தொடர்புடைய படைப்புகள்

'தமிழன்' என்று சொல்லாதே, இந்தியன் என்று சொல், பாரதமாதாவுக்கு ஜே! ஜெய்ஹிந்த் என்று இல்லாத 'தேசிய இனத்திற்கு' வந்தனம் செய்தே பழகிய வழமையான தமிழ் திரைப்படங்களுக்கு மத்தியில் 'இந்தியாவில் தமிழனுக்கு மரியாதை இல்லை' என்கிற உண்மையை வெளிக்காட்டிய இயக்குனர் ஏ.ஆர்.முருகதாசுக்கு முதலில் எனது நன்றி கலந்த வணக்கம். உலக அரங்கில் தமிழ்த் தேசிய இனம் கேட்பாரற்ற (எவ்வளவு அடித்தாலும் தாங்குகின்ற) ஒரு இனம் என்கிற அடையாளத்துடன் தான் இருக்கிறது. தனக்கென்று ஒரு இறைமை பொருந்திய அரசு இல்லையென்றாலும் கூட குறைந்தபட்சம் மொழி வழி மாநில உரிமையைக்கூட பயன்படுத்திக் கொள்ள முடியாத வண்ணம்தான் தமிழ்ச் சமூகம் இருக்கிறது. தன் வரலாறு தெரியாமலும், வரலாறு குறித்த பார்வையும் இல்லாத இன்றைய நவநாகரிக தமிழ் இளைஞனின் ஆறாவது அறிவை முடுக்கிவிடும் பண்யினை 'ஏழாம் அறிவு' செய்திருக்கிறது.

'நாகரிகம்' என்கிற சொல் 'நாகர்கள்' என்கிற தொல்குடிகளின் வாழ்வியல் முறைகளிலிருந்து உருவானது. 'நாகரிகம்' (நாகர்+இயம்) பிறப்பதற்குக் காரணம் இந்த துணைக்கண்டம் முழுவதும் இருந்த தொல் தமிழ் நாகர்குடிகளே. நாகர்கோயில், நாகப்பட்டினம், நாக்பூர், நாகாலாந்து என இன்று வழக்கிலிருக்கும் இவ்வூர் பெயர்கள் அனைத்தும் தமிழனின் தொன்மை வரலாற்றையும், ஆண்ட நிலப்பரப்பையும் உலகிற்கு பறைசாட்டும் அடையாளங்களாக இருக்கின்றன. உடைமை சமூக அமைப்பை ஏற்றுக் கொண்டும், ஏற்றத் தாழ்வுகளை அங்கீகரித்துக் கொண்டும் விஞ்ஞான கண்டுபிடிப்புகளையும் தத்துவங்களையும் ஐரோப்பா உலகிற்கு வழங்கிக் கொண்டிருந்த பொழுது, 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்று மானுட விடுதலை குறித்து குரல் கொடுத்தவன் நமது வள்ளுவன். தமிழனின் பழங்காலக் கட்டிடங்கள் பலவும், தமிழனின் இயற் கணித அறிவை விளக்கும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளன.

