற்கனவே கண்டுபிடித்திருந்த சுற்றளவுடன், மற்ற விடைகள் ஒத்துப் போனதால், முன்பு அலேக்சான்டிரிய-சைநினுக்கு இடையில் கண்டறிந்த பூமியின் சுற்றளவு சரியானதே என்ற முடிவுக்கு வந்தார். பூமியின் சுற்றளவை திரிகோணமிதி கணக்கியல் மூலமே கண்டறிந்தார். பூமியின் விட்டத்தையும் கூட, சுற்றளவு மூலம் கணக்கிட்டுத் தெரிவித்தார்.

புவியியலின் முதல் பதிவும் புத்தகமும்!

அந்த கால கட்டத்தில் எரடோஸ்தனிஸ் எழுதிய புவிவியல் புத்தகம் 3 பெரிய தொகுதிகளாக வெளிவந்தன. நீண்ட காலத்துக்கு அதுவே, புவியியலின் அசைக்க முடியாத ஆதாரமாக இருந்தது. எரடோஸ்தனிஸின் கண்டுபிடிப்பான பூமி சுற்றளவின் அளவு அடுத்த 100 ஆண்டுகளுக்கு எந்த மாற்றமும் இல்லாமல் அப்படியே ஒப்புக்கொள்ளப்பட்டு பின்பற்றப்பட்டது. அதாவது அடுத்த நூறாண்டுக்காலமும் எந்தவித அறிவியல் கண்டுபிடிப்புகளும் பூமியின் சுற்றளவு பற்றி நடக்கவில்லை என்றே சொல்ல வேண்டும். அவருக்குப் பின் 150 ஆண்டுகள் கழித்து வந்த பாசிடோனியஸ் (Posidonius) பூமியின் சுற்றளவை அளக்க எரடோஸ்தனிஸின் செய்முறையையே பயன்படுத்தினார். இரு வேறு இடங்களின் மூலம் சுற்றளவு கணக்கைக் கணக்கிட்டு, முன்பு கணக்கிட்ட 252,000 என்ற ஸ்டேடிய எண்ணிக்கையே வந்தது.

எரடோதனிஸின் மற்ற கண்டுபிடிப்புகள்..!

 எரடோஸ்தனிஸ் பூமியின் சுற்றளவு, விட்டம் கண்டுபிடித்ததுடன் அவரது கண்டுபிடிப்பின் தாகம் தணிந்துவிடவில்லை. அவரது கண்டுபிடிப்புகள் வானவியலிலுக்கும் கூட பெருமை சேர்க்கிறது. பூமியிலிருந்து சந்திரனும், சூரியனும் எவ்வளவு தூரத்தில் இருக்கின்றன என்ற உண்மையைக் கண்டுபிடித்தவர் எரடோஸ்தனிஸ்தான். ஆனால் அவை பூமியின் சுற்றளவு போல் அவ்வளவு துல்லியமாக இல்லை. சூரியக் கதிரின் சாய்மானம், நிழலின் சாய்மானம் இவற்றை வைத்து பூமி சுழலும்போது 23.5 பாகை சாய்மானத்தில் சுழலுகிறது என்பதையும் கூட துல்லியமாகத் தீர்மானித்தார். மேலும் எரடோஸ்தனிஸ் அலெக்சாண்டிரியா நூலகத்தின் பொறுப்பாளாராகவும் இருந்தார். அதனாலும் மக்கள் எரடோஸ்தனிஸ் சொல்வதை ரொம்பவும் நம்பினார்கள். எக்கச்சக்கமான எரடோஸ்தனிஸின் வேலைகள், கண்டுபிடிப்புகள்.அனைத்தும் அலெக்சாண்டிரியா நூலகம் அழிந்த போது அழிந்துவிட்டன. அவரைப் பற்றி மற்ற நூலாசிரியர்கள் எழுதிய தகவல்களை வைத்தே இவையனைத்தும் எழுதப்பட்டுள்ளன.

