perunchithiranarஆடினை ஆயிரம்! பாடினை ஆயிரம்!
ஆர்ப்புற யாத்தனை விடுதலைப் பாயிரம்!
அசைத்ததா பகைவரை உன்றனின் வாயுரம்?
தமிழா! அடதமிழா - நீ
அழன்றெழு! அரிமா நடையிடு; வினைமுடி!
அதுதான் செந்தமிழ்த் தாயுரம்!

வீசினை கைகளை! விளைத்தனை சொற்களை!
விலக்கினை யா,குல மதமெனும் புற்களை?
விளைத்திட டா,தனித் தமிழெனும் நெற்களை!
தமிழா! அட,தமிழா - நீ
விரைந்தெழு! வரிப்புலி நடையிடு; துணிவொடு!
வீழ்த்திடு வாய்,பகைப் பற்களை!

உன்னுடன் பிறந்தவன் உனையெதிர்க் கின்றான்;
உன்பகைக் கே,செருப் பாய்உழைக் கின்றான்;
உங்களை இரண்டாக்கி ஆரியன் வென்றான்!
தமிழா! அட,தமிழா - நீ
உடன்விழி! களிறென நடையிடு; முனைவொடு!
உயிர்ப்பிலா விடில்,அவன் கொன்றான்!

ஆரியப் பார்ப்பனன் திருந்தினான் என்றே
ஆருனக் குரைத்தனர்? அவன்குணம் ஒன்றே!
அவனுடற் பூநூலும் உரைதரும் நன்றே
தமிழா! அட,தமிழா - நீ
ஆர்த்தெழு! ஏறென நடையிடு! வலிவொடு
அகப்பகை விலக்குக இன்றே!

எத்தனை ஆண்டுகள் புரிந்தனை போரே!
இற்றதா ஆரியப் பார்ப்பனர் வேரே!
இன்னுமுன் கட்டாரிக் குண்டடா கூரே!
தமிழா! அட,தமிழா - நீ
இணைந்தெழு, இடியென முழங்கிடு! நூறிடு!
இலையெனில் தொலைந்ததுன் பேரே!

Pin It