இத்தகைய வரலாற்று பாரம்பரியம் உடைய தமிழ் இளைஞர்கள் இன்று பார்ப்பனியமயமாக்கலுக்கும், உலகமயமாக்கலுக்கும் ஏற்ற பண்டமாக மாறி வரும் அபாயத்தை நாம் உணர வேண்டும். ஒரு பண்டத்திற்கு இன உணர்ச்சி வராது; வரவும் கூடாது. இதுதான், வல்லாதிக்க சிந்தனை கொண்ட இந்தியா போன்ற நாடுகளின் விருப்பம். இப்படி ஒரு சூழலில், 'ஒன்பது நாடுகள் சேர்ந்து செய்தது துரோகம். தமிழனின் வீரம் என்றும் மறையாது' என்று கதாநாகன் பேசும் வசனம் இந்திய நடுவண் அரசுக்கும், சிங்கள இனவெறிக்கும் கிடைத்த பதிலடி. சீன விஞ்ஞானியை வில்லனாகவும், சீன அரசை மானுட விடுதலைக்கு எதிராகவும் இப்படத்தில் சித்தரித்திருக்கிறார் இயக்குனர். ஈழப்போரில் சீனா செய்த துரோகத்தை முருகதாசு பதிவு செய்கிறார். அதோடு மட்டுமில்லாமல் சீனா தொடுக்கும் Bio-Warக்கு Operation Red! என்று பெயர் வைத்திருக்கிறார். இதன் மூலம் ஈழப்போரில் தமிழர்களுக்கு எதிராக நடந்து கொண்ட கம்யூனிச நாடுகளையும் மறைமுகமாக சாடுகிறார். வல்லாதிக்கம் என்றாலே அமெரிக்காவை மட்டும் சாடுகிற மனநிலையை உடைத்தெறித்து சீனாவை முதன்மைபடுத்தியிருக்கிறார். 'எல்லோரும் சேர்ந்து (இந்தியா உட்பட) எம்மக்களை கொன்னுட்டிங்களேடா?' என்று கோபப்படுகிறான் ஏ.ஆர்.முருகதாசு என்னும் தமிழ் கலைஞன். சரி, இனிமேல்தான் ஏ.ஆர்.முருகதாசுடன் சில கருத்துகளை விவாதிக்க வேண்டியுள்ளது.

கதைப்படி 1600 வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த 'போதிதர்மனின்' மரபணு மூலக்கூறுகள், இன்றைய காலகட்டத்தில் அவருடைய பரம்பரையைச் சேர்ந்த சூர்யாவுக்குப் பொருந்துகிறது. இன்றைய உயிர்-தொழில்நுட்ப (Bio-Technology) அறிவின்படி, போதிதர்மனின் மரபணு மூலக்கூறுகளை வைத்து, இன்னோரு போதிதர்மனையே செய்து விடலாம். அதற்கு இன்னொரு சூர்யா தேவையில்லை. மேலும், மரபபியல் மருத்துவம் என்கிற படிப்பின் படி கருவிலிருக்கும் குழந்தையின் குரோமோசோம்களை நன்கு ஆராய்ந்து அதற்கு வரப்போகும் பரம்பரை நோய்களை உடனே களைந்து விட முடியும். அதற்காக பல கோடி செலவில் (Human Geneme Project) என்கிற ஆராய்ச்சியை உலக நாடுகள் நடத்தி வருகின்றன. உயிரின் அடிப்படை வேதிப்பொருட்களாக A T G C(அடினைன், தையமின், குவானைன், சைட்டாசின்)ல் பொதிந்து இருக்கும் செய்திகளை வாசிப்பதுதான் அந்த ஆராய்ச்சியின் நோக்கம். சரி இப்போது, '7-ம் அறிவு' போத்தர்மனுக்கு வருவோம். இப்படத்தில், அறிவியலுக்கு முரணாக சில கருத்துக்ள் பதிவு செய்யப்பட்டுள்ளன. போதிதர்மனுக்கு அதீத சக்தி இருப்பதாகவும், அதற்குக் காரணம் அவனுடைய மரபணு என்றும் சொல்லப்படுகிறது. அதன்பிறகு, போதிதர்மருடைய பரம்பரையைச் சேர்ந்த சூர்யாவுக்கும் மரபணுவில் அத்தகைய சிறப்பு இருப்பதாகவும், அதனால், அவர் இரண்டாவது போதிதர்மனாக மாறுகிறார் என்கிற செய்தியோடு படம் நிறைவடைகிறது.

