தமிழகத்தில், எழுதப்பட்ட வரலாறாலாக இருந்தாலும், வாய்மொழி வரலாறாக இருந்தாலும், கலைகளின் வாயிலாக காட்டப்பட்ட வரலாறாக இருந்தாலும் அனைத்துமே ஆண்ட பரம்பரையின் வரலாறுகளாக, அரசர்களின் வரலாறுகளாக, ஆண்டைகளின் வரலாறுகளாக, ஆதிக்க ஜாதிகளின் வரலாறுகளாகத்தான் இருந்து வருகின்றன.

muthuramalinga_thevar_400அப்படிப் புனையப்பட்ட வரலாறுகளில் ஒன்றுதான் பசும்பொன் உ.முத்துராமலிங்கம் (தேவர்) என்பவரின் வரலாறு ஆகும்.தென் மாவட்டங்களில் மாத்திரம் அல்ல, முக்குலத்தோர் என்று சொல்லப்படுகிறவர்கள் குழுவாக அல்லது கூட்டமாக வாழ்கிற இடங்களில் மாத்திரம் அல்ல, தமிழகத்தின் தலைநகராய் விளங்கும் சென்னைப் பெருநகரின் மய்யத்தில் அமைக்கப்பட்டுள்ள முத்துராமலிங்கத்தின் சிலை உட்பட அவரது நினைவாக நிறுவப்பட்ட அனைத்து சிலைகளின் பீடங்களிலும் பொன்மொழி போல் ஒரு வாசகம் தவறாமல் இடம் பெற்றிருக்கும். அது இதுதான்:   ''தேசமும், தெய்வீகமும் எனது இரு கண்கள்''

மேற்காணும் வாசகத்தில் உள்ள இரண்டு சொற்களுக்குமே சொல்விற்பன்னர்கள் பல படப் பொருள் கூறுவர். அப்படிக் கூறுபவர்களில் பெரும்பாலோர் இவ்விரு சொற்களுமே பெருமையும், பெரும் பொருள் பொதிந்தவை என்றுமே கூறுவர்.

'தேசம்' என்கிறபோது, அது வெற்று வரைபடமோ அல்லது அவ்வரைபடம் விரிக்கும் நிலத்தின் வரையறையோ அல்ல! மாறாக, அவ்வரைபடம் வரையறுக்கும் நிலத்தில் வாழும் பல்வேறு இனக்குழு சார்ந்த மக்களையே அது குறிக்கும். இந்த இந்தியா என்கிற தேசம் விசித்திரமானது. இதில் பல்வேறு மொழி பேசுகிற, வெவ்வேறு கலாச்சாரங்களைக் கொண்ட மக்கள் வாழ்கின்றனர். இந்த வேறுபாடுகளை கடந்தவர்கள்தான் இதனை ஒரு தேசமாகக் கருத முடியும்-கண்ணைப்போல் காத்திடவும் முடியும். 120 கோடிக்கும் மேலான மக்கள் தொகைக்கொண்ட இத்தேசத்தில் அப்படி ஒருவரை கண்டறிவதென்பது கடற்கரை மணலில் விழுந்த கடுகைத் தேடுவது போல் தான் இருக்க முடியும்.

'தேசமும் , தெய்வீகமும் எனது இரு கண்கள்' என்று கூறிய திரு முத்துராமலிங்கம் அதனை அப்படியே கடைபிடித்தவர் தானா என்றால், அச்சொற்களின் உண்மைப் பொருளையும் - அதனை கூறிய திரு.உ.மு.தேவரின் நடவடிக்கைகளையும் சீர்தூக்கிப் பார்த்தால் ஒற்றுமை என்பதை சிறிதளவேனும் காண இயலாது. அதிலும் குறிப்பாக இவர் தான் வசிக்கும் பகுதியில் வாழ்ந்த மக்களையே, சமமான மனிதர்களாகக் கருதும் மன இயல்பில்லாதவர்.

'அரிஜனங்கள் எனப்படுவோர் ஆண்டவனின் குழந்தைகள்' என்றார் மகாத்மா(!) காந்தி. 'ஆண்டவனுக்கு முன் அனைவரும் சமம்' என்றனர் ஆன்மிகத் துறையினர். இதனை அறவே வெறுத்தவர் திரு முத்துராமலிங்கம். எனவே, தேசம் என்கிற சொல்லும், தெய்வீகம் என்கிற சொல்லும் இவரது அகராதியில் வெவ்வேறு பொருள் பொதிந்தவை ஆகின்றன. இதனை இவர் 'கண்ணாக'க் கருதினார் என்பதை இயற்கை அறிவு கொண்டோர் எவரும் ஏற்க இயலாது.

இவையன்றி இவரைக் குறித்துக் கட்டமைக்கப்பட்ட கதைகளும் அப்படித்தான்.

1. திரு.உ.மு.தேவர் பாண்டிய மன்னர் பரம்பரையில் வந்தவர்.
2. திரு.உ.மு.தேவர் தனது நிலங்களை தலித்துகளுக்கு பகிர்ந்தளித்தார்.
3. திரு.உ.மு.தேவர் இஸ்லாமியத் தாயிடம் பால் குடித்து வளர்ந்தவர்.

இப்படியெல்லாம் இவரைக் குறித்தான பிரம்மிப்பூட்டும் பிம்பங்கள் கட்டமைக்கப்பட்டது. இவர் தன்னலமற்ற தியாகியாகவும், சுயசாதி விருப்பமற்ற சமத்துவ விரும்பியாகவும், நாட்டுப்பற்றில் ஈடு இணையற்ற வீரராகவும், எல்லாவற்றுக்கும் மேலாக தமிழகத்தின் தலைவர்களுக்கெல்லாம் தலைவராகவும், நினைத்தால் எதையும் ஆக்கவும், அழிக்கவும் வல்ல சர்வ சக்தி படைத்தவராகவும் அவரை நம்பியக் கூட்டத்தாரால் ஏற்றுக் கொள்ளப்பட்டவர்.

எனினும், நடுவுநிலை பிறழாமல் சிந்திக்கக் கூடியவர்கள் எவருமே திரு.உ.முத்துராமலிங்கம் குறித்தான இத்தகைய புனைவுகளை ஏற்க மறுக்கின்றனர். அத்துடன் இவை அத்தனையும் புனைவுகள் தாம் என்பதை தரவுகளோடு நிறுவியும் உள்ளனர். அவற்றை நாம் ஒவ்வொன்றாகக் காண்போம்.

புனைவு ஒன்று: உ.மு.தேவர் பாண்டிய மன்னர் வழிமுறையில் வந்தவர்

திரு.முத்துராமலிங்கம் 30.10.1908ஆம் ஆண்டில் உக்கிரபாண்டி-இந்திராணி தம்பதியருக்கு இரண்டாவது மகனாக 'பசும்பொன்' கிராமத்தில் பிறந்து, 1938ல் சப்-மாஜிஸ்திரேட்டாக இருந்த பிரதம நாயகம் என்பவரை இவரது ஆட்கள் கொலை செய்து விட, அச்சூழலில் மதுரைக்குப் புலம் பெயர்ந்து வாழ்ந்தவர். பின்னர் 29.10.1962ல் மதுரை திருமங்கலம் பகுதியில் இறந்து விடுகிறார். 'பசும்பொன்' கிராமத்தின் பழம் பெயர் 'தவசிகுறிச்சி' எனவும் பிற்காலத்தில் உடையான் பசுபதியின் நினைவாக 'பசும்பொன்' என்று அழைக்கப் பட்டதாகவும் கூறுகின்றனர்.

இவ்வாறு புனையப்பட்ட 'மன்னர் பரம்பரை' கதையை பசும்பொன்னிற்கு பக்கத்தில் இருக்கும் 'முஷ்டக்குறிச்சி'யைச் சேர்ந்தவரும், 'முக்குலத்தோர்' பிரிவில் பிறந்தவருமான பத்திரிக்கையாளர் திரு.தினகரன் பின்வருமாறு மறுக்கிறார்:

'தெலுங்கு தேசமான ஹைதராபாத் நகரத்துக்கு அருகில் நெல்லிமாரலா, நௌபதாதுசி என்னும் கிராமங்களையொட்டி 'கிழுவநாடு' என்று ஒன்று இருந்தது. அங்கிருப்பவர்கள் 'தேவ' என்னும் பட்டம் உடையவர்கள். அய்யனார் தெய்வத்தை வணங்குகிறவர்கள். அய்யனை (குல தெய்வமாக) கொண்ட கூட்டத்தினர். (கூட்டத்திற்கு கோட்டை என்றும் பொருள் உண்டு) இவர்களே 'கொண்டையன் கோட்டை' மறவர்களின் முன்னோர்களாய் இருக்க வேண்டும் எனவும், ஆந்திரப் பகுதியில் இருந்து புலம் பெயர்ந்து ஆப்பநாட்டுப் பகுதியில் குடியேறினர் என்றும் கூறுகின்றார்.'

(தமிழகத்தின் தலைவர்களை வந்தேறிகள் என வாய்க்கூசாமல் பேசிவரும் பெங்களூர் குணாவின் புதிய மாணாக்கர் 'தம்பி' சீமான் இதனை கவனத்தில் கொள்ள வேண்டும்.)

புனைவு இரண்டு : உ.மு.தேவர் தனது நிலங்களை தலித் மக்களுக்கு பங்கிட்டுக் கொடுத்தார்.

'உ.முத்துராமலிங்கத்தை பரம்பரைப் பணக்காரர் எனச் சொல்லும் அவரது பற்றாளர்கள் உ.முத்துராமலிங்கம் தனது நிலங்களை தலித்துகளுக்குப் பங்கிட்டுக் கொடுத்தார் என்பதைச் சற்று உரக்கவே கூவுகின்றார்கள். உ.முத்துராமலிங்கம் தனது இறப்புக்கு முன்னர் 1960ல் தனது பங்களா இருக்கும் புளிச்சிகுளம் கிராமத்தில் 32 1/2 கிராம நிலங்களை 17 பாகங்களாகப் பிரித்திருக்கிறார். ஒரு பாகத்தை தனக்கு வைத்துவிட்டு, 16 பாகங்களை தனக்கு நெருக்கமாகவும், விசுவாசமாகவும் இருந்த 16 பேருக்கு எழுதி வைத்தார். அவர்களுள் பசும்பொன்னைச் சேர்ந்த இரண்டு தலித்துகளும் அடங்குவர்.

உ.முத்துராமலிங்கத்தின் இறப்புக்குப் பின்னர், ''திரு.உ.முத்துராமலிங்கத் தேவர் நினைவு தர்மபரி பால ஸ்தாபனம்'' என்னும் பெயரில் நிறுவப்பட்ட அறக்கட்டளைக்கு, வடிவேலம்மாள், ஜானகி அம்மாள், ராமச்சந்திரன், அட்டெண்டர் முத்துசெல்வம் ஆகியோர் தவிர்த்த 12 பேர் தமது பங்குகள் அனைத்தையும் அப்படியே தந்து விட்டதாக ஏ.ஆர்.பெருமாள் தனது நூலில் பதிவு செய்திருக்கிறார்.

நிலங்களைத் திரும்பத் தர மறுத்த நால்வரும் மறவர் ஜாதியைச் சேர்ந்தவர்கள் என்பது ஒரு புறமிருக்க வடிவேலம்மாள், ஜானகியம்மாள் இருவரும் உ.முத்துராமலிங்கத்தின் உறவுக்காரர்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கச் செய்தியாகும்.

தலித்துகளுக்கு நிலங்கள் கொடுக்கப்பட்டது போன்று மீண்டும் அம்மக்கள் உ.முத்துராமலிங்கத்தின் பெயரால் உருவாக்கப்பட்ட அறக்கட்டளைக்கே திருப்பி கொடுத்து விட, அவரது சொத்துகளை இன்று வரை 'கோல்மால்' மூலமாக அபகரித்து, அனுபவித்து வரும் மறவர்களின் சதிச்செயல்கள் வெளித் தெரியாமல் இருப்பதற்காகவே தலித்துகளுக்கு நிலங்கள் கொடுக்கப்பட்டதான பொய்ப் பிரச்சாரம் மேற்கொள்ளப் படுகிறது.

ஆக, அவரது சொத்துகள் 17 பாகங்களாகப் பிரிக்கப்பட்டதும், அதில் இரண்டு பாகங்கள் அவரிடம் நெடுங்காலம் உழைத்த காரணத்தினாலோ அல்லது அவருக்கு உண்மையாக இருந்த காரணத்தினாலோ இரண்டு தலித்துகளுக்குக் கொடுக்கப்பட்டதும் உண்மை. ஆனால், சிறிது காலத்திலேயே அந்த நிலங்கள் திரும்பப் பறிக்கப்பட்டு விட்டது. கொடுத்ததையே பெருமையாகச் சொல்பவர்கள், அவரது அறக்கட்டளைக்கு திரும்ப வாங்கிக் கொண்டதை சொல்வதில்லை.

புனைவு மூன்று : உ.மு.தேவர் இஸ்லாமியத் தாயிடம் பால் குடித்து வளர்ந்தவர்

1. 'உ.முத்துராமலிங்கத்தின் அரசியல் நுழைவு 1933 ஜூன் 23ல் இருந்து துவங்குகிறது. 'சாயல் குடி'யில் 'விவேகானந்தா வாசக சாலை'யின் முதலாவது ஆண்டு விழாவில் உ.முத்துராமலிங்கம் கலந்து கொண்டு பேசியதுதான் அவரது அரசியல் பிரவேசத்திற்குக் காரணமாக இருந்திருக்கிறது. விவேகானந்தா வாசக சாலையில் பேசும்போது உ.முத்துராமலிங்கம் அபிராமபுரத்தின் இந்து மகா சபைத் தலைவர். அபிராமம் முஸ்லிம்களுக்கு எதிராக 1932, 1935, 1938 ஆகிய ஆண்டுகளில் கலவரம் புரிந்ததை அவரே ஒப்புக் கொண்டதாக பத்திரிக்கையாளர் தினகரன் எழுதுகிறார்.

2. தமிழகத்தில் ஜாதி சண்டையை மூட்டி விடுவதற்கு முன்பே மதச் சண்டையை மூட்டி விட்டு முன்னோட்டம் பார்த்த மதவாதியாக உ.முத்துராமலிங்கம் அரசியலுக்குள் நுழைகிறார். முத்துராமலிங்கத்தின் ஜாதி அடிப்படைவாதத்திற்கு 1937முதல் 1957 வரையிலான செயல்பாடுகள் தரவுகளாக இருப்பதைப் போன்று, மத அடிப்படை வாதத்திற்கு 1932ல் முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கையில் இருந்து 1957 செப்டம்பர் 16 வடக்கன் குளத்தில் கிறிஸ்தவர்களுக்கு எதிரான நடவடிக்கைவரை நீண்டு கிடக்கிறது.

3. சட்டமன்ற விவாதத்தின்போது முக்குலத்தோர் சமுதாயத்தைச் சேர்ந்த திரு.மதுரை ஆர்.சிதம்பர பாரதி என்கின்ற உறுப்பினர் ஒரு செய்தியினை பதிவு செய்கிறார். ''சென்ற வருஷம் ஆர்.எஸ்.எஸ் தலைவரான ஸ்ரீ கோல்வால்கரை (இவர் காந்தியை சுட்டுக்கொன்ற நாதுராம் விநாயக் கோட்சேவின் கோஷ்டி) மதுரைக்கு அழைத்து வந்து அவருக்கு ஸ்ரீ மு.தேவர் ஒரு பணப்பையை பரிசளிக்க ஏற்பாடு செய்தார். அச்சமயம் அவர் பேசியபோது, 'மகாத்மா காந்தி ஹரிஜனங்களை ஆதரிப்பதனால் இந்து மதத்திற்கே அவர் எதிரி என்றும், இதனால்தான் ஸ்ரீகோல்வால்கருக்கு பணமுடிப்பை அளிப்பதாகவும்'' கூறினாராம்.

(இந்த ஆர்.எஸ்.எஸ் கூட்டம்தான் 1925ல் இருந்து இன்று வரை சிறுபான்மை முஸ்லிம்களுக்கும், தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் எதிராக பல்வேறு கலவரங்கள் உருவாகக் காரணமாக இருந்து வருகிறது.)

4.1937 தேர்தலில் போட்டியிட காங்கிரசு கட்சி அவருக்கு வாய்ப்பளித்தது. இராமாநாதபுரம் சேதுபதியை எதிர்த்துப் போட்டியிட்ட தேவர் வெற்றி பெறுகிறார். 1937 தேர்தல் வெற்றி உ.முத்துராமலிங்கம் அவர்களை தலைகால் தெரியாமல் ஆக்கியதால், தேர்தலில் தனக்கு ஓட்டளிக்காத தலித்துகள், இசுலாமியர்கள், நாடார்கள் மீது பலாத்காரத்தை தூண்டிவிட்டார்... 1939ல் அபிராமத்தில் உள்ள முஸ்லிம் விவசாயிகள் தங்கள் நிலங்களுக்கு தண்ணீர் பாய்ச்ச வேண்டிய நிலையில் இருக்கும்போது கண்மாயை வெட்டி தண்ணீரை வெளியேற்றியும் இருக்கிறார்.

5. 1957ல் தேர்தல் தினமாகிய ஜூலை 1ஆம் தேதியன்று தேர்தலில் ஓட்டுப்போடுவதற்காக முஸ்லிம் கோஷா பெண்கள் வண்டிகளில் வந்துகொண்டிருந்தார்கள். அந்த வண்டிகளை நடுத்தெருவில் மறித்து நிறுத்தி, ஓட்டுப்போடும் இடங்களுக்கு போகக்கூடாது என்று தடுத்தார்கள். அச்சமயத்தில் காங்கிரஸ் ஊழியர்களான தலைமலைச்சாமி என்பவரும், சோணமுத்து என்பவரும் வேறு கிராமத்திலிருந்து அங்கே வந்தார்கள். ஓட்டர்களை மறித்து நிறுத்தி வைத்திருப்பதை அவர்கள் கண்டதும், அதை ஆட்சேபித்தார்கள். அதனால் அங்கிருந்த மறவர் கூட்டம் அவர்களை படுகாயம் அடையும்படி அடித்தார்கள். அதன் பிறகு கடைசிவரையில் அபிராமத்திலும், நத்தத்திலும் இருந்த கோஷா பெண்கள் ஓட்டு கொடுக்க முடியாமலேயே போக நேரிட்டது.

6. 'உ.முத்துராமலிங்கத்தின் பிறப்புச் செய்தியை குழப்பச் செய்தியுடன் வெளிஉலகுக்கு தெரியப்படுத்திய அவரது வரலாற்றாசிரியர்கள் உ.முத்துராமலிங்கம் 'இஸ்லாமியத் தாயின் மார்பில் பால் குடித்து வளர்ந்தார்' என்பதையும் கூறி வருகின்றனர். 1960ல் முத்துராமலிங்கத்தின் வரலாற்றை சுருக்கமாக எழுதிய சசிவர்ணம் ''இவர் பிறந்த ஆறாம் மாதம், வணக்கத்திற்குரிய இவரது தாயார் இந்திராணி அம்மையார் காலமாகி விட்டார்கள். அதுமுதல் இவரது பாட்டியார் இராணி அம்மையார்தான் இவரை வளர்த்து வந்தார்கள் (தேவர் ஜெயந்தி விஷேட சுவடி/11) என்பதாக பதிவு செய்கிறார்.

இவரை ஒட்டியே 1993ல் முத்துராமலிங்கத்தின் முழு வரலாற்றையும் எழுதிய ஏ.ஆர்.பெருமாளும் 'இஸ்லாமியப் பால் குடியை' வன்மையாக மறுத்து எழுதுவார். ஆனாலும் உ.முத்துராமலிங்கத்தின் 'இசுலாமிய பால் குடியை' வலிந்து பரப்பி வருகின்றனர்.

மேற்காணும் செய்திகளே திரு.உ.முத்துராமலிங்கத்தின் இந்து வெறி உணர்ச்சிக்கு சான்றாகும். இதனை மறைத்து அவரை ஒரு தேசியத் தலைவராக்கும் முயற்சியாகத்தான் 'இஸ்லாமியப் பால் குடி'' என்கிற கதை கட்டமைக்கப்பட்டது. இதனை அவரது வரலாற்றை எழுதியவர்களே மறுக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

- அறிவுக்குயில்

Comments

105 comments

105
raja
Thevar, died on October 30, 1963, on his 55th birthday..please have a look at it.

Apart it is nice work by athour especially quote to Seeman
kulothungan
メ ஒரு சாணானுக்கு நிகராக தனக்கு நாற்காலி போட்டு அமரவைத்தார்கள் என்று சொல்லி காமராசரை அவமானப்படுத்தி காங்கிரசை விட்டு வெளியேறிய, ஆதிக்க சாதி வெறி பிடித்தவர் முத்துராமலிங்கத் தேவர். காமராசரை ஒழிக்க பதவி வெறி பிடித்த ம.பொ.சி.யை தூக்கிப் பிடித்தவர். அவரை ஒரு தேசியத்திற்கு பாடுபட்ட தலைவராய் வரலாற்றை சில புர்ர்ர்ட்ட்சியாளர்கள் திரித்துக் கொண்டிருக்கும் வேளையில் வெளியிடப்பட்ட நல்லதொரு கட்டுரை.. வாழ்த்துக்கள்..
கம்யுனிச காட்டுமிராண்டி
முத்துராமலிங்க தேவர் ஆதிக்க சாதி வெறியர் என்று கூறும் உங்களை போன்ற கம்யுனிச ரௌடிகள் என்ன புத்த பிரானா? உங்கள் எழுத்துக்களிலும், செயல்களிலும், வரலாற்றிலும், கொலையும், கொள்ளையும், ரத்தக் களரியுமுமே இருக்கும்பொழுது, மற்றவர்களை பற்றி எழுதுவது நகைப்புக்குரியதாகவே கருதத்தக்கது..

உண்மையில் தமிழ்நாட்டில் ஜாதிச்சண்டையை உருவாக்க காரணமாக இருந்தது இரண்டு தீய சக்திகள்.. ஒன்று, காமராஜரை தலைவராக கொண்ட காங்கிரஸ்.. இன்னொன்று, கம்யுனிச ரௌடிகள்..

காமராஜரை பொறுத்தவரை, நாடார் ஜாதி ஆதிக்கத்தில் இருந்தவர்.. இவர் பெயரை வைத்து, வெளிநாட்டில் இருந்து பிரிண்டிங்க் மெஷின் வாங்கி சிவகாசியில் கள்ள நோட்டை அடித்ததை கணும் காணாமல் இருந்தவர் காமராஜர்.. அடுத்து, முத்துராமலிங்க தேவர், ஃபார்வார்ட் ப்ளாக் கட்சியில் இருந்ததும், அவர் பகுதியில் பெரும் புகழோடு இருந்ததையும், தாங்கிக் கொள்ல முடியாமல், எங்கோ இருந்த இமானுவேல் சேகரனை வைத்து முதன் முதலில் முக்குலத்தோருக்கும், பள்ளர்களுக்கும் ஜாதிச்சண்டையை மூட்டிய மாமனிதர் காமராஜர்..

அடுத்து, வக்கத்து இருக்கும் கம்யுனிசக்காரர்களுக்கு எப்பொழுதுமே அடக்கப்பட்டவர்கள் வேண்டும்.. இல்லையென்றால் அவர்களால் வண்டியோட்ட முடியாது.. ஒரு இடத்தில் சண்டையை மூட்டி விட்டு, ஏதாவது ஒரு பக்கம் சாய்ந்து கொண்டு, அடக்கப்பட்டவர்களுக்கு போராடுவதாக பாவ்லா செய்து, எரிகிற எண்ணையில் குளிர் காயும் காட்டுமிராண்டிய ரௌடிகள்தான் இந்த கம்யுனிசவாதிகள்..

ஆதிக்க ஜாடி என்னும் பேதிக்க வாதத்தை விட முடியாமல் கழிந்து கொண்டிருக்கும் நிலையை பார்க்கும்பொழுது ஒரு நேரம் பரிதாபபட வேண்டியிருக்கிறது..
alagan
முத்துராமலிங்கத் தேவர் தமது வாழ்நாளின் பெரும் பகுதியை எழிய மக்கலுக்காகவே வாழ்ந்தார்
தேவரே என் தெய்வம்
முதலில் காமராஜர் குறித்து, முத்துராமலிங்கத் தேவர் உதிர்த்த பொன்முத்துக்களைப் பார்ப்போமா?

1957 சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில், காஞ்சிபுரத்தில் பேசிய பேச்சு:- "இற்றைக்கு முதல் மந்திரி என்று சொல்கிற நபர் எல்லாம், அற்றைக்கு நாங்கள் ஏவின வேலையை கேட்டுக் கொண்டிருந்தவர்", என்று ஆணவம் நிரம்பக் கூறினார்.

இதே விசயத்தை, சங்கரன்கோவிலில் இருந்து தேனி வரை எல்லா ஊர்க் கூட்டங்களிலும், முதல்வரை, மரியாதை சிறிதும் இன்றி 'நபர்' என்றோ, காமராஜன் என்றோ, காமராஜ் நாடான் என்றோ தாழ்த்தியே பேசி வந்தார். எல்லா மேடைகளிலும் ஒரு கதை சொல்வார், காமராஜர் குறித்து. அது என்ன கதை?பசும்பொன் உ.முத்துராமலிங்கமே கூறட்டும் கேட்போம்.

"இதே காமராஜ் இற்றைக்கு முதல் மந்திரியாக இருக்கலாம். ஆனால் இதே நபர் பழைய காலத்தில் ஒரு ஓட்டராக இருக்கக்கூட யோக்யதை இல்லாமல் இருந்த தொண்டர். அற்றைக்கு சொத்திருந்தவர்களுக்குத்தான் ஓட்டுரிமை. இவருக்கு சொத்து கிடையாது. ஒரே ஒரு வீடு இருந்தது. அதுவும் அவர் தாயார் பெயரில் இருந்தது. அந்த வீட்டை இவர் பேருக்கு மாற்றித் தரும்படி நான் கேட்டபோது, இவருக்கு ஒரு தங்கை உண்டு. இவருடைய தாயார், "வீட்டில் ஒரு பெண் பிள்ளை இருக்கிறது. அதை நல்ல இடத்தில் கை பிடித்துக் கொடுக்க வேண்டும். ஆகையால் நான் இந்த வீட்டைப் பையன் பேருக்கு மாற்ற முடியாது" என்று சொல்லி விட்டார்கள்.
(இதே கூற்றை "அவன் வேலை வெட்டி இல்லாமல், பொருள் சேர்க்கத் தெரியாமல் ஊரைச் சுத்துகிறவனாயிற்றே. அவனுக்கு வீட்டை எழுதி வைத்து விட்டு பிறகு என்ன செய்கிறது?" என்று காமராஜரின் அன்னை சொன்னதாக சங்கரன்கோவிலில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் 25 பிப்ரவரி 1957ல் தேவர் கூறியுள்ளார்)

அதன் பிறகு நான் என்ன செய்ய வேண்டியிருந்தது என்றால், ஒரு வெள்ளாட்டை வாங்கி, அதற்குக் கட்ட வேண்டிய முனிசிபாலிடி வரியைச் செலுத்தி, தகர வில்லையை வாங்கி, அதனுடைய கழுத்தில் கட்டி,அந்த ரசீதை காமராஜ் கையில் கொடுத்து,ஓட்டர் ஆக்கியவன் அடியேன். இந்த நிலைமையிலிருந்த சாதாரணத் தொண்டர்களை எல்லாம் மனிதத் தன்மைக்குக் (!!!) கொண்டு வந்தவன் அடியேன்."(21/2/57 காஞ்சிபுரம் தேர்தல் பிரச்சாரக் கூட்டம்)

சாதாரணமான தொண்டனாக இருந்த காமராஜை, மனிதத்தன்மை உள்ள மனிதராக இவர் ஆக்கினாராம். என்னதோர் ஆணவப் பேச்சு பாருங்கள்.
தேவரே என் தெய்வம்
கல்வியைப் பரவலாக்கிப் பணியாற்றிய காமராஜரினை, ராஜாஜியுடன், தேவர் ஒப்பிட்டதைப் பார்ப்போம். "அவர் மிதவாதியாக (ராஜாஜி) இருந்தாலும், காமராஜ் போல தற்குறி அல்ல. பழங்காலத்தில் எம்.ஏ. எல்.டி., பி.ஏ. எல்.டி. பட்டம் பெற்றவர்கள் ஆண்டார்கள். இற்றைக்கி எம்.ஏ.,பி.ஏ. இல்லாது வெறும் எல்.டி.க்கள், அதாவது 'லெப்ட் தம்ப்' இடது கைப்பெருவிரல் பிரட்டுகிறவர்கள் ஸ்தானம் பெற்றிருக்கிற காலம்."

காமராஜ், வறுமையின் காரணமாய்ப் பள்ளிப்படிப்பைத் தாண்டவில்லை, என்பதனை நாடறியும். இதனால் என்ன குறைந்தது, அவரின் திறமைக்கு? தேவர், இதனைக் கூட கேவலமாகப் பேசித் தன் பெருந்தன்மையை உலகுக்குப் பறைசாற்றியிருக்கிறார். (இதனைச் சொன்ன தேவரோ, எஸ்.எஸ்.எல்.சி.யே தாண்டவில்லை என்பது இன்னும் சிறப்பு).
தேவரே என் தெய்வம்
குலக்கல்வித் திட்டம் கொண்டுவந்து தமிழர்கள் கல்வியில் மண்ணள்ளிப்போட சூதறிஞர் ராஜாஜி முனைந்தபோது, காங்கிரசுக்குள்ளேயே எதிர்ப்பு வலுத்து, குல்லுகப் பட்டர், பதவி விலகி, காமராஜர் முதல்வரானார். அச்சூழலை விவரிக்க வந்த தேவர் சொல்கிறார், காஞ்சி தேர்தல் பிரச்சாரத்தில் - "பிளாக் மார்க்கெட்காரர்களுக்கு புரோக்கராக நின்ற காமராஜர் பிரதம மந்திரியாகிறார்." (அப்போது, மாகாண முதல்வர்களை, பிரீமியர்-பிரதமர் என்று சொல்வது வழக்கம்)

காமராஜரை ஆதரித்த காங்கிரஸ் தலைவர்களிடம் தேவர் சொன்ன கருத்து "உங்களுக்கு அவர் பிரதமராகத் தோன்றலாம். எனக்கு அவருடைய பழைய மார்க்கெட் வேல்யூ தெரியும். ஒழுக்கத்தின் பெயரால், அறிவால்,தியாகத்தால் பதவிக்கு வருகிறவர்களைத்தான் நான் மதிக்க முடியும். சந்தர்ப்பத்தின் பெயரால் முன்னுக்கு வருகிறவர்களை நீங்கள் மதிப்பதாக இருந்தால் நான் என்ன செய்ய முடியும்?".

சற்றே யோசித்துப் பார்ப்பின் தேவர் குறிப்பிட்ட மார்க்கெட் வேல்யூ என்பது, ஜாதிப் படிநிலைதான் என்பது தெள்ளெனப் புரியும்.
தேவரே என் தெய்வம்
காஞ்சிக் கூட்டத்திலே, தேவர், காமராஜர் மீது ஓர் அபாண்டப் பழியைப் போட்டார். அது என்ன பழி? "பழைய காலத்தில் காங்கிரஸ் காரன் போட்டது கள்ள ஓட்டு. இப்போது காமராஜ், கள்ள நோட்டு அச்சடிக்கிற காரியத்தில் ஈடுபட்டிருக்கிறார்", " ஏற்கெனவே விருதுநகர் நாடார் ஒருவர் நான்கு லட்ச ரூபாய் கள்ள நோட்டை அள்ளிக் கொண்டு,திருவெற்றியூருக்கு வந்திருந்தபோது கைது செய்யப்பட்டார். இப்பேர்ப்பட்ட யோக்யதை அற்ற காமராஜ் கும்பலைத் தேர்ந்தெடுப்பது உங்களுக்கு நல்லதல்ல".

காமராஜர், சாகும்போது அவர் வீட்டில் நூற்றிச் சொச்சம் ரூபாய் மட்டுமே இருந்தது என்பதை நாம் அறிவோம். நேர்மையாய், எளிமையாய் வாழ்ந்த அத்தலைவரினைத் தரம் தாழ்த்தி, இவ்வாறு பழி போட்டு, காஞ்சியில் மட்டுமல்ல, எல்லா ஊர்களிலும் கள்ளநோட்டுப் பேர்வழி என்று புழுதிவாரித் தூற்றியவர், தேவர்.
தேவரே என் தெய்வம்
காமராஜரின் மதிய உணவுத் திட்டம், பல தரப்பு ஏழைக் குழந்தைகளையும் கல்விச்சாலை நோக்கி வர ஊக்கப்படுத்தியது என்பதை முந்தைய இரண்டு, மூன்று தலைமுறை மக்கள் மறந்திருக்க மாட்டார்கள். 1962லே அந்த மதிய உணவுத் திட்டத்தை தேவர் மதிப்பிடும் லட்சணம் இதுதான் "மதிய உணவுத் திட்டம் என்பதன் பெயரால், பிள்ளைகளின் படிப்பு பாழாக்கப்படுகிறது. உபாத்தியாயர்கள் மதிய உணவுத் திட்டத்திற்கு அரிசிப் பிச்சை எடுக்கப் போக நேர்வதால், பிள்ளைகள் படிப்பு நாசமாகி தேசத்தின் எதிர்காலம் அறிவுச் சூன்யத்துக்குத் தயாராகிறது."
தேவரே என் தெய்வம்
1957 முதுகுளத்தூர் கலவரமும், அதனைத் தொடர்ந்து அரசின் முயற்சியினால் கூட்டப்பட்ட சமாதானக் கூட்டமும், அதற்கடுத்து மிகப்பெரிய சாதி வெறிப் படுகொலைகளை ராமநாதபுரம் மாவட்டத்தில் உண்டாக்கியது.

இந்தக் கூட்டத்தில், 'இம்மானுவேல் சேகரனும், தானும் சமமாக நாற்காலியில் உட்காருவதா?' எனும் உணர்வில், தேவர் உட்காராமல் நின்று கொண்டிருந்தார். (சட்ட சபையில் பி எஸ் சந்தானம் பேசியதில் இருந்து) சமாதானக் கூட்டத்தில் தலித்களின் தலைவரான இம்மானுவேல் சேகரனும், தேவர்களின் தலைவரான முத்துராமலிங்கமும் ஓர் சமாதான அறிக்கையில் கையெழுத்துப் போட்டு அதை மக்களுக்கு 'அமைதி திரும்பிட'வேண்டுகோளாக வைக்கலாம் என கலெக்டர் முன்கை எடுத்தார். இம்மானுவேல் சேகரன் ஒத்துக் கொண்டு கைஎழுத்திட முன் வந்தபோது, இம்மானுவேலை, தமக்கு இணையான தலைவராகவோ, தலித்களின் தலைவராகவோ தம்மால் ஏற்க முடியாது என்று சொன்னார் தேவர்.

"என் அளவு நீ பெரிய ஆளாக, பெரிய தலைவனாக ஆகி விட்டாயா? உன்னோடு சேர்ந்து நானும் இந்தக் கடிதத்தில் கையெழுத்திட வேண்டுமா?" எனச் சொல்லி, தேவர் கையெழுத்திட மறுத்துவிட்டு, வெளியே வந்து தாறுமாறாக தம் தொண்டர்களிடம் பேசிடவே, அடுத்தபடியாக இம்மானுவேல் சேகரன் கொலை செய்யப்பட்டார். அவரைக் கொன்ற கொலையாளிகளைப் பிடிக்க போலீசார், கீழத்தூவல் ஊருக்குள் நுழைந்தபோது, போலீசாருக்கும், அங்கிருந்த மறவர்களுக்கும் மோதல் ஏற்பட்டு, போலீசின் துப்பாக்கிப்பிரயோகத்தில் 5 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். உடனே எதிர்க்கட்சிகள் காமராஜ் ஆட்சி மீது நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவந்தன.
தேவரே என் தெய்வம்
அமைச்சர் பக்தவச்சலம் தாக்கல் செய்த அறிக்கையில் தேவர் அவர்கள் இம்மானுவேலைக் குறித்து என்ன பேசினார் என்பது குறிப்பிடப்பட்டுள்ளது. அது - "(சமாதான) மகாநாட்டிலிருந்து வெளியே வரும்போது சிறீ முத்துராமலிங்கத்தேவர், இம்மானுவேல் போன்ற பள்ளன் கூட எதிர்த்துப் பேசும்படியாக விட்டு விட்டீர்களே! என்று தம் ஆதரவாளர்களைக் கடிந்து கொண்டார்". கடிந்து பேசிய அக்கோபமே, இம்மானுவேலை வெட்டிப் போட்டது.

அதனை அடுத்து மூண்ட கலவரத்தின்போது கொண்டலாதி எனும் ஊரில் தலித் மக்கள் குடிநீர் கோரும் கிணற்றில் மண்ணெண்ணெய்யும், மனித மலமும் கொட்டப்பட்டன. தேவமார்கள் தன் சாதி மக்களை அடையாளம் கண்டு கொள்ள மஞ்சள் வேட்டி அணிந்து கொண்டு வேல் கம்புடன் போருக்கு செல்வது போன்று கும்பலாய் சென்று தலித்களின் வீடுகளையும், வைக்கோல் போர்களையும் கொழுத்தினர். 8 ஊர்களில் பெண்களைக் கற்பழித்தனர். பல ஊர்களில் தலித் பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு ஊர்வலமாக விடப்பட்டனர்.
தேவரே என் தெய்வம்
தேவர், மதுரை கோரிப்பாளையத்தில் தற்போது அவரின் சிலை அமைந்திருக்கும் இடத்தில் வைத்துக் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அவர் ஏன் கைது செய்யப்பட்டார் என்பதை விளக்கிய அரசுக் குறிப்பு (நாள் 28/09/1957) கூறுவதாவது:- "ராமநாதபுரம் கலெக்டர் முதுகுளத்தூரில் 10.09.1957 அன்று கூட்டிய அமைதி மாநாட்டில் முத்துராமலிங்கத்தேவரும் கலந்து கொண்டார். ஹரிஜனங்கள் சார்பில் அந்த மாநாட்டில் பேசிய இம்மானுவேல் என்பவரது தலைமை குறித்து அவர் (முத்துராமலிங்கத் தேவர்) கேள்வி எழுப்பினார். அந்த மாநாட்டில் தமக்கு இணையான அளவில் ஓர் ஹரிஜன் முன்வரிசைக்கு வந்து பேசியது தம்மை அவமதித்ததாகும் என்று அவர் (முத்துராமலிங்கத் தேவர்) கருதினார். இம்மானுவேல் அந்த அளவுக்கு முக்கியத்துவம் அடையுமாறு நீங்கள் ஏன் அனுமதித்தீர்கள்? என்றும், தமக்கு நேர்ந்த இந்த பகிரங்க அவமானம் குறித்து நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்? என்றும் முத்துராமலிங்கத் தேவர் மாநாட்டிலிருந்து வெளியே வந்த பிறகு, தமது சீடர்களைக் கேட்டார். அதற்கு அடுத்த தினமே, முத்துராமலிங்கத் தேவரின் சீடர்கள் அடங்கிய ஒரு கும்பல் இம்மானுவேலை மறைந்திருந்து தாக்கிக் கொலை செய்தது. "முத்துராமலிங்கத் தேவருக்குச் சவால் விடுவதற்கு உனக்கு என்ன தைரியம்? என்று கொலையாளிகளில் ஒருவர் இம்மானுவேலை வெட்டியபோது கேட்டார்."
(தலித்களுக்குத் தாம்தான் தலைவர் என்றும், தானே பல தலித்களுக்கு உதவி செய்திருப்பதாகவும், இம்மானுவேலை அவர்களின் தலைவராகத் தன்னால் ஏற்க இயலாதென்றும் தேவர், அக்கூட்டத்தில் கூறி இருந்தார். சாதி இந்து மனதில் ஆண்டாண்டு காலமாய் வேரோடிய சாதி வெறிதான் தலித்தின் தலைமைத்துவத்தை ஏற்க மறுக்கிறது. இதே போன்று தான், வட்ட மேஜை மாநாட்டில் அம்பேத்கரை, தீண்டப்படாதவர்களின் தலைவராக ஏற்றுக்கொள்ள முடியாதென்று காந்தி வாதிட்டார். )
loddu kku pandi
தமிழ் நாட்டு அரசியலின் தூய்மையான அடையாளம் கர்மவீரர்.காமராசர்! அவரை போய்....கொச்சைப்படுத்தும் வக்கிரமனத்தவர்களை என்னவென்று சொல்வது?
முதல்வராக இருந்து,மரணித்தப் பின் அவரது சொத்து கதர் வேட்டி, சட்டையும் 150 ரூபாய் மட்டும் தான்.

சாதி தலைவரை பெருமைப்படுத்த எவ்வளவோ வழிகள் உள்ளன. தமிழ்நாட்டரசியலின் நேர்மையை கொச்சைபடுத்தி தான் சாதி தலைவரை தூக்கி பிடிக்கவேண்டுமா?
தேவரே என் தெய்வம்
இம்மானுவேல் கொலை வழக்கில் பெருமாள் பீட்டர் என்பவரது சாட்சியம் மிகவும் முக்கியமானது. அப்போது 88 வயதை எட்டியிருந்த பேரையூரைச் சேர்ந்த அவரின் சரித்திரம் சில ஆண்டுகளுக்கு முன்பு தலித் முரசில் வெளிவந்துள்ளது.

நீதிமன்ற விசாரணையில் பீட்டர், தேவருக்கு எதிராக சாட்சி சொன்னார் "ஒரு ஹரிஜன இளைஞர் நம்மை எதிர்த்துப் பேச விட்டு விட்டீர்களே! நீங்கள் மறவர்களா? என்று தமது ஆதரவாளர்களிடம் முத்துராமலிங்கத் தேவர் கூறியதை நான் கேட்டேன்" என்றார் அவர்.
தேவரே என் தெய்வம்
கீழத்தூவலில் இம்மானுவேலைக் கொன்ற கொலையாளிகளைப் பிடிக்கப்போன போலீசாருடன் மோதிய மறவர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டைப் பற்றி விசாரிக்க அனுப்பப்பட்ட எஸ்.வெங்கடேஸ்வரன் I.C.S. முன்பு ஆஜராக வந்த மக்களை மிரட்டும் வகையில் தேவர், தனது காரினை விசாரணை நடந்த இடத்துக்கெதிரில் நிறுத்தி வைத்து அந்தக் காரிலே அவர் இருந்த செயலையும் பக்தவச்சலத்தின் அறிக்கை அம்மணமாக்கியது.

"In connection with the enquiry by Sri. S. Venkateswaran I.C.S. into the Police firing at keelathooval village through Sri Thevar had orally announced that he and his party would not take part in the enquiry, he seated himself in a car at the entrance of the building where the enquiry was held. This had the effect of preventing witness coming forward to tender evidence which might clash with Sri. Thevar's contentions."
தேவரே என் தெய்வம்
திமுக உறுப்பினர் டாக்டர் சத்தியவாணிமுத்து அம்மையாரின் பேச்சில், 1937 தேர்தலில், ஜஸ்டிஸ் கட்சி வேட்பாளரான ராமநாதபுரம் அரசரை எதிர்த்து நின்றபோது தனக்கு வாக்களிக்காத ஹரிஜனங்களுக்கு அவர் (தேவர்) செய்த பயங்கரக் கொடுமைகள் குறித்தும், அதற்காக அவர் மீது மதுரை அடிஷனல் மேஜிஸ்திரேட் கோர்ட்டில் நடந்த விசாரணையும் வெளிப்பட்டது. டெபுடி தாசில்தார் சிதம்பரம் முதலியாரின் கால் வெட்டப்பட்டதும், சப்-மாஜிஸ்திரேட் ஒருவர் கொல்லப்பட்டதும் தேவரின் தூண்டுதலால் நடந்தது என்பதும் சட்டமன்ற விவாதத்தின்போது வெளியானது.
தேவரே என் தெய்வம்
முதுகுளத்தூர் கலவரத்தில் ஆதிக்க சாதி வெறி தேவர்களிடம், வெட்டுப்பட்டு சாகும்போது கூட தலித்களை சிக்கலில் மாட்டி விட்டு சாகும் அளவிற்கு சாதி வெறி உச்சத்திற்குப் போய் இருந்தது. கலவரத்தில் வெட்டுப்பட்டு சாகப்போகும் சமயத்தில் முத்துராமன் சேர்வை என்ற மறவரிடம் மரண வாக்குமூலம் பெறப்பட்டது. ஒரு மனிதன் சாகும்போது சொல்லும் வார்த்தைகள் பொதுவாக உண்மையாக இருக்கும் என்பது உலகத்தாரிடையே ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று. முத்துராமன் சேர்வையின் மரண வாக்குமூலத்தை அன்றைய உள்துறை அமைச்சர் பக்தவச்சலம் வெளியிட்டார் " நான் ஒரு அரிஜன். அரிஜன வீட்டை நானே கொளுத்தினேன்". அந்த நபர் செத்த பிறகு, பிணத்தை வாங்க வந்தவர்களோ மறவர்கள். இவ்வாறெல்லாம் சாகும்போது கூட ஒருவன், தலித்களை சிக்கலில் மாட்டி விட்டு சாகும் படி, சாதி வெறியேற்றிவிடும் அளவிற்கு அவர்களின் அன்றைய தலைவர் இருந்தார்.

முதுகுளத்தூர் கலவரம் ஆரம்பமாகும் முன்,முத்துராமலிங்கத் தேவர், தன் சாதி மக்களிடம், "தேவர்கள் தேவர் கடைகளில் மட்டுமே சரக்கு வாங்க வேண்டுமென்றும்","நாடார் கடைகளைப் புறக்கணிக்க வேண்டுமென்றும்" கூறி இருந்தார்
தேவரே என் தெய்வம்
"வரும் அக்டோ பர் 28 அன்று யாம் செந்திலாண்டவருடன் சேவற்கொடியேற்றி, வேல் கைப்பிடித்து, மயிலாசனத்தில் வானத்தில் தரிசனம் கொடுப்போம். அப்பொழுது, சென்னை செண்ட் ஜார்ஜ் கோட்டையில் குண்டு வீசி, காமராஜரைக் கைது செய்வோம். பின்னர், டில்லி செங்கோட்டையில் குண்டு வீசி, நேருவைக் கைது செய்வோம்" என்று பேசியதையும்,

"இதோ 50 லட்சம் பேர் கொண்ட படையுடன் நேதாஜி வருகிறார்" என்றும், "திபெத்தில் நேதாஜி நுழைந்து விட்டார்" என்றும்,
"நேபாளில் சுதந்திர சேனை", "சிங்கியங்கில் நேதாஜி" என்றெல்லாம் அளந்து வந்ததையும் என்.ஆர்.தியாக ராஜன் எனும் எம் எல் ஏ சட்டசபையில் பேசி இருக்கிறார்.

"மடியில் அணு குண்டு(??) வைத்திருப்பதாகவும்", "மூன்றாம் உலக யுத்தத்தை முதுகுளத்தூரில் ஆரம்பிப்பேன்(!!!)" என்றும் மேடையில் முழங்கிய தேவரின் பல சவடால்கள் விநோதமாய் இருக்கும்.

"மாக்னெட் நோஸ் (காந்தக் கருவி) ஒன்றை வைத்து சமுத்திரத்தில் உள்ள தண்ணீரையெல்லாம் பனிக்கட்டி ஆக்கி விட முடியும், அதனால் கப்பல்கள் எல்லாம் அங்கங்கே ஸ்தம்பித்துப் போய்விடும் , இதன் மூலம் இங்கிலாந்து அமெரிக்கா சீனா ஆகிய நாடுகளை எல்லாம் நாம் பிடித்து விடலாம்" என்றும் சொன்ன தேவர், இப்படியாப்பட்ட மாக்னெட் நோசை, தன் மடியில் கட்டி வைத்திருப்பதாகவும் சொன்னதுதான் விசேசம்.
தேவரே என் தெய்வம்
இம்மாபெரும் தலைவர் முத்துராமலிங்க தேவர், பல முறை மக்களால் பயம் கலந்த பக்தியுடன் தேர்தல்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட போதிலும், தொகுதி மக்களுக்கு நலத்திட்டங்கள் செய்யப்படுவதை எதிர்த்தவாறுதான் இருந்து வந்துள்ளார்.

காமராஜரின் காலகட்டத்தில் பட்டி தொட்டி எல்லாம் பள்ளிக்கூடங்கள் பெருகியபோது "பள்ளிக்கூடம் எல்லாம் வந்தா எல்லா சாதிப்பயலுகளும் படித்து விட்டு, டவுனுக்குப் போயி இங்கிலீஷ் படித்து விட்டு, நம் ஜாதி ஆட்களுக்கு மரியாதை தராமல் இருப்பார்கள்" என யூகித்து, பள்ளிகள் வருவதை எதிர்த்து வந்தார்.

சட்ட மன்ற உறுப்பினர் சிதம்பர பாரதியின் சட்டமன்ற உரை "அங்கே ரோடு வசதியைப் பெறுவதற்கு முயற்சி செய்யலாம் என்று கூறினால், "இல்லை. ரோடு வேண்டாம். ரோடு வந்தால் ரொம்ப ஆபத்து. நாங்கள் ஏதாவது கோபத்தில் சண்டையிட்டு அடித்துக் கொள்வோம். உடனே போலீசில் புகார் கொடுக்க மாட்டோ ம். பிறகு 4,5 நாட்கள் ஆனவுடன், நாங்களே பஞ்சாயத்து பண்ணிக் கொள்வோம். ஆகவே ரோடு வந்தால் ரொம்ப ஆபத்தாகிவிடும்" என்று தேவரின் ஆதரவாளர்கள் சொல்லியதிலிருந்தே, அவர் தொகுதியில் நடைபெற்ற வளர்ச்சிப் பணியின் யோக்யதை தெரிந்திருக்கும்.
தேவரே என் தெய்வம்
சட்டசபை உறுப்பினர் டி.எஸ்.ராமச்சந்திரன் (1957-62ல் உறுப்பினர்) முதுகுளத்தூர் பிராந்தியத்தில் பயணம் செய்தபோது, மறவர் குலப் பெண்கள், அவரிடம் கேட்ட கேள்வி "ஹரிஜனங்கள் முக்குலத்தாரைப் பெண் கேட்க வந்தார்களாமே? பெண் கேட்க வருவதற்கு அத்தனை துணிச்சலா?" என்பதாய் இருந்தது. இது அப்போதைய கலவரத்தில் பொது மக்களிடையே பரப்பப்பட்ட வதந்திகளில் முக்கியமான ஒன்று. அச்சம்பவத்திற்கு இது வரை ஆதாரம் ஏதும் கிடைக்காதபோதும், ஜாதி இந்து மக்கள் அவ்வதந்தியை இன்னமும் எளிதில் நம்பி உணர்ச்சி வசப்பட்டு, சாதிக் கலவரத்திற்கு தயாராகி விடுகின்றனர்.

அப்படி என்ன வதந்தி அது?
தேவரும், இம்மானுவேல் சேகரும், சமாதானக் கூட்டத்திற்கு வந்தபோது, இம்மானுவே, தேவர் முன்னால் சிகெரெட் பிடித்தபிடி, கால்மேல் கால் போட்டபடி சரி சமமாய் அமர்ந்தாராம். உடனே தேவரய்யாவுக்கு ஜிவ்வென்று கோபம் ஏறி "..க்காளி.. இவனுக எல்லாம் நம்ம கூட சரி சமமா வந்திட்டானுங்க.." என்றாராம். இது இம்மானுவேல் காதில் விழுந்ததும், அவரது ஆதரவாளர்களுடன் பழம்,பூவுடன் சென்று தலித் பையன் ஒருவருக்கு, தேவர் வீட்டுப் பெண்ணைக் கேட்டனராம். காரணம், தேவரே, இம்மானுவேலிடம், மைத்துனனிடம் பேசிடக்கூடிய வசைச்சொல்லான '..க்காளி' என்பதனைப் பேசினாரே என்பதாம்.

கலவரத்தில் எண்ணெய் வார்க்க இந்த வதந்தி பயன்பட்டது.

இதே வதந்தி, சிற்சில மாறுபாடுகளுடன், 1989ல் போடி நாயக்கனூர் பகுதியில் ஜான் பாண்டியனை மையமாக வைத்துப் பரப்பப்பட்டு, கலவரத்தை விசிறி விட்டது.
தேவரே என் தெய்வம்
மிக முக்கியமான பதிவு. இராமனாதபுரம், முதுகுளத்தூர், கமுதி, அருப்புக்கோட்டை
பகுதிகளில் தேவர்(?) பிறந்த நாளை ஒட்டி நடக்கும் இன கலவரங்களை அருகிலிருந்து பார்த்திருந்தால் இது தெரியும். வண்டி வண்டியாய் பசும்பொன்னை நோக்கி இந்த தினத்தில் மக்கள்,
அரசியல் வாதிகள், படையெடுப்பதும் இடையில் தேவேந்திரர்கள் இருக்கும் பகுதிகளுக்குள் புகுந்து
கலகம் செய்வதும், பதிலாக அல்லது ஆரம்பித்து வைக்கும் விதமாக, வண்டிகளின் மீது
தேவேந்திர குலத்தவர்கள் கல்லெறிவது மற்றும் ஆயுதங்கள் எறிவது, அதை தொடர்ந்து அரசின்
ஊரடங்கு உத்தரவு, போலிஸ் பாதுகாப்பு, கண்காணிப்பு ஆகியவை ஒவ்வொரு வருடமும் நடக்கிற
நிகழ்வுகள் தான். இறந்த பின் பல ஆண்டுகள் ஆன பின்பும் கூட வன்முறைகளை நடத்த
மனிதர்களால் முடியும் என்பதற்கு முத்துராமலிங்கத்தின் வரலாறு ஒரு எடுத்துக்காட்டு.
தேவரே என் தெய்வம்
1952-57க்கு இடைப்பட்ட காலத்தில் முத்துராமலிங்கம், முதுகுளத்தூர் தொகுதி எம்.எல்.ஏ. ஆக இருந்தபோது பர்மா நாட்டிற்கு சென்றிருந்தார். அஞ்சாறு மாசமாய் ஆள் பர்மாவிலேயே இருந்து முருகன் புகழைப் பேசியபடியே இருந்து விட்டார். இங்கோ பெருமழையும் புயலும் வந்து ராமநாதபுரம் மாவட்டமே வெள்ளத்தில் மிதந்தது. நிவாரணப்பணிகள் எதனையும் செய்திடவோ, மேற்பார்வையிடவோ தேவர் அங்கில்லை. அமைச்சர் குழுவினர் முதல்வர் காமராஜ் தலைமையில் ஓடியாடி வேலைகளைக் கவனித்தனர். அச்சமயத்தில்தான் ஓர் ஊருக்கு சென்று மக்களை சந்திக்க காமராஜர் வெள்ளத்தில் நீந்திச்சென்ற சம்பவமும் நடந்தது. எல்லாம் முடிந்து இயல்பு வாழ்க்கை திரும்பியபிறகு ஒரு நாள் சாகவாசமாய் பர்மப்பயணம் முடித்த பின்னர், தேவர் ஊர் திரும்பினார். அவருக்கு வரவேற்பும் கொடுத்தார்கள் அவரது அடிப்பொடிகள். ஊர் மக்களிடம் கேட்டார் " எல்லாப்பயலுகளும் வந்தானுங்களா? உதவி செய்யச்சொல்லி, நான் பர்மாவுல நேதாஜிகிட்டே (!! 1950களில்!!) சொன்னேன். அவரு டில்லிக்கு டிரங்கால் போட்டு நேருகிட்டே சொல்லிட்டாரு. அங்கிருந்து காமராஜ்கிட்டே உத்தரவு வந்து, நான் சொன்ன் வேலைகளைச் செஞ்சிருப்பாங்களே!"ன்னு ஒரே போடா போட்டாரு பாருங்க! அதுதான் முத்துராமலிங்க தேவரு.
தேவரே என் தெய்வம்
எங்கெல்லாம் கலவரத்தில் ஈடுபட்டார்களோ அந்த ஊர்களில் தேவர், தேவேந்திரர் ஆகிய இருதரப்பினரிலும் நூற்றுவரைக் கைது செய்தது. சில மறவர் ஊர்களில் ஊர்ப்பெருசுகள், இளைஞர்களை (கலவரத்தில் ஈடுபட்ட) மறைத்து வைத்தனர். அவர்களுடன் பிராமணர் இனத்தவரான டி.எஸ்.பி. (பெயர் மறந்து விட்டது) பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை ஒப்படைக்க வேண்டினார். அப்போது அம்மறவர் இனத்துப் பெருசுகள் சொன்ன பதில்:- "அய்யா, நீங்க சொல்றதுனால நாங்க எங்க பயலுகள ஏன் ஒப்படைக்கிறோம் தெரியுமா? நீங்க பிராமணர். ஒங்களுக்கு நாங்க கீழ்ப்படிஞ்சாத்தான், அந்தப் பசங்க (பள்ளர்) எங்களுக்குக் கீழ்ப்படிவாங்க. அதனாலதான் நாங்க ஒங்க பேச்சுக்குக் கட்டுப்படுறோம்".
தேவரே என் தெய்வம்
தேவரை சுதந்திரப் போராட்ட வீரர் என்று புளுகும் செயல் பற்றி..

தேவர், 1934க்கு பிறகுதான் காங்கிரஸ் கூட்டங்கள், மாநாடுகளுக்கு வர ஆரம்பிக்கிறார். அது அவரின் தவறும் இல்லை.. அப்போது அவரின் இளம்வயதைக் கணக்கில் கொண்டால், அது பெரிய தவறில்லைதான். காங்கிரசின் பெரிய போராட்டங்களில் ஒன்றான உப்புக்காய்ச்சும் சடங்கில் தேவர் கலந்து கொண்டதில்லை. நேரடியாக 1937 தேர்தலில் காங்கிரசு சார்பில் ராமநாதபுரம் அரசரை எதிர்த்து நின்றார். அவர் வெற்றிபெற்றாலும், சில இடங்களில் ஓட்டுபோடாத தலித் மக்களைத் தாக்கிடத் தூண்டுதலாய் இருந்தார். இது சம்பந்தமான வழக்கில் தேவருக்கு பாதகமாய் தீர்ப்பு சொன்ன நீதிபதியின் கால் வெட்டப்பட்டது. ஒரு டெபுடி தாசில்தார் கொல்லப்பட்டார். வெள்ளைக்கார அரசு, தேவர் வாயைத்திறந்து பேசினாலே கலவரம் வருவதால் பேசக்கூடாது என்று உத்தரவு போட்டது. அதன் பின் காங்கிரசும் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் ஈடுபட்டபோதும் அதில் தேவர் கலந்து கொள்ளமுடியவில்லை. ஏனென்றால் அப்போதும் அவர் வாய்ப்பூட்டு சட்டத்தில் சிக்கி இருந்தார். அக்காலகட்டத்தில் தேவர் ஒரு மில் ஸ்டிரைக்கில் கலந்திருந்தார். அப்புறம், சி டி ஆக்டை (குற்றப்பரம்பரை சட்டம்) நீக்க வேண்டும் என்று ஒரு போராட்டம்.

1947ம் வந்து விட்டது.. 1948, 1949 களில் ராமநாதபுரத்தில் சாதிக்கலவரங்கள்... தேவரும் பார்வர்டு பிளாக்கில் 1949ல் ஐக்கியமாகி விடுகிறார். இடைப்பட்ட காலத்தில் 1946 தேர்தலில் எம் எல் ஏ ஆகி, அட்டெண்டன்ஸ் இல்லாததால் தகுதி நீக்கம் ஆகி விட்டார்.

இதுதாம் 1947க்கு முன் தேவரின் நிலை. இதில் தேவர் சுதந்திரப்போராட்டத்தில் எங்கே நிற்கிறார்?
Joe RAbinson
என்னைப்போன்ற இளம் தலைமுறையினருக்கு தொடர்ந்து தேவர் போன்ற மதிப்பிற்குறிய பெரியவர்கள் என அறியப்பட்டவர்களின் உண்மையான முகத்தை அறிந்துகொள்ளும் வாய்ப்பு கிடைக்கும் பொழுது வெறுப்பு மட்டுமே மிஞ்சுகிறது.....! அப்போது இருந்த மக்களை ஏமாற்றி முட்டாளாக்குவது மிக எளிதாக இருந்தது.....ஏமாற்றினர்...ஆனால் இன்றைய கால கட்டத்திலும் ஜாதியை அடையாளமாக்கிக்கொண்டு கோமாளிகளாக திரியும் முட்டாள்களை என்னவென்று சொல்வது....!!!
பசும்பொன்னே கோயில்
'தெலுங்கு தேசமான ஹைதராபாத் நகரத்துக்கு அருகில் நெல்லிமாரலா, நௌபதாதுசி என்னும் கிராமங்களையொட்டி 'கிழுவநாடு' என்று ஒன்று இருந்தது. அங்கிருப்பவர்கள் 'தேவ' என்னும் பட்டம் உடையவர்கள். அய்யனார் தெய்வத்தை வணங்குகிறவர்கள். அய்யனை (குல தெய்வமாக) கொண்ட கூட்டத்தினர். (கூட்டத்திற்கு கோட்டை என்றும் பொருள் உண்டு) இவர்களே 'கொண்டையன் கோட்டை' மறவர்களின் முன்னோர்களாய் இருக்க வேண்டும் எனவும், ஆந்திரப் பகுதியில் இருந்து புலம் பெயர்ந்து ஆப்பநாட்டுப் பகுதியில் குடியேறினர் என்றும் கூறுகின்றார்.'

(தமிழகத்தின் தலைவர்களை வந்தேறிகள் என வாய்க்கூசாமல் பேசிவரும் பெங்களூர் குணாவின் புதிய மாணாக்கர் 'தம்பி' சீமான் இதனை கவனத்தில் கொள்ள வேண்டும்.) - அறிவுக்குயில்

சீமான் இயக்கத்தில், கருணாஸ், தேவர் வேடத்தில் நடிக்க, மிக பிரம்மாண்ட தெலுங்கு படம் 'தேவருல்லூ'

தமிழ் டப்பிங்கும் உண்டு.
Rajesh M Kumar
அருமையான பதிப்பு .. வழுதுக்கல் ..!!
மூவேந்தர் வம்சம்
இந்த பீபீ நாதஸ் மனிதரை பற்றி உங்கள் உண்மையான பதிவுக்கு நன்றி
Guest
அருமயான பதிவு.. இந்த மாதிரி ஒரு கோமாலிய தான் அவிஙக
ஒதூககி பிடிக்கன்கலா... எல்லம் ஓட்டு காக தான்... :-)
guru
u stupid.
kulothungan
ナஅருமையான பதிவுகள்.. தொடர்ந்து ஆதாரங்களோடு சாதி வெறியர்களின் முகத்தை கிழித்தெறிந்து தேவரே என் தெய்வம் என்ற பெயரில் எழுதிய அய்யா.. சாதீயத்தை ஒழிக்க தன் வாழ்நாளெல்லாம் பாடுபட்ட எம் தலைவன் பெரியாரின் மாணவனான நான் தங்களின் பெரும்பணி தொடர வேண்டுமென்று வாழ்த்துகிறேன். சாதி வெறியர் தேவரையும் வணங்கி அவரால் படுகொலை செய்யப்பட்ட அய்யா இம்மானுவேல் சேகரனையும் வணங்குகிறோம்னு ஊரை ஏமாற்ற ஓட்டுப் பொறுக்கிக் கூட்டம் ஒன்னு கிளம்பியிருக்கு.. இது கூளுக்கும் ஆசை. மீசைக்கும் ஆசை கதை.. அதுவோல டார் டாரா கிழிக்கிற மாதிரி இன்னும் நிறைய எழுதுங்கய்யா..
அலெக்ஸ் பாண்டியன்.கொ
கொண்டையன் கோட்டை மறவர்களை பற்றிய ஆசிரியரின் கருத்து முற்றிலும் தவறான வரலாற்று திரிபு வாதமாகும். தேவ எனும் பெயர் கொண்ட அய்யணாரை வழிபடும் மக்கள் அங்கு இருப்பதால் மட்டுமே மறவர்கள் அங்கிருந்து வந்த வந்தேரிகள் என்பது அவரின் மிதமிஞ்சிய கற்பனை திறனை அழகாக வெளிப்படுத்துகிறது. இது மராட்டிய மார்வாடி மக்கள் தமிழகத்தில் இருந்து மராட்டிய மாநிலத்தில் குடியேறியவர்கள் என்பதற்கு ஒப்பானது. மன்னராட்சி காலத்தில் படையெடுப்பின் போது போர் வீரர்களாக தேவர் இன மக்கள் இங்கிருந்து அங்கு சென்று காலப்போக்கில் அங்கேயே நிலை பெற்றார்கள் என்பதுதான் உண்மையாக இருக்கும். இத்தகைய நிலைபெறுதலுக்கு வரலாற்று சான்றுகள் ஏராளமாக உள்ளன. மறவர் இனததின் ஒரு பிரிவே கொண்டையன் கோட்டை மறவர்கள் என்பதை நனைவு படுத்த வரும்புகிறேன். தேவர் இன மக்கள் மன்னர்களாகவும். காவல் வீரர்களாகவும் இருந்ததையும், தமிழ் சங்கங்கள் அமைத்ததையும் ஆசிரியர் படிக்கவில்லை போலும். எனவே ஆசிரியர் என சொல்லிக் கொள்பவர் வரலாற்றை மீண்டும் படித்து கருத்துக்களை பதிவு செய்யுமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன்ஃ
sasi
கீற்று உதை வாங்க போறான்
boopathi
கவுன்டர்கலயும் தேவர்கலயும் தவராக பேச இந்த ஆலுக்கு யார் உரிமையை கொடுத்தது.கொங்கு கவுன்டரயும் தேவர்கலயும் குரி வைத்து தாக்கும் அசிஙமாக இல்லயா உனக்கு???
kongu naatu singam
oru jadhiyai kevalamaha pesi jadhi veri ah thoondividum palakkathai vidungal...thanmanam mikka muthramalinga thevar ah patri pesa thagudhu illai...naan thevanum illai aaanal avar oru nalla manidhar..
தேவரே என் தெய்வம்
* திருநெல் வேலியின் சங்ககால பெயர் 'மருத வேலி'... அதுவே பாண்டியனின் ஆட்சிக்கு உட்பட்ட முக்கிய நகரமாக விளங்கியது. இது வரலாறு.
*'திருநெல் வெளியை' பொறுத்தவரை, மறவர்கள் இராமநாத புரத்தில் இருந்து அங்கு கூட்டம் கூட்டமாய் குடி பெயர்ந்த வந்தேறிகள். இது 'மறவர்களே' ஒத்துகொள்ளும் உண்மை. (நம்பவில்லை என்றால் லின்க் http://thevarkalam.blogspot.in/2010/03/blog-post_7015.html)

பாண்டியன் ஆட்சி செய்யும் போது, அங்கு வந்து குடி ஏறிய வந்தேறிகள் எப்படி 'பாண்டியனாக' இருக்க முடியும்? இது எப்படி தெரியுமா இருக்கு....? 'வடுக படை எடுப்பின்' எச்சமான கருணாநிதி,வைகோ,விஜய காந்த் போன்ற தெலுங்கர்கள், 'தாங்கள் பச்சை தமிழர்கள்' என்று சொல்வதற்கு ஒப்பாகும்...!!!

பாண்டியன் யார் என்பது இருக்கட்டும்...ஆனால் 'மறவர்கள்' கண்டிப்பாக பாண்டியன் கிடையாது...ஆண்ட பரம்பரையும் கிடையாது.....எல்லாம் குல உயர்வு கருதி எவன் அப்பன் வீட்டு பெயரையோ, தனது பெயர் என்று சொல்லும் 'களவு' தனம் மட்டுமே...!!!
தேவரே என் தெய்வம்
தேவர் என்பது ஒரு வகையான பட்டம்...சாதியையோ, இனத்தையோ குறிக்காது என்று தெரிந்ததால் தான் என்னவோ....தாங்கள் தேவர் என்பதற்கு கள்ளன்,மறவன்,அகமுடையான் போன்றோர் ஒரு புது கதையையும் உருவாக்கி வைத்துள்ளனர். என்ன அது?

"சேது பாலம் அமைக்க வந்த இராமன் இவர்களை இராமநாதபுரத்தில் சந்தித்துவிட்டு அவர்களை தேவர் என்று அழைத்தாராம்..."
http://thevarkalam.blogspot.in/2010/03/blog-post_7015.html

............
இதுக்கு எந்த வித ஆதாரமும் கிடையாது? வால்மீகி,கம்பர் என இருவர் எழுதின இராமாயணத்திலும் இப்படி ஒரு சம்பவம் நடந்ததாக எந்த ஆதாரமும் இல்லை.
தேவரே என் தெய்வம்
முதலில் தேவர் என்ற ஒரு சாதியே கிடையாது. இது வரை அப்படி எந்த ஒரு சாதி சான்றிதழும் வழங்கப் பட்டதும் கிடையாது. கள்ளன்,மறவன்,அகமுடையான் என்று மட்டுமே குறிக்கப் படுகிறது. தேவர் என்பது ஒரு பட்டம். அது இடத்திற்கு தகுந்தவாறு சம்பந்தப்பட்டவர்களை காக்கா புடிக்க பார்ப்பனர்களால் உருவாக்கப்பட்ட 'சமஸ்கிருத' வார்த்தை. கோனார்,சீக்கிய குருநானக்,சமணர்கள்,வண்ணான்...ஏன் 'தேவரடியாள்' மகன் கூட 'தேவர்' என்று அழைக்கப் பட்ட வரலாற்றை இந்தியா முழுதும் காணலாம்.(தேவைப் பட்டால் அந்த வரலாறு இங்கே பட்டியல் இடப்படும்.) நிலைமை இப்படி இருக்க 'தாங்கள் மட்டும் தான்' தேவர் என்று கள்ளன்,மறவன்,அகமுடையான் சொல்வது ஏற்புடையாதா என்பதை படிப்பவர்களின் கவனத்திற்கே விட்டுவிடுகிறேன்.
கரடி
நீங்களெல்லாம் இதே வேலையாகத்தான் இருக்கீங்களா? உங்கலு்க்குக்கு யாரு வெட்டியா சாப்பாடு போடறது? @ தேவரே என் தெய்வம், நீங்க ஏன் இப்டி ஜாதி சண்டைய உண்டு பண்ண நினைகிறீர்கள்?இதனால உங்களுக்கு என்ன லாபம்?
தேவரே என் தெய்வம்
என்ன கரடியா கத்தினாலும் சில கரடிங்களுக்கு புரியாது போல....!!!
அதெப்படி சார்....அடிக்க கை ஓங்குறது, அதை தடுக்க கை தூக்குவது --- இது இரண்டுமே உங்களுக்கு வன்முறையா தெரியுது...? இன்னைக்கு வரைக்கும் சாதி வன்முறையை தூண்டிவிடுவது, அதில் குளிர் காய்வது எல்லாம் 'சாதி' இந்துக்களா? இல்லை தாழ்த்தப்பட்டவர்களா?

இங்கு யாம் முன்வைத்த கருத்துகள் எல்லாம் ஏற்க்கனவே ஜீவபாரதி (கம்யூனிஸ்ட்), தினகரன் (இவரும் மறவர் தான். பின்பு உண்மையை சொன்னதற்காக அதே மறவர்களால் கொல்லப் பட்டவர் ), கற்பக விநாயகம் என பலர் எழுதியவை. நினைவில் கொள்ளவும்.
பசும்பொன்னே கோயில்
குருபூஜை என்ற பெயரில், தென்மாவட்டங்களில் சமூக அமைதிக்கு பங்கம் விளைவிப்பது யார்?

பசும்பொன்னுக்கு, போகும் வழியெங்க்கும் குடித்து விட்டு, ரவுடித்தனம் செய்யும் கவாலிகள் செய்வது தான் சாதி ஒற்றுமையை காப்பாற்றுவதா?
jeganathan.a
அரிவுகுயில் கட்டுரைக் காப்பியாகும்.coppy to my work. pl red Muthu kulthur pyankaram.wretern by T.S.Chokalingam.Edit by A.Jegnathan.Kvin Nanpargal Pupliktion(2008)
kalicharan
அறியாதவர்க்கு தேவர் ஜாதி.
புரியாதவர்க்கு தேவர் மனிதன்.
ஏழைகளுக்கு தேவர் தலைவர்.
முற்றும் துறந்த முனிவருக்கு தேவர் துறவி.
தேவரை நினைத்து வணங்குவோருக்கு அவர் கடவுள்.
சில பைத்தியக்கார தெரு நாய்கள் இணையத்தில் ஒரு தேசியத் தலைவரை தவறாக சித்தரிப்பதினால் அவரின் புகழும் தியாகமும் மறைந்து விட போவதில்லை. ஆயிரம் கை கொண்டு மறைத்தாலும் ஆதவன் மறைவதில்லை...
kumar pandian
யாரு என்ன சொன்னலும் தேவர் புகழ் marathu , Poiya kattura eluthuratha niruthhunga :-)
Saravanakumar
ஊடகங்களில் சாதி ஏற்புப் பிரசாரம் தொணிவின்றி நடக்கும் சமயத்தில், ஓர் அருமையான பதிவு... எதிர் வன்முறை தவிர்த்து, சாதி ஏற்பு இளம்சமுதாயத்திடம் பரவாமல் தடுக்க இயன்றதை செய்யவேண்டும்...
mallar vamsam
அய்யா பாண்டியன் மறவர் குலம் என்று சொல்லுனதற்க்கு ஆதாரம் இல்லை...பாண்டியன் மள்ளர் குலம் இன்றைய பள்ளர்கள் அன்றைய மள்ளர்கள் ஆதாரம் வந்தேறிய வடுக நாயக்கர்களால் ஏவப்பட்டு 100 மேலான பள்ளு நூல்கள் ,பள்லேசல் எழுதப்பட்டது (1670 ஆண்டு தொடக்கத்தில் 17 ஆம் நூற்றாண்டு )....இந்த காலங்களில் மூவேந்தர் ஆட்சி முழுவதுமாக முடிவுக்கு வந்தது...திருவள்ளுவர் அய்யன் உழவர்களை பெருமையாகவும் அவர்கலே முதன்மையானவர்கள் என்று அவரது குறளில் (1031 முதல் 1041 ) குறிப்பிட்டுள்ளார் 2000 ஆயிரம் வருடத்திற்கு முன்பே..அப்படி இருக்க நாயக்கர்கள் ஏன் மருத நில தலைக்குடி மக்கள் மள்ளர்களை பள்ளர் ஆக்கி தாழ்த்தினர்? ஆக மள்ளர் (பள்ளர்) தான் சேர,சோழ,பாண்டியர்களின்..மரபினர் என்பதற்க்கு பல கல்வெட்டு,செப்புபட்டயம், கோவில் முதல் மரியாதை.இப்படி பல ஆதாரங்கள் உள்ளது.
Guest
முதலில் இது நடுதரமஆன கட்டுரையே அல்ல... முலுக்க முலுக்க ஒரு பக்க சார்புடைய கட்டுரை ...
Rajendran
அறியாதவர்க்கு தேவர் ஜாதி. புரியாதவர்க்கு தேவர் மனிதன். ஏழைகளுக்கு தேவர் தலைவர். முற்றும் துறந்த முனிவருக்கு தேவர் துறவி. தேவரை நினைத்து வணங்குவோருக்கு அவர் கடவுள். சில பைத்தியக்கார தெரு நாய்கள் இணையத்தில் ஒரு தேசியத் தலைவரை தவறாக சித்தரிப்பதினால் அவரின் புகழும் தியாகமும் மறைந்து விட போவதில்லை. ஆயிரம் கை கொண்டு மறைத்தாலும் ஆதவன் மறைவதில்லை
...
கவுன்டனும் தெவனும் இல்லன நி இருக்கவெ மட்ட
thevan
இப்படியே எழுதுங்க அதுதான் எங்க ஆட்கள் எல்லாரையும் ஒண்ணு சேர்க்க உதவியா இருக்கும்.
Guest
. சில பைத்தியக்கார ****** இணையத்தில் ஒரு தேசியத் தலைவரை தவறாக சித்தரிப்பதினால் அவரின் புகழும் தியாகமும் மறைந்து விட போவதில்லை. ஆயிரம் கை கொண்டு மறைத்தாலும் ஆதவன் மறைவதில்லை.இந்த அறிவுப்பூர்வ கட்டுரை மீண்டும் அருவாள் தூக்க வைப்பதற்கான ஆயுதமாக மாறப்போகிறது. இந்த ஊடகப் பெருமை கீற்றுக்கு கிடைத்தால் மகிழ்ச்சியே(?). கட்டுரையாளரின் (?) புதுக் கண்டுபிடிப்பால் 4 தாலி அறுபட்டால் அதுவே ஊடக தர்மம். வாழ்க கீற்று(?)
rameshpandian55
ஆயிரம் கை கொண்டு மறைத்தாலும் ஆதவன் மறைவதில்லை.இந்த அறிவுப்பூர்வ கட்டுரை மீண்டும் அருவாள் தூக்க வைப்பதற்கான ஆயுதமாக மாறப்போகிறது
raja
namakku kidaitha varalaru parpana,muthalaithuva varkathuku etra maruthi solikodukapatavaikal.Sarithirathai nijamudan poruthi thalivai sonal athai purunjuka sakthi elama alathu than mel jathiyai vitukoduka manasu varatha ---MUTAPASANGULUKU KOVAM VARUM udana matra jathi mela kovapaduvanga.

Apart Kamarajar thn arasiyalai Raja ananmali Chettiyar Bangalow,Vandayar Veedu,Moopanar Thotamunuthan Nadathinar.Avar THANTHAI PERIYARUDAN irunthathuthan avaruku perumai matrapadi India Desiaatha Kattikakura Madhiya Arasangathu Kaikuli Avalavuthan.

Medo Kutaiyo Indaiavalatha Irukku......Tamilan thalial idi erakiya desapakthi Veerar.
செங்கை.சீனிவாசன்
நான் வட தமிழ்நாட்டை சேர்ந்த தமிழன், எனது 25 வது வயதில், தென்மாவட்டங்களுக்கு, தொழில் ரீதியாக சென்றபோது தான், பசும் பொன் தேவரின் சிலைகளை பார்த்தப் போது, தியாகராஜ பாகவதர் சிலை என்று நினைத்து, நண்பரிடம் கேட்டேன். நண்பர் தான் விபரம் சொன்னார்.

ஜெயா டி.வியில், அவரது பிறந்த நாளின் போது ஒலிப்பரப்பட்ட நிகழ்ச்சி மூலம், நேதாஜிக்கு நெருக்கமாக இருந்தவர் என்ற தெரிந்துக் கொண்டேன். அவர் தேசப்பக்தர் என்று நினைத்திருந்தேன்.

இந்த கட்டுரை, தேவரின் தேசபக்த முகமூடியை கழற்றி விட்டது. தேவருக்காக, சாதி ரீதியாக,இக்கட்டுரைக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள், அறிவுப்பூர்வமாக, ஆதாரபூர்வமாக எதிர்ப்பு தெரிவிக்காமல், அவரை தெய்வமாக்கி கூச்சல் தான் கொடுக்கிறார்கள். இவர்களின் மூடத்தனத்தை வளர்த்து,அதில் தெசியதலைவர் என்று குளிர் காய்கிறார்.
Guest
If you wanna write about Thevar .. First you should have Known about him very well.Hope you are not analzing the history... He was always concern about Harijan folks more than Marava's. Still you could see Many Dalits visit his Guru Pooja at Paumpon.

So before written anything about devar & marava's people analyze the hisoty carefully ...

I tell you one thing

Marava people participated all the southern side wars and loosen their lives for all other communties .. Can you show any other community like that ..So always unreliable and gutless folks are blaming that communtiy .. Whatever it is they cant hide Marava's value from the history and no one get that that sigificance in tamilnadu ...

If Marava's people migrate from somewhere how could they became ruler of tamilnadu.. if you guys not a migrant why you could not became a ruler..

because you guys are not having guts and Patriotism .. Even you are not have grade to oppose Marava's community

These guys are try to put others initail but this is thier behaviour.. We cool always... So Keetru is trying to publish unworthy people artilcle and its be caused for communial problem .. Why you guys doinf like this ?
தேவன்
ஆமா, தேவர் மீது வைக்கப்படும் குற்றச் சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்தா அதை உங்கள் இணையத்துல போடுவீங்களா? உங்கள் ஊடக தர்மம் என்ன?
கடுங்கோன் பாண்டியன்
//இப்படியே எழுதுங்க அதுதான் எங்க ஆட்கள் எல்லாரையும் ஒண்ணு சேர்க்க உதவியா இருக்கும்.//

மத்தவங்க எல்லாம் எப்பவோ ஒன்னு சேர்ந்தாச்சு.....இன்னும் சொல்ல போனா அவங்க எப்பவுமே ஒண்ணா தான் இருக்காங்க.....யாரும் யார்கிட்டயும் 'கள்ளன்னு,மரவன்னு' பிரிச்சு பேசாதீங்க...நாம் எல்லாம் ஒன்னு...ஒன்னு...ஒன்னு'ன்னு மூச்சுக்கு முன்னொரு தடவை பொலம்புறது இல்லை....!!!
கடுங்கோன் பாண்டியன்
இந்த முக்குன குல ஆட்கள் அவுத்து உடுற இன்னொரு செம்ம காமெடி விசயம்....முத்துராமலிங்க 'தலித்துகளுக்கு' நண்பனா இருந்தார்... தன்னோட சொத்து பத்தெல்லாம் எழுதி வச்சார்....!!!

* முத்துராமலிங்கத்தோட அடியாளா தான் அந்த 'தாழ்த்தப் பட்டோர்' இருந்தாங்களே ஒழிய, 'மாமன் மச்சான் உறவு முறை' பங்காளியா கிடையாது....அப்படி இருந்தவங்க நிறைய பேரை 'இம்மானுவேல் சேகரன்' திருத்தி வழிப் படுத்தினார் என்பதுவும் வரலாறு....இதை முதலில் புரிஞ்சுக்கணும்....அடுத்தது 'சொத்து பத்து மேட்டருக்கு' வருவோம்...

* தனது சொத்தை 17 பங்கா போட்டு அதை தாழ்த்தப்பட்ட இருவருக்கு இரண்டு பங்கை எழுதி வைத்துவிட்டு, ஒரு பங்கை தனக்கென வைத்துகொண்டு, மீதம் உள்ளதை அவரது சொந்தங்களுக்கே எழுதி வைத்தார் முத்துராமலிங்கம். --- இதுல எங்க நீங்க சொல்ற 'வாரி வளங்குன' கதை வருது.... ஓகோ....அந்த ரெண்டு பங்கு தாழ்த்தப்பட்டவங்களுக்கு கொடுத்ததை சொல்றீங்களா? அப்படின்னா மேல படிங்க...

* அப்படி கொடுத்த அத்தனை சொத்துகளையும் (தனது சொந்தகள் இருவர் நீங்கலாக), மீண்டும் தான் நிறுவிய அறக்கட்டளைக்கு எழுதி தர கோரி, எழுதியும் வாங்கி விட்டார். --- கொடுத்ததை பெருமையா சொல்ற ஆட்க, ஏன் அதை 'கொல்லைபுறமா' திரும்பவும் வாங்குனதை சொல்லல...?

(கோமாளி விவேக் உட்பட்டோர் முத்துராமலிங்க 'கொடுத்ததை' சொல்லும் போது திறக்கும் வாய் , 'அதை அவர் மீண்டும்' வாங்கிகொண்டார் என்று சொல்ல வரும்போது வாயில் கொழுக்கட்டையை வைத்து அடைத்து விடுவார்களோ.... என்னங்கய்யா உங்க நியாயம்....?)
கடுங்கோன் பாண்டியன்
//ஆயிரம் கை கொண்டு மறைத்தாலும் ஆதவன் மறைவதில்லை.இந்த அறிவுப்பூர்வ கட்டுரை மீண்டும் அருவாள் தூக்க வைப்பதற்கான ஆயுதமாக மாறப்போகிறது//

இருக்கலாம்...ஆனால் அந்த அருவாவை யாரு தூக்குவாங்க என்பது தான் கேள்வி....!!!
தேவன்
ஆமா, நீங்களே கட்டுரையும் எழுதிக்கிட்டு நீங்களே பின்னூட்டமும் போடுவீங்களா? தேவரே என் தெய்வம். ஹாஹாஹா
தேவரே என் தெய்வம்
//நீங்களே கட்டுரையும் எழுதிக்கிட்டு நீங்களே பின்னூட்டமும் போடுவீங்களா? தேவரே என் தெய்வம்.//

அது வேற ஒன்னும் இல்ல...மூக்கு கொஞ்சம் போடப்பா இருந்தா இப்படி எல்லாம் யோசிக்க சொல்லும்....ஐயோ பாவம்....அறிவுக்குயில் அவர்களே....பாருங்க இந்த பச்சை மண்ணுகளை...இவ்ளோ அப்பிராணியா இருக்குங்க....!!!
jai
எனக்கு இப்போ வயசு 30 ஆகுதுங்க,இன்னும் 20 வருஷம் உயிரோட இருபேங்க அது நிச்சயம்,ஒரு பெரிய அளவிலான மதக் கலவரமோ அல்லது ஜாதி கலவரமோ ஏற்படணும் அதை ஒரு இந்தியனாக பெருமிதத்துடன் நான் ரசிக்கணும் தமிழர்களின் அழிவை ரசிப்பதில் இந்தியர்களுக்கே முதல் இடம் அது உலகம் அறிந்த உண்மை, ஸ்ரீலங்கா வாழ் தமிழ் மக்களுக்கு நான் ஒரு விஷயத்தை சொல்ல ஆசை படுகிறேன்,தமிழ் நாட்டில் இருந்து வந்து எவரும் உங்களை காப்பாற்ற போவது இல்லை,யாரையும் குறை கூறும் தகுதி எனக்கு இல்லை ஏனெனில் இனப்பற்றில் ஊறித் திளைப்பவன் நான்.
காமிடி கிங் கருணாஸ்
பவித்த சிங்களஞ் தான் ஆளனும்;
தமிழன், மூசுலீம் எல்லாம் வாழலாம் == ராஜபக்சே.


எக்குலமும் வாழனும்;
முக்கிகுலம் தான் ஆளனும்:

இனிமே, நாட்டில, தேர்தலே கிடையாது போல
Thanjai Venkatraj
My Dear Friends, It is clear from the history that Kamarajar was instrumental in making Congress powerful at the Centre. His sound knowledge in Hindi & English was openly admired by Jawaharlal Nehru. Every morning he used to read The Hindu newspaper thoroughly. You can find in google search the photo showing Kamarajar reading The Hindu newspaper. He was a well-known leader all over the nation and he was a close friend of almost all the top leaders in Delhi. Kindly avoid dragging his name into the local caste politics. Bringing historical personalities like Kamarajar into the district level communal quarrels is deplorable!
தேவன்
ஆமா, ஆமா உங்க அறிவுக்கு வருமா? அறிவுக்குயில், ஞானக்குயில். எல்லாம் வரும்.
rameshkannan
நடுநிலை அட்ர சேதிகலை சொல்லி சும்ம இருக்க சங்க ஊதி கெடுக்காதீஙக. உரவை உருவாக்காவிட்டாலும் பரவாயில்லை தயவு செய்து உரவை கெடுக்காதிர்.தேவர் எமக்கு கடவுள் உமக்கு எப்படியோ?
Advocates Digest
இதுமாதிரி ஜாதிக்கு ஒரு தலைவன் பெற வச்சிக்கிட்டு் கூட்டம் கூடி கும்பல் காட்டூர இந்த முட்டாள் கூட்டம் தேசபக்தி பேசுறது தான் செம் காமெடி.
மருத நில தேவன்
இந்த மாதிரி கோமாலி தலைவர்கலை முன்னிறுத்தி தான் வந்தேறிகள் தமிழகத்தை இன்னும் ஆண்டு அழித்து கொண்டு இருகிரர்கள். ஒரு சமுகம் சரியான் தலைவர்கலை தேர்ந்து எடுக்கவில்லை என்ரால் அது அழிவை நோக்கி தான் செல்லும். அது தான் இன்றும் இந்த சமுகத்தின் நிலைமை.
யாதவர்
நான் யாதவர் சமுதாயத்தில் திருநெல்வேலி தட்சனல்லூர் பகுதியை சார்ந்தவன்.நான் பெரும்பாலும் மள்ளர் நன்பர்களுடன பழகி வருவேன். இதனால் இவர்கள் ஜாதியை பற்றியும் இவர்கள் இந்த நாட்டை ஆண்ட முத்தகுடி என்பதையும் தெரிந்துகொண்டேன். இந்த மறவர் குலம் வெல்லைகரன்னுக்கு காட்டிகொடுத்து ஜமீன், பாலயத்து மற்றும் சிற்றூர் தலைவனாக இருந்துகொண்டு, அதற்க்கு முன்பு களவு தொழிழ் செயதது வேறு இவ்வாறு இருக்க ராஜா பரம்பரை என்றும் ஜாதி வெரியை யங்கள் மீது செலுத்தி வந்தார்கள். இவர்களை அடக்குவதற்குயென்ற பிறந்தவர்கள் தான் மல்லர் குலத்தினர் இவர்கள் ரத்ததில் போர் தொழில் இருப்பதால் தான் பொருலாதரத்தில் பிந்தங்கி இருந்தும் இவர்களை எதிர்க்கும் துணிச்சல் இவர்களிடம் உள்ளது. உழைப்பும் வீரமும் உள்ள சமுதாயம் என்று ஒன்று இருந்தால் அது மள்ளர் குலத்தைய சாரும்.
ஈரோட்டுக் கண்ணாடி
Mr.யாதவர்,

நானும் திருநெல்வேலி டவுண் காரன். ஆனால், மனுநீதி தந்த ஜாதியை வெளிக்காட்ட விரும்பாத கருஞ்சட்டைத் தமிழன்.

இங்கு எந்த ஜாதி, பெரிய ஜாதி என்பதல்ல..விவாதம்! பார்ப்பன மனுதர்மத்தின் படி, ஜாதி படிநிலைகளில், அடுக்கி வைக்கப்பட்ட ஜாதிகள்,ஒன்றுக்கொன்று அடித்துக் கொள்வதில் தான் பார்ப்பனீயத்தின் வெற்றியிருக்கிறது. இங்கு, எல்லா ஜாதியிடமