ராஜ ராஜ சோழனின் பெருமை பேசுவோருக்கு பதிலடி தந்து துரை.இளமுருகு எழுதிய நூல் ‘ராஜ ராஜ சோழனின் மறுபக்கம்’. ராஜராஜன் பார்ப்பன மேலாண்மையை உயர்த்திப் பிடித்ததை ஆதாரங்களுடன் விளக்குகிறது. நூலிலிருந்து... ஆகஸ்டு 9 இதழ் தொடர்ச்சி...

கல்வியிலும் வடமொழிக்கே முழு உரிமை, தமிழுக்கு என்று ஒரு கல்விச் சாலை அமைத்ததாகக் கல்வெட்டுச் சான்று கிடையாது. ஆனால் முழுவதும் வடமொழி இலக்கணம், புராணங்கள், சிவ தருமம், சோம சித்தாந்தம், ராமானுச பாடியம், பிரபாகரின் மீமாம்சம், வியாகரணம் ஆகியவற்றை மட்டும் கற்பிக்க வடஆற்காடு கப்பலூர், செங்கற்பட்டு மாவட்டத்தில் ஆணியூர் (ஆனூர்) தென்னாற் காட்டில் இராசஇராச சதுர்வேதி மங்கலம் என்னும் எண்ணாயிரம், இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். எழுதும் கை நோகும், நினைக்க மனம் நோகும். இந்தச் சோழர்கள் பார்ப்பனரை அடக்கி வைத்தவர்கள் என்று முனைவர்கள் சொல்லு கிறார்கள். என்ன கொடுமை இது! படித்தவன் சூது வாது செய்யக் கூடாது என்ற பாரதியின் வாக்கை அவர்கள் மறந்து விட்டனர் போலும்.

கோவில் பணிகளில் குறிப்பாகக் கருவறைப் பணிகளில் பார்ப்பனர்களே அமர்த்தப்பட்டனர். இதை இராச இராச சோழன் காலத்து கல்வெட்டு ஒன்றின் மூலம் நாம் எளிதாக அறியலாம்.

இக்கல்வெட்டு தஞ்சைப் பெருவுடையார் கோவில் விமானத்தின் தெற்குப் பக்கச் சுவரில் காணப்படு கிறது. தமிழ் எழுத்தில் உள்ளது. காலம் 1014 ஸ்ரீராஜராஜன் தஞ்சைப் பெரு உடையார் கோவிலுக்குச் சோழ மண்டலத்திலும் பாண்டிய மண்டலத்திலும் தொண்டை நாடான ஜெயங்கொண்ட சோழமண்டலத் திலுள்ள பிரம்மதேயங்களைச் சேர்ந்தவர்கள் தங்கள் ஊர்களில் நிலம், உறவினர், பொருள் உடையராய்ப் பார்த்து ஸ்ரீபண்டாரம் செய்வதற்கு பிராமணர்களையும் திருபரிசாரகம் (சமையல்) செய்வதற்கு மாணிகளை யும் (திருமணம் ஆகாதவர்கள்) கணக்கு எழுதுவதற்குக் கரணர் களையும் சந்திர சூரியர்கள் உள்ளவரை நியமிக்க அனுப்ப வேண்டும் என்று ஆணைபிறப்பித்ததைச் சுட்டுகிறது. இது குறித்து ஆசிரியர் எழுதுவது இதை இன்னும் தெளிவாக விளக்கும். கருவறை சம்பந்தமான ஊழியஞ் செய்பவர்கள் என்பதால் இதில் குறிப் பிடப் பட்டுள்ள திருப்பரிசாரகர்கள், மாணிகள், பண்டாரிகள் ஆகியோர் “பார்ப்பனர்”களாக நியமிக்கப்பட் டனர். தஞ்சைப் பெருவுடையார் கோவில் உள்பட எல்லாக் கோவில்களும் பார்ப்பனர்களின் கூடாரமே என்பதைத் தெளிவாகப் புரிந்து கொள்ள இந்த ஒரு சான்று போதாதா?

இதை மற்றும் ஒரு கல்வெட்டுடன் ஒப்பிட்டுப் பார்ப்போம். கோவிலுக்குப் பணியாளர்களும் தேவை அல்லவா? கருவறைக்குள் நுழையும் அனுமதி இல்லாத வேலைகளான மெய்க்காவல், ஆடற் பெண்டிர் ஆகி யோருக்கு வேலைக்கு ஆள் எப்படி எடுத்தான்? ஊர் சபையினருக்கும் அதாவது பிரம்மதேயம் அல்லாத மற்ற ஊர்களுக்கும் ஆணை பிறப்பித்துள் ளான். ராஜராஜேச்சுவரம் உடை யார்க்கு சோழ மண்டலத்திலுள்ள பிரம்மதேயங்களிலிருந்தும், ஊர்களி லிருந்தும் மெய்க்காவலர்களை அனுப்ப வேண்டும்.

அதாவது கருவறை தொடர்பான வேலைகளுக்கு பிரம்மதேயத்தில் உள்ள பார்ப்பனர்கள் மட்டும்! மற்ற வேலைகளுக்கு ஊர் சபையினர்! இதுதான் இராசராச சோழனின் இட ஒதுக்கீட்டுக் கொள்கை! இதுதான் பார்ப்பனர்களைக் கட்டுக்குள் வைத்திருப்பது? நல்ல வேடிக்கை.

வெளியீடு: நுண்மை பதிப்பகம்,  48ஏ வடக்கு ஆண்டார் தெரு, திருச்சிராப்பள்ளி-2,

Pin It