‘அகில இந்திய பிராமண சம்மேளனம்’ என்பதாகப் பேர் கொண்டு தஞ்சாவூர் ஜில்லாவில் உள்ள ஒரு மூலைக் கிராமத்தில் வக்கீல் பார்ப்பனர், உத்தியோகப் பார்ப்பனர், பஞ்சாங்கப் பார்ப்பனர், காப்பிக்கடைப் பார்ப்பனர், தூதுவப் பார்ப்பனர் ஆகிய பலதிறப்பட்ட சுமார் 100 உருப்படிகள் கூட்டம் கூடி ஒன்று சேர்ந்து “அகில இந்தியப் பிராமண சம்மேளனம்” என்பதாகப் பேர் வைத்துக் கொண்டு, பல தீர்மானங்கள் செய்து, இதை இந்தியாவில் உள்ள இந்துக்கள் என்று சொல்லப்படும் இருபத்தைந்து கோடி மக்களுக்குக் கட்டுப்பட்டதாக கருதும்படி சூழ்ச்சி செய்திருக்கிறார்கள். அங்கு நடந்த தீர்மானங்களையும் மகாநாட்டின் வரவேற்பு அக்கிராசனர் மகாநாட்டின் தலைவர் ஆகியவர்கள் பிரசங்கங்களும் படித்துப் பார்த்தால் உண்மையான கலப்பற்ற பார்ப்பனரல்லாதார்களின் இரத்தம் கொதிக்காமல் இருக்கவே முடியாது.

periyar anna veeramani at marriageஅவ்விருவர் பிரசங்கத்திலும் ஒற்றுமையாகக் காணப்படும் விஷயங்கள் பல இருந்தாலும் அவற்றில் முக்கியமானது, இத் தேசத்தில் இந்துக்களில் பார்ப்பனர்கள் தவிர மற்றவர்கள் எல்லாம் சூத்திரர்கள் என்றும், க்ஷத்திரியரும், வைசியரும் கிடையாது என்றும் பேசியிருக்கிறார்கள். க்ஷத்திரியரும், வைசியரும் இந்நாட்டில் இல்லை என்பதைப் பொறுத்த வரையில் நமக்குச் சந்தோஷமே. நாமும் அப்படித்தான் தீர்மானித்திருக்கிறோம். மற்றபடி யார் யார் தங்களை க்ஷத்திரியர்கள் என்றும், வைசியர்கள் என்றும் எண்ணிக் கொண்டு பார்ப்பனர்களைப் போல் பூணூல் போட்டுக் கொண்டு திரிகிறார்களோ, அவர்கள் பார்ப்பனர்களிடம் போய் கெஞ்சி தங்கள் க்ஷத்திரிய, வைசிய உரிமைகளைக் காப்பாற்றி, பார்ப்பனர்களின் க்ஷத்திரியர் மக்களல்ல என்பதை நிரூபித்துக் கொள்ளட்டும். நமக்கு அதைப்பற்றி கவலையில்லை. ஆனால் பார்ப்பனர்கள் தவிர மற்றவர்கள் சூத்திரர்கள் என்று சொன்னதுதான் நமக்கு மிகுதி ரத்தத் துடிப்பை உண்டாக்குகிறது.

