கீற்றில் தேட...

உழுதுபுரட்ட

மலர்ந்துமணக்கும்

மண்வெட்டிவிழ

மார்புமுட்டலெனநெகிழும்

சாணம்

புழுக்கைகளை

உரமாய்பிரசவிக்கும்

குறுவை

சம்பா

தாளடிகளின்

தாய்மடி

வேரோடுபிடுங்கி

வீசப்படுகிறதுவேளாண்மை

முள்வேலி

கல்நடவு

பணஅறுவடை

தாராளமயம்

தந்ததிருவோட்டோடு

உழவன்நிற்கிறான்

நகரத்துதெருவோரத்தில்.