உலகின் முதன் முதலில் தோன்றிய ஆர்கியபாகட்ரீயாவிலிருந்து (Arche Bacteria) பரிணாம வளர்ச்சியின்படி உருவான மனிதன் வரை மரபணு அமைப்புகளால் அதிகமாக மற்றும் குறைவான அளவில் ஒத்ததன்மை இருக்கிறது என்பது அறிவியல் உண்மை. ஆனால், குறிப்பிட்ட ஒரு மனிதனுக்கும், அவனுடைய குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே வீரமும், விவேகமும் உரித்தானது என்கிற கருத்து அறிவியலுக்கு முரணானது. ஏற்கனவே, தனிமனித துதி, சாதிய மேலாதிக்க உணர்வில் வாழ்ந்து பழகிப் போன நம் தமிழர்களின் முன்னேற்றத்திற்கு இது பின்னடைவைத் தரும். அடுத்தப்படியாக, படத்தில் விமர்சனத்திற்குள்ளான வசனம் இடஒதுக்கீடு தொடர்பானது. இட ஒதுக்கீட்டினால்தான் தமிழன் இன்னும் முன்னேறவில்லை என்று ஏ.ஆர்.முருகதாசு கருதுகிறார். தமிழகத்தில் பெரியாரைப் படிக்காததன் விளைவு, முருகதாசு போன்ற தமிழ் உணர்வாளர்கள் 'அன்னா அசாரே' ஆதரவாளர்களாகிப் போனார்கள்.

இடஒதுக்கீடு என்பது அரசியமைப்புச் சட்டம் மக்களுக்கு வழங்கிய சலுகை அல்ல. சாதி மற்றும் மதத்தால் வேறுபட்டு இருக்கும் இம்மக்களுக்கு சரியான முறையில் அதிகாரத்தை வழங்க உருவாக்கப்பட்ட நிர்வாக முறையே இடஒதுக்கீடு. உலகம் முழுவதும் இடஒதுக்கீடு அந்தந்த நாட்டின் மக்களின் தன்மைக்கேற்ப வழங்கப்பட்டு வருகிறது. நாட்டின் வளர்ச்சிக்கு உதவும் நிர்வாக முறையான இடஒதுக்கீட்டை ஊழலுக்கு இணையாக முருகதாசு கருதுவது மிகவும் வேதனையாக இருக்கிறது. இந்திய அரசியலமைப்புச் சட்டம் Article.25 என்ன சொல்கிறதென்றால் “Forbids Class Legislation, but does not forbid classification”. இதன் உண்மையான பொருளை நீங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். சமத்துவமற்ற சமூகத்தில் அதிகாரப் பகிர்வினை மட்டுமே சமமாக வழங்குதல் என்பது சமூக அநீதி என்பதை உங்களைப் போன்ற தமிழ் உணர்வாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

பாலச்சந்தர், மணிரத்னம், கமலஹாசன், சங்கர் வகையறாக்கள் இட ஒதுக்கீட்டிற்கு எதிரான திரைப்படங்களை எடுப்பது வழமையான ஒன்று. திட்டமிட்டு அவர்கள் செய்யும் வேலை என்பது நமக்குத் தெரியும். ஆனால் உங்களைப் போன்ற உணர்வாளரை என்னால் அவர்களைப் போல்(அவாளைப் போல்) நினைந்து ஒதுக்க முடியவில்லை. சரியான தமிழ் உணர்விற்கும், அடிப்படைவாத சிந்தனைக்கும் நடுவில் நீங்கள் நின்று கொண்டிருக்கிறீர்கள். ஏனென்றால் “இனமாற்றம், மொழிமாற்றம், மதமாற்றம்” இது மூன்றும் கூடாது என்கிற அறிவுரையுடன் உங்கள் படம் நிறைவடைகிறது. “பழையன கழிதலும், புதியன புகுதலும்” என்று மார்க்ஸ் பிறப்பதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே “மாற்றத்தை” வரவேற்றவன் தமிழன். ஆனால் நீங்களோ மதமாற்றம் உட்பட எந்த மாற்றத்தையும் ஏற்க மறுக்கிறீர்கள். மாற்றத்தை ஏற்க மறுக்கும் உங்கள் போக்கு இயங்கியலுக்கு எதிராகவும், மனுதர்மத்திற்கு ஆதரவாகவும் மாறுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. ஏனெனில் ஆதித் தமிழனுக்கு 'மதம்' என்பதே கிடையாது.

தமிழனின் வளர்ச்சிக்கு மதமும், சாதியும் தான் தடை என்று சொல்ல வேண்டிய நீங்கள் 'மதமாற்றம்' கூடாது என்று சொல்வது இந்துத்துவா பிரச்சாரத்திற்கு வலு சேர்க்கும். பெரியாரியவாதிகள் உங்களை அணுக வேண்டியதன் அவசியத்தை உங்களது படம் எங்களுக்கு உணர்த்துகிறது. சிங்களனுக்கு உங்கள் படம் தொந்தரவு செய்திருக்கிறது. அப்படியானால், தமிழர்கள் தோள் கொடுத்து தூக்கப்பட வேண்டியவர் நீங்கள் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை. தமிழனின் இழிநிலைக்குக் காரணம் சாதியும், அதனைத் தாங்கி நிற்கும் 'இந்துத்துவ' சிந்தனையும் என்பதை நீங்கள் உணர வேண்டும். பெரியாரியத்தையும், அம்பேத்கரியத்தையும் படிப்பதன் மூலமும், நடைமுறைப்படுத்துவதன் வாயிலாக மட்டுமே, நீங்கள் விரும்பும் 'இன எழுச்சி' இம்மண்ணில் சாத்தியம். இல்லாவிடில் கொடுங்கோலன் இட்லரின் ஆசான் மனுதர்மப்பிரியன் நியேட்சே (அதிமனிதன் கோட்பாட்டை கற்பித்தவன்) தனக்கு இருப்பதாக கூறிக்கொண்ட '7ம் அறிவாகவே' உங்கள் கருத்து மாறிவிடக்கூடிய அபாயம் இருக்கிறது. ஏ.ஆர்.முருகதாசு அவர்களே தமிழனின் இன்னும் தொன்மையான வரலாற்றைத் தேடி பயணம் செய்யுங்கள். சாதி ஒழித்த போதிதர்மன்கள் பலபேர் உங்களுக்குக் கிடைப்பார்கள்.

உங்கள் பயணம் சிறக்க வாழ்த்துக்கள்!

- ஜீவசகாப்தன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Comments

11 comments

11
Morthekai
Yes, I too want to say these things to Murugadoss. Thanks Jeevasahapthan.
karuppasamy
Jeeva,

I watched the movie '7th Sense' . I think, we need to appreciate Murugadas's effort as a director of tamil film.
I have only seen hero ruling the entire film. In the second part Surya does not speak for 20 to 25 mins. That is where i liked murugadas.

I didn't like the way the trailer was formed in medias.

Since there were high expectation on that film, he could not satisfy all type of audiences.

I also read viewer comments/articles on various websites. Most of them were against the film's story only.

I think, you have reviewed it very well. good one on keetru again.
Thanks,
Karuppasamy
kavitha.R
hai jeev! excellant presentation. Ofcourse I too felt to shout and cry when surya said a diff. between veeram and throgam, and the vasanam as u mentioned in ur critics. I claped in the theatre itself without bothering about the audience loudly. Yes I can do that only with lot of tears. Truly telling I loved that portion only.
karthik
I think murugadas did a great job. this is a film not a mega serial. he can not coverup all the things in one film. we should not think that he support religion and caste only because he made a story between india and china. There are only few ppl are taking film with concept every thing else is only masala and idiotic heroism. We should appreciate him for taking this chanlleging work andcreated a mark in that.
Madhan
I Am A Murugadas Fan...I think Appreciate For The Rammana,,Then
7 Am Arivu & Next Vijay Film All The Best For Murugadas
ஆறுமுகம்
கீற்றில் வெளியான ஒரு ஒருதலை யான விமர்சனத்திற்க்கு இந்த கட்டுரை திரைப்படமாக ஏழாம் அறிவு ஒரு சிறந்த படைப்பே என்பதை உறுதிபடுத்தி விட்டது. திரைப்படத்தில் ஒவ்வொரு தமினுக்குள்ளும் உள்ள உணர்வை முருகதாஸ் பிரதிபலித்துள்ளதை ஏற்றுக் கொண்டு பாராட்டியது வரவேற்கதக்கது. அதே வேளை , இன, மொழி, மதமாற்றத்தை எதிர்ப்பதை ஒட்டு மொத்தமாக குறை கூறுவதை ஏற்க முடிவதில்லை. தமிழனுக்கு மட்டுமல்ல உலகில் எந்த ஆதி வம்சாவளி மத்ததை பின்பற்றியது ? இந்து மதத்தை மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து, பார்மா, கம்போடியா, இந்தோனேசியா என்று கொண்டு சென்றதோடு தமிழர் கலைகளையும் அங்கு பரப்பினர். ஒருவர் விமு்பி ஒரு வழிபாட்டு முறையை ஏற்றுக் கொள்வதை தவறு என்று யாதும் கூறமுடியாது. அதேவேளையில் மக்களின் வறுமை பினி கல்வியறிவின்மை போன்ற சமுக ஏற்றத்தாழ்வுகளை பயன்படுத்தி வஞ்சனையாக ஒருவன் மதம் மாற்றப்படுவதை நியாயப்படுத்த முடியாது. பழையன கழிதலும், புதியன புகுதலும் கலத்தின் நியதி என்பதற்க்காக ஆங்கிலத்தை அப்படியே ஏற்றுக் கொள்ள முடியுமா? எதை ஏற்றுக் கொள்ள வேண்டும் எதை ஏற்றுக் கொள்ள முடியாது கூடாது என்பதே ஆளுக்கு ஆள் வேறுபடுகிறது. தமிழனின் இழிநிலைக்குக் காரணம் சாதியும், அதனைத் தாங்கி நிற்கும் 'இந்துத்துவ' சிந்தனையும் என்பது பச்சை பெய். தமிழன் தமிழ் என்று தமிழ் இனத்தலைவன் என்று என்னி ஏமாந்தது தான் என்பதை கட்டுரையாளர் மறந்து விட்டிருக்கலாம் ஆனால் உலகத்தமிழர்கள் அணைவரும் ஏமாளிகளல்ல மறந்து போவத்ற்ககு. ஏசுநாதரும் காட்டிக் கொடுக்கப்ட்டார், கட்டப்பபொம்மனும் காட்டிக் கொடுக்கப்பட்டார், தமிழன் வீழச்சிக்கு காரணம் துரோகமே என்பது சரியே. ”ஒன்பது” நாடுகள் என்பது என்னிகையை குறிப்பிடுவதும் அல்ல என்பதை சிந்தித்து பார்க்க.
மால்கம் X இராசகம்பீரத்தான்
சீனாவை இந்தப் படம் எதிர்க்கின்றது என்ற ஒரே காரணத்திற்காக எங்கள் பொதுவுடமை தோழர்கள் இனையதளங்களில் வரிந்து கட்டிக் கொண்டு இந்த படத்தை கடுமையான தாக்குதல்களுக்கு உள்ளாக்கினார்கள். ஆனால் ஜீவசகாப்தம் தனக்கே சார்பு நிலை கடந்த துள்ளியமான கருத்துக்களை பதித்ததன் மூலம் 7அறிவினை நேர்கோட்டில் பயணிக்க வைத்துள்ளார்.
போதிதர்மர் காலத்திலிருந்து துவங்கும் கதையின் மூலமாக பெளத்தத்திற்கும் ஆதி தமிழனுக்குமான உறவினை காட்டியுள்ளார் இயக்குனர்.
அது எல்லைகளை கடந்து இந்திய துணைக்கண்டம் முழுவதும் பறவியிருந்தது என்பதையும் காட்டியுள்ள இயக்குனர். போதி தர்மர் சீனாவிற்கு நாடு கடந்து போக வேண்டிய அவசியத்தை சரியாக காட்டவில்லை என்றே தோன்றுகிறது. ஆரியர்களின் ,பார்ப்பனிய அடக்குமுறையால் பெளத்தமும், சமனமும் அழிந்து கொண்டிருக்கும் நிலையில் தான் போதிதர்மர் தமிழகத்தை விட்டு நாடுகடந்து சீனாவிற்கு சென்றிருக்க முடியும். மதத்தால் போதிதர்மர் ஒரு பெளத்தன் என்றாலும் அவர் ஒரு தமிழன் தானென்று உரிமை கொண்டாடுவதம் மூலம் இயக்குனர் இன்றைய இந்துத்துவாதிகளுக்கு ஒரு பாடம் எடுத்துள்ளார் என்று சொல்லாம்.
இடஒதுக்கீடு கூடாது, மதமாற்றம் கூடாது என்பது போன்றவைகள் எல்லாம் முருகதாசின் அறிவுமுதிர்ச்சியின்மையை காட்டுகிறது.
” மதமாற்றம் கூடாது என்றால் எப்படி இந்திய துனைக்கண்டம் முழுவதும் பரவி இருந்த பெளத்தமதம் அழிந்து இந்துமதம் பறவி இருக்கும்?”

சாதிமறுப்பு கொள்கையை கொண்டிருக்கும் பெளத்த நாயகனாகிய போதிதர்மரை வழியுறுத்தும் இயக்குனர், சாதியடக்குமுறைகளிலிருந்து வெளியேறும் மதமாற்றத்தை தடுக்க வேண்டும் என்பது முற்றிலும் முரண்.

இராசராச சோழன், இராசேந்திர சோழன் என் முப்பாட்டன் என்று சாதியத்தை வளர்த்தெடுத்த இந்துத்துவ மன்னர்களுக்கு வாழ்க கோசம் போடும் என் அருமை செந்தமிழர்களுக்கு மத்தியில் பெளத்தன் போதிதர்மன் எல்லா சோழர்களுக்கும் முப்பாட்டன் என்பதை உணர்த்தும் படம் 7ஆம் அறிவு. கூகுலில் போதிதர்மர் , டி.என் ஏ என தேடி கிடைத்த விடைகள் மூலம் அவசர கதியாக ஒரு படத்தை எடுத்துள்ளார் தமிழ் உணர்வாளர் இயக்குனர் முருகதாஸ் ஆனாலும் அவரின் தமிழன் என்ற முதல் திரைப்படவியல் துவக்கத்தை வரவேற்கிறேன்
tamizh
நல்ல பதிவு,
ilang kumanan
பிராமணர்களை தமிழ்நாட்டிலிருந்து வெளியேற்றினால் நாடு
விடுதலை பெரும். அவர்களால் நமக்கு மறைமுகமாக, நேரடியாக தொல்லைகள். நீண்ட ஆய்வு தேவை

இதே போல் மார்வாடி, ஜெயின் ஹிந்தி மக்கள்
Sudhakar
அமெரிக்கா சீனா மீது தாக்குதல் நடத்த தனது படை தளத்தை அமைக்கும் நோக்குடந்தான் தமிழர்களுக்கு இலங்கையில் ஆயுத விற்பனை செய்தது. இது தமிழர்கள் மட்டும் சம்மந்தபட்ட பிரச்சினை என்றால் சீனாவின் நிலைப்பாடு வேறாக இருந்திருக்கும். இந்தியா அமெரிக்காவின் கைக்கூலியாக மாறியதே சீனாவின் இந்த செயல்பாட்டிற்கு காரணம். தமிழர்களின் இழப்பிற்கும் இதுவே காரணம். நமது நாட்டிலேயே நம்மால் வாழ முடியாத போது அன்னிய நாட்டில் தமிழர்கள் படும் துயர் பற்றி என்ன பேசுவது. இலங்கைக்கு சீனா ஆயுதம் வழங்கியது என்றால், விடுதலைப்புலிகலுக்கு ஆயுதம் வழங்கியது யார்? தமிழர்கள் வாழ்ந்த யாழ்பானம் யாருக்கு தேவைப்பட்டது? யோசித்தால் இதற்கும் காரணம் அமெரிக்காதான் என்று புரியும்.....
palanivelrajan
Mathamattram indiavil irunthu thadai seyya padum varrai nam adimaigale....

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.