குருதி கலந்த நீரைத்தான்
குடிக்க வேண்டியிருக்கிறது
இரத்தம் தோய்ந்த உடைகளைத்தான்
உடுத்த வேண்டியிருக்கிறது
ஈழத்து தாய்மார்களின் கண்ணீரில்தான்
குளிக்க வேண்டியிருக்கிறது
இரத்த வாடையை முகர்ந்து கொண்டே
உண்ண வேண்டியிருக்கிறது
போரில் இறந்து போனவர்களின்
கல்லறை அருகே
உறங்க வேண்டியிருக்கிறது
யுத்தத்தில் கண்களை இழந்த
தமிழர்களின் முகங்கள்
கண்ணை விட்டு அகல மறுக்கிறது
ஈழத்தமிழர்களின் கனவுகள்
புதைக்கப்பட்டு
முள்வேலிக்குள் முடங்கிக் கிடக்கிறது
தமிழினத்தை வேரறுக்க முயலும்
கூட்டத்தை
ஒன்றும் செய்யாமல்
உலகம் கைகட்டி வேடிக்கைப்
பார்க்கிறது
அடிபட்ட பாம்பு தான்
படமெடுக்கிறது
ஒடுக்கப்பட்ட இனம் தான்
விஸ்வரூபம் எடுக்கிறது
நாளை நமது நாளாகும்
என்ற நம்பிக்கை
இன்னும் எம்மிடையே
இருக்கிறது.

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.