periyar maniammaiஅரசியல்

அரசியல் வாழ்வு என்பது அயோக்கியர்களின் வயிற்றுப் பிழைப்பு.

அரசியல் சீர்திருத்தம் என்பது அயோக்கியர்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலை.

கடவுள் அவசியம்

அறிவும், ஆராய்ச்சியும், மன உறுதியும் அற்றவர்க்கே கடவுள் உணர்ச்சி அவசியமாகும். வேஷக்காரர்களுக்கும் வஞ்சகர்களுக்கும் கடவுள் மிக அவசியமாகும். சோம்பேறிகளுக்கும், ஊரார் பிழைப்பில் உண்டு களித்திருப்பவர்களுக்கும் கடவுள் மிக மிக அவசியமாகும்.

ஈ. வெ. ரா.

(குடி அரசு - துணுக்குகள் - 09.11.1930)

Pin It