தேவையான பொருட்கள்:

புழுங்கல் அரிசி - 1 டம்ளர்
பச்சரிசி - ஒன்றரை டம்ளர்
வெந்தயம் - 1 தேக்கரண்டி
தேங்காய் துருவல் - அரை டம்ளர்
ஆப்ப சோடா - 1/2 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - 1 கைப்பிடி
சின்ன ஜவ்வரிசி - 1 தேக்கரண்டி
வெல்லம் - 1/4 கிலோ
உப்பு - ஒரு சிட்டிகை
எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

புழுங்கல் அரிசி, பச்சரிசி, உளுத்தம் பருப்பு, சின்ன ஜவ்வரிசி, வெந்தயம் அனைத்தையும் ஒன்றாக 2 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பிறகு கிரைண்டரில் போட்டு, தேங்காய் துருவலையும் சேர்த்து நைசாக அரைக்க வேண்டும். மாவை எடுக்கு முன் வெல்லம் சேர்த்து அரைத்து எடுக்க வேண்டும். உப்பு சேர்த்து கரைத்து 8 மணி நேரம் புளிக்க விட வேண்டும்.

அதன்பின்பு ஆப்ப சோடா சேர்த்து கரைத்து வைக்க வேண்டும். அரை மணி நேரம் கழித்து, ஆப்ப சட்டியில் மாவை ஊற்றி, சட்டியை சுழற்றி, மாவை பரப்பி, மூடி வேக விட்டு எடுக்க வேண்டும்.

Pin It