தேவையான பொருட்கள்:

உளுத்தம்பருப்பு - 200 கிராம்
பச்சைமிளகாய் - 8
மிளகு - ஒரு தேக்கரண்டி
இஞ்சி - ஒரு துண்டு
சீரகம் - அரைத்தேக்கரண்டி
தேங்காய் - 5 கீற்றுகள்
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

உளுத்தம்பருப்பை இரண்டுமணி நேரம் நீரில் ஊற வைத்து சுத்தம் செய்து நீரை வடித்துக் கொள்ள வேண்டும். தேங்காய் கீற்றினை சிறு சிறு பற்களாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பின் உளுத்தம்பருப்புடன் இரண்டு பச்சைமிளகாய் உப்பு சேர்த்து வெண்ணெய் போல் அரைத்துக் கொள்ள வேண்டும். பச்சைமிளகாய், இஞ்சியைப் பொடியாக நறுக்கி மாவில் போட்டு இதனுடன் மிளகு, சீரகம், தேங்காய் சேர்த்து கலந்து கொண்டு, எண்ணெய் காய்ந்ததும், எலுமிச்சம்பழ அளவு உருண்டைகளாக உருட்டிப் போடவேண்டும். கண்கரண்டியினால் அடிக்கடி புரட்டிவிட்டு, பொன்னிறமாக வெந்ததும் எண்ணெய் வடியவிட்டு எடுத்தால் போண்டா ரெடி.

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.