ஹெர்மஸ் கவிதையும்..லீப் வருடமும்..!

எரடோஸ்தனிஸ்தான் முதன் முதல் பூமியின் உருவத்தை உத்தேசமாகக் கணித்து, அதன் வரைபடத்தை வரைந்து தந்தார். அதன் காலக் கணிப்பையும் பரிணாமக் காலத்தையும் கணக்கிட்டவர் இவர்தான். எரடோஸ்தனிஸுக்கு சரித்திரத்தின் மீது மீளாக் காதல் உண்டு. அதனால்தான் அவற்றை சுவைபட எழுதினார். வானில் வலம் வரும் விண்மீன் படலங்களுக்கும், கிரேக்க புராணங்களுடன் உறவு உண்டாக்கி, அவற்றிற்கிடையே உள்ள இணைப்பை அழகாக சித்தரித்தார். எரடோஸ்தனிஸ் இரவு வானின் விண்மீன்களைப் பட்டியலிட்டார். அன்றைக்கு அவற்றின் எண்ணிக்கை 675 உள்ளது என்றும் தெரிவித்தார். எரடோஸ்தனிஸ் ஹெர்ம்ஸ் Hermes, Erigone and Anterinys or Hesiod (apparently alternative titles)) என்ற அழகிய கவிதை ஒன்றைப் புனைந்தார். அதில் வானவியலின் அடித்தளம் பற்றி அழகாக, கோர்வையாக வடித்திருக்கிறார். அத்துடன், ஒவ்வொரு 4 ஆண்டுக்கு ஒரு முறை லீப் (Leap) வருடம் வருகிறது என்று பாட்டாக படித்தவரும் இவரே. அது மட்டுமின்றி அந்த சமயத்தில் நடைபெற்ற அரசியல் தகவல்களையும் , முக்கிய நிகழ்வுகளையும் குறிப்பிட்டுள்ளார்.

அலெக்சாண்டிரியா நூலகம் & எரடோஸ்தனிஸின் எழுத்துக்கள் அழிவு!

எரடோஸ்தனிஸ் கணிதத்தில் விற்பன்னர். தனது 30 ஆவது வயதில், மூன்றாம் தாலமியால் மீண்டும் அலெக்சாண்டிரியாவுக்கு அழைக்கப்பட்டார். அதுவும் தாலமியின் மகனுக்கு கல்வி புகட்ட வந்த எரடோஸ்தனிசை தாலமி III அலெக்சாண்டிரியா நூலகத்தின் முதன்மை நூலகராக நியமித்தார். அந்த நூலகத்தில் எரடோஸ்தனிஸ் நிலவியலின் அறிவியல் முழுவதையும் பாப்பிரஸ் மற்றும் ஆட்டுத்தோலில் பதிவு செய்து வைத்திருந்தார். பின்னர் அலெக்சாண்டிரியா நூலகம் அழிக்கப்பட்டபோது, ஆயிரக்கணக்கான பாப்பிரஸ் பட்டைச் சுருள்களும், ஆட்டுத்தோல் சுருள் பதிவுகளும் அப்படியே அழிக்கப்பட்டன.

தனது காலத்தில் அரிஸ்ட்டாட்டில் மனித இனத்தை கிரேக்கர்கள் மற்றும் காட்டுமிராண்டிகள் என்று கூறு போட்டதையும் எதிர்த்தவர் எரடோஸ்தனிஸ்.

எரடோஸ்தனிஸின் எண்ணியல்..!

அந்தக்காலத்தின் எண்ணியல் (Number Theory), வடிவியல் (Geometry) மற்றும் எண் கணிதம் (Arithmetic) ஆகியவற்றில் சிறந்து விளங்கினார் எரடோஸ்தனிஸ். இதில் முதன்மை எண்களைக் (Prime Numbers) கண்டுபிடிக்கும் முறையை அறிமுகப் படுத்தியவர் எரடோஸ்தனிஸ்தான். அதனால்தான் அவைகளை நாம் எரடோஸ்தனிஸின் சல்லடை (‘Sieve of Eratosthenes’) என்றே அழைக்கிறோம். இதுவும் கூட நிகோமாக்கஸ் (writings of Nicomachus) என்ற அறிஞரின் எழுத்துக்கள் மூலமே தெரிய வந்துள்ளன.

எளிதான அல்காரிதம்!

Eratosthenes_mathsசல்லடை/சீவ் என்ற சதுர வடிவ கணித சூத்திரம். படம் பார்க்க. இது ஒரு எளிதான அல்காரிதம் (simple algorithm). இது முதன்மை எண்கள் ஒரு குறிப்பிட்ட எண்கள் வரை செயல்பட முடிகிறது. மேலும் ஒரு கோடி வரை துல்லியமாய் அறிய முடிகிறது (The Sieve is a simple algorithm which works to identify all of the prime numbers up to a certain integer and is very accurate up to about 10 மில்லியன். Eratosthenes later erected a column at Alexandria with an epigram inscribed on it relating to his own mechanical solution to the cube problem.) இது 2, 3, 5, 7 போன்றவற்றின் இரட்டிப்பு பதின்மரை (Multiples) விட்டுவிட்டு செயல்படுகிறது. மீதமுள்ள எண்கள் முதன்மை எண்களாகும். இந்த எண் சல்லடை/சீவ் 18 ம் நூற்றாண்டின் லியோன்ஹார்ட் யூலர் (Leonhard Euler) வந்து தன் கருத்துக்களை சொல்லும் வரை நீடித்தது. அதுவே கணிதத் துறையை ஆட்சியும் செய்தது..

வடிவியலின் தந்தை எரடோஸ்தனிஸ்..!

எரடோஸ்தனிஸின் இன்னொரு முக்கிய புத்தகமும் அழிந்து போனது. அதன் பெயர் வழிகளிலே (On means ) -கணித வழிகள் என்பதாகும். இதுதான் வடிவியலின் இன்றியமையாத புத்தகங்களில் ஒன்றாகும். இதனைக் குறிப்பிட்டு, அதன் தகவல்களையும் தந்தவர் பாபஸ் ( Pappus) என்பவர். (another lost book written by Eratosthenes was On means. It is mentioned by Pappus as one of the great books of geometry.)

பூமி-சூரியன் தொலைவினைக் கண்டுபித்த எரடோஸ்..!

திரிகோணமிதியின் சூத்திரம் மற்றும் அப்போது கிடைத்த தகவல்களைக் கொண்டே பூமி-சூரியன் தொலைவினைக் கண்டறிந்தார். அப்போது இன்னொரு முக்கிய விஷயமும் அவருக்குக் கிடைத்தது. சூரியன் வெகு தொலைவில் உள்ளதால்தான் அதன் கதிர்கள் பூமியில் இணைகோடுகளாக (Parallel) வருகின்றன என்பதையும் அனுமானம் செய்தார். அது மட்டுமல்ல பூமி-சூரியனுக்கு இடையில் உள்ள தூரம் 149 மில்லியன் கி.மீ என்றும் தெரிவித்தார். இப்போது அறியப்படும் புவி-சூரிய தொலைவு 149 .5 மில்லியன் கி.மீ தான். அதாவது 1% மட்டுமே வித்தியாசம் இருந்தது. இந்த வித்தியாசம் ஒரு விஷயமே அல்ல. ஆனால் பூமியின் சாய்மானத்தை மிகத் துல்லியமாக 23.5 பாகை என்று கணக்கிட்டார். ஆனால் துரதிருஷ்டவசமாக பூமிக்கும் சந்திரனுக்கும் இடையில் உள்ள தூரம் என அவர் குறிப்பிட்ட 144,000 கி.மீ என்பது மட்டும் தவறாகி விட்டது. இது தற்போதைய தூரத்தை விட மூன்று மடங்கு அதிகம்.

பீட்டா எரடோஸ்தனிஸ்..!

எரடோஸ்தனிஸ் பல்துறை வித்தகராக இருந்தாலும் கூட எந்தத் துறையிலும் அவர் முதன்மையாய் இல்லாததால் அவரை இரண்டாம் நிலைக் குறியீடான பீட்டாவை வைத்து பீட்டா என்றே அழைக்கின்றனர். பீட்டா என்று குறியீட்டுப்பெயரில் இவரைக் கூறியவர் சுதா லெக்சிகான் (Suda Lexicon) மற்றும் அவரது சம காலத்தவருமே. ஆனால் முதன்மை அறிஞர்களை விட எரடோஸ்தனிஸ் மிக மிக முக்கியாமானவர். அவரது கண்டுபிடிப்புகளும், சூத்திரங்களும், கொள்கைகளும் இன்றும் மக்களால் பின்பற்றப்படுகின்றன.

எரடோசின் விமரிசனமும் பிளாட்டோவும்..!
 
 எரடோஸ்தனிஸ் எழுதிய கணித விமர்சனம் மிகவும் முக்கியமானது. அதுவே, பிளாட்டோவின் தத்துவத்திற்கு அடித்தளம் என்றும் சொல்லப்படுகிறது. எரடோஸ்தனிஸின் எழுத்தில் எண்கணிதம் (arithmetic) மற்றும் வடிவியல் (geometry) போன்றவற்றிற்கு கணித அடிப்படை விளக்கங்கள் சொல்லப்பட்டுள்ளன. அவற்றில் ஏராளமான விஷயங்கள் விவாதிக்கப்பட்டன. மேலும், அதில் (கணிதத்தில்) இசையையும் இணைத்தே கூறியுள்ளார் எரடோஸ்தனிஸ். இவற்றை எல்லாம் நாம் ஸ்மியார்னா(Smyrna)வில் வாழ்ந்த தியோனின் பதிவுகள் மூலமே அறிகிறோம்.

கிரேக்க கணிதத்தில் வட்டத்தின் பரப்பு (squaring a circle), கனசதுரத்தின் இரட்டிப்பு (doubling a cube) மற்றும் ஒரு கோணத்தின் முப்பிரிவு (trisecting an angle) போன்ற மூன்று முக்கிய பிரச்சினைகள் இருந்தன. அதில் ஒன்றான கன சதுரத்தின் இரட்டிப்பு என்பதற்கான பிரச்சனையை எரடோஸ்தனிஸ் தீர்த்து வைத்தார் என்று தியோன்(Theon of Smyrna -Theon) மற்றும் ஈடோசியஸ்(Eutocius) தெரிவித்துள்ளனர்.

எரடோசின் முதுமையும் முடிவும்..!
 
எரடோஸ்தனிசுக்கு முதுமை எட்டியதும் பல வகைகளில் சங்கடப்பட்டார். முக்கியமாக 80 வயதாகும்போது அவருக்கு பார்வை இழப்பு ஏற்படுகிறது. அதனால் மிகவும் மனம் நொந்த எரடோஸ்தனிஸ் கண்பார்வை போன பின் மனிதனுக்கு மதிப்பு மரியாதை இல்லை என்றும், அதனால் விரைவில் இறப்பது உசிதம் என்று எண்ணி பல நாட்கள் உண்ணா நோன்பிருந்து பின்னரே உயிர் நீத்தார். இதுதான் இவரது வாழ்வில் வேதனையான ஒரு நிகழ்வாகும். எரடோஸ்தனிசின் உயிர் இந்தப் புவியிலிருந்து பிரிந்த வருடம் கி.மு.192. தன் 84 வது வயதில் இந்த உலகைத் துறந்தார்.

எரடோஸ்தனிசுக்கு பெருமை சேர்க்கும் வகையில், சந்திரனில் உள்ள ஒரு பள்ளத்திற்கு எரடோஸ்தனிஸ் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

- பேரா.சோ.மோகனா (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It