தேவையான பொருட்கள்:

கடலை மாவு - 1 கோப்பை
சர்க்கரை - இரண்டரை கோப்பை
நெய் - 2 கோப்பை 

செய்முறை:

கடலை மாவை லேசாக வறுத்துக் கொள்ள வேண்டும். நெய்யை அடுப்பில் வைத்து சுட வைத்துக் கொள்ள வேண்டும். சர்க்கரையை கால் டம்பளர் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்துப் பாகு வைக்க வேண்டும். கம்பிப் பாகு வந்ததும் பாகில் சிறிது சிறிதாக மாவு சேர்த்துக் கிளற வேண்டும். அடுப்பை மிதமான சூட்டில் வைத்து, நெய் சேர்த்துக் கிளற வேண்டும். நெய்யும், மாவும் மாறி மாறி சேர்த்துக் கிளற வேண்டும். இது பொங்கி பூத்து வரும்போது, நெய் தடவிய தட்டில் கொட்டிச் சமப்படுத்த வேண்டும். ஆறிய பிறகு துண்டுகள் போட வேண்டும்.

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.