தேவையான பொருட்கள்:

மைதா மாவு - 100 கிராம்
ரவை - 50 கிராம்
புளி - 10 கிராம்
மிளகாய் - 6
வெல்லம் - 10 கிராம்
தனியா - ஒரு தேக்கரண்டி
சீரகம் - அரைத்தேக்கரண்டி
மசாலாத்தூள் - அரைத்தேக்கரண்டி
புதினா சிறிது
எண்ணெய் - 250 கிராம்
உப்பு தேவையான அளவு

செய்முறை:

மைதா மாவு, ரவை அதற்குத் தேவையான உப்பு மூன்றையும் வாயகன்ற பாத்திரத்தில் போட்டு ஒரு மேசைக்கரண்டி எண்ணெயை விட்டு தண்ணீர் தேவையான அளவு விட்டு பூரிமாவு போல் பிசைந்துக் கொள்ள வேண்டும். ஒரு மணி நேரத்திற்குப் பிறகு பிசைந்த மாவை ஒரளவு பெரிய உருண்டைகளாகச் செய்ய வேண்டும். பெரிய அப்பளமாகச் செய்து கொள்ள வேண்டும். ஏதாவது டப்பாவின் அடிப்பாகம் கூராகவுள்ள மூடியை ஏடுத்து அதை அப்பளத்தின் மீது வைத்து அழுத்திச் சிறு பூரிகளாக ஏடுத்து கொள்ள வேண்டும். வாணலியில் சுத்தமான எண்ணெய் விட்டு காய்ந்ததும் பூரியைப் போட்டுப் பொரிக்க வேண்டும். பூரி நன்றாக உப்பி வரும்போது, அதனை எடுத்து டப்பாவில் போட்டு மூட வேண்டும்.

ஒரு பாத்திரத்தில் புளி, உப்பு, வெல்லம் ஆகியவற்றைப் போட்டு அரை லிட்டர் தண்ணீர் விட வேண்டும். மிளகாய், தனியா, சீரகம் ஆகியவற்றைப் பொடி செய்து கொள்ள வேண்டும். மசாலா பொடியையும் போட்டு, புதினாவை அரைத்து அதன் சாறைப் பிழிந்து எல்லாவற்றையும் நன்றாகக் கலக்க வேண்டும். பூரியின் மத்தியில் விரலால் ஒட்டை செய்து புளித்த நீரை மொண்டு இரண்டையும் சேர்த்துச் சாப்பிட வேண்டும்.

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.