பார்ப்பனர்கள் இந்த நாட்டிற்கு பிழைக்க வந்தவர்கள் என்பதில் யாருக்கும் ஆnக்ஷபணை இருக்காது என்றே நினைக்கிறோம். அவர்கள் ஒரு இழிந்த ஜாதியார் என்பதிலும் யாருக்கும் ஆnக்ஷபணை இருக்க நியாயமில்லை. நமது அகராதிகளிலேயே ஆரியர் என்றால் மிலேச்சர் என்று குறிப்பிடப்பட்டிருப்பதும், அதுவும் அவர்களால் ஒப்புக்கொண்ட அகராதிகளில் காணப்படுவதும், அவர்களது நாகரிகமோ அவர்களால் எழுதி வைத்திருக்கும் வேதம், சாஸ்திரம், ஸ்மிருதி, புராணம் இதுகளால் அவர்கள் தமிழ் மக்களாகிய நமது நாகரிகத்திற்கு எவ்வளவு கீழ்ப்பட்டது என்பதும், அருவருக்கத்தக்கது என்பதும் ஆராய்ச்சி உள்ளவர்களுக்கு நன்றாகத் தெரியும். “அதாவது பார்ப்பன ஸ்திரீகள் விபசாரம் செய்து விட்டால், கர்ப்பம் தரிக்காமலிருந்தால் வீட்டிற்கு தூரம் ஆனவுடன் அந்த தோஷம் தீர்ந்து விடுகிறது” என்று பராசர ஸ்மிருதி பிராயச் சித்த காண்டம் 4 - வது அத்தியாயம் 2-வது சுலோகத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. அதே சுலோகத்திற்கு விரிவுரை எழுதுகையில் “பிராமண ஸ்திரீ சூத்திரனைப் புணர்ந்து விட்டால் மாத்திரம் பிராயச்சித்தம் செய்ய வேண்டும் என்றும், அதுவும் தினமும் ஒரு கவள அன்னம் வீதம் 15 நாளைக்கு குறைத்துக் கொண்டு வந்து 16 - ம் நாள் முதல் தினம் ஒரு கவளம் அன்னம் வீதம் உயர்த்திக் கொண்டு வந்து விட்டால் போதுமானது” என்று இருக்கிறது. இதுதான் பிராமண ஸ்திரீகளின் விபசாரத்திற்குப் பிராயச்சித்தம். மற்றபடி கர்ப்பம் தரித்து விட்டால் மாத்திரம் மிகவும் தோஷமானதென்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதே ஸ்மிருதி பிராயச்சித்த காண்டம் ஏழாவது அத்தியாயம் 23 - வது சுலோகத்தில் “பூமியானது எப்படியோ அப்படியே ஸ்திரீகளுமாகையால் அவர்கள் தூஷிக்கத்தக்கவர்கள் அல்லகள்” என்று குறிக்கப்பட்டிருக்கிறது. இதன் விரிவுரையில் பூமியை யார் தொட்டாலும் உபயோகப்படுத்தினாலும் எப்படிச் சுத்திச் செய்வதன் மூலம் அங்கீகரிக்கப்பட்டிருக்கிறதோ அப்படியே ஸ்திரீகளும் சண்டாள சங்கமம் செய்த ஸ்திரீகளும் பிராயச்சித்தம் செய்து அங்கீகரித்துக் கொள்ளலாம் என்று எழுதியிருக்கிறது.

அன்றியும் “எருமை, கழுதை, ஒட்டகம் இவைகளையும் புணரும் பிராமணன் ஒரு நாள் உபவாசம் இருப்பதால் சுத்தனாகிறான்” என்று அதே ஸ்மிருதி அதே அத்தியாயம் 14-வது சுலோகத்தில் சொல்லியிருக்கிறது. இது போலவே தனது தாயையும், குமாரத்தியையும், சகோதரி முதலியவர்களையும் புணரும்படியானதிலும் அறிந்தும் அறியாமலும் நிலையாகவும் நடந்து கொள்ளும் விஷயத்திலும் பிராயச்சித்தங்கள் சொல்லியிருக்கிறது. இப்பிராயச்சித்தங்களில் பெரும்பாலும் பிராமணருக்குக் கொடுக்க வேண்டியதும், பட்டினி முதலியதுகள் இருக்க வேண்டியதுமான சாதாரண பிராயச்சித்தங்களேதான். இன்னும் அதுகளில் உள்ள ஆபாசங்கள் அநேகம். இவற்றை நாம் எடுத்துச் சொன்னதன் கருத்து என்னவென்றால் எப்படிப்பட்ட யோக்கியர்கள் நம்மை சூத்திரர்கள் - அதாவது பார்ப்பனர்களுடைய வைப்பாட்டி மக்கள், பார்ப்பனர்க்குத் தொண்டு செய்ய கடவுளால் பிறப்பிக்கப்பட்டவர்கள் என்று சொல்லுகிறார்கள் என்பதைக் காட்டவும் நமது ராஜரீகங்களுக்கும் அவர்களது நாகரீகங்களுக்கும் உள்ள வித்தியாசத்தைக் காட்டி யார் உயர்ந்தவர்கள், யார் தாழ்ந்தவர்கள் என்பதைக் காட்டவுமேதான் எடுத்துக் காட்டியிருக்கிறோம்.

தற்காலம் நமது நாட்டில் உள்ள மக்களின் உணர்ச்சியும், அதனால் ஏற்பட்டிருக்கும் உணர்ச்சியையும் நன்றாகப் பார்த்துக் கொண்டிருக்கிற பார்ப்பனர்கள் “பார்ப்பன மகாநாடு” கூட்டி “நாம் பிராமணர்கள்தான், மற்றவர்கள் நமது வைப்பாட்டி மக்கள்தான், சண்டாளர்கள்தான்” என்பதாக தீர்மானம் செய்திருப்பதாக வெளிப்படுத்துவர்களானால் அவர்களின் தைரியத்தையும் அயோக்கியத்தனத்தையும் என்னவென்று சொல்வது? இன்னமும் அம்மகாநாட்டில் தீர்மானித்து இருக்கும் தீர்மானப் பிரகாரம் ஒவ்வொரு கிராமத்திலும் பார்ப்பனீய சபைகளும் பிரசாரங்களும் நடைபெற வேண்டும் என்றும், பார்ப்பனரல்லாதார் கோரும் சீர்திருத்தங்களை யெல்லாம் கண்டித்தும் தீர்மானங்கள் செய்யப்பட்டிருப்பதுடன் மகாத்மாவின் சமூகத் திருத்தக் கொள்கைகளையும் கண்டித்துப் பேசப்பட்டிருக்கிறது.

இந்தக் கூட்டத்திற்கு அரசாங்க உத்தியோகஸ்தர்களும், நீதி நிர்வாக இலாக்காக்களின் தீர்ப்பு சொல்லக்கூடிய அதிகாரிகளும் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என்றால் நமது சுயமரியாதையைப் பொறுத்த அல்லது சுயமரியாதை விஷயம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் இவர்களுடைய தீர்ப்புகளில் எப்படியிருக்கும் என்று சொல்லவும் வேண்டுமா? என்று கேழ்க்கிறோம். இந்தக் கூட்டத்தார்தானே அரசியலிலும் நமக்கு சுயராஜ்ஜியம் வாங்கிக் கொடுக்கிறவர்களாக இருக்கிறார்கள். இவர்கள் வாங்கிக் கொடுக்கும் சுயராஜ்ஜியமும் நமது பெண்கள் மலையாளம் போல் அவர்களுக்கு வைப்பாட்டிகளாய் இருக்கத்தானே அல்லாமல் வேறு என்ன விதமான சுயராஜ்ஜியம் இவர்களால் வரக்கூடும் என்பது நமக்கு விளங்கவில்லை. மகாத்மா கேழ்க்கும் சுயராஜ்ஜியமே இந்தப் பார்ப்பனர்களுக்கு தேசத் துரோகமாய், பார்ப்பனத் துரோகமாய், இந்து மத துவேஷமாய் போய் விட்டது. இப்படியிருக்க நம்மவர்கள் இதைப்பற்றி ஒரு சிறிதும் கவலைப்படாமல் இனியும் வயிற்றுப் பிழைப்புச் சண்டையே அதாவது பார்ப்பனர் கோரும் சுயராஜ்ஜியச் சண்டையே பலமாகக் கிளப்பி விட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்தப் பாழும் சுயராஜ்ஜியத்தினால் யாருக்கும் என்ன பலன் கிடைக்கப் போகிறது என்பது இன்னமும் பாமர மக்கள் அறியாததே நமது நாட்டின் துர் அதிஷ்டமாய் இருக்கிறது. அறிந்திருந்தால் இந்தப் பார்ப்பன சம்மேளனக் கொடுமை இன்னும் நமது நாட்டில் உயிர் வைத்துக் கொண்டிருக்க நியாயமே இல்லை. ஆதலால், பார்ப்பனரல்லாத மக்களே! இந்தப் பார்ப்பனக் கொடுமையில் இருந்தும் அவர்களது வைப்பாட்டி மக்கள் என்கிற இழிகையில் இருந்தும் தப்ப என்ன ஏற்பாடுகள் செய்யப் போகிறீர்கள்? கிராமங்கள் தோறும் சுயமரியாதைச் சங்கங்கள் ஏற்படுத்தி, பார்ப்பனக் கொடுமையை ஒழிப்பது தவிர நமக்கு வேறு கதி இல்லை. சுயராஜ்ஜியப் பேச்சு பேசிக் கொண்டு பார்ப்பனர்கள் காலுக்கு முத்தமிட்டு தேசத்தின் பெயரால் பிழைப்பவர்கள் பிழைக்கட்டும். சுயமரியாதையில் கவலையுள்ளவர்கள் இந்த வேலை பார்த்தால் போதும்.

(குடி அரசு - துணைத் தலையங்கம் - 19.06.1927)

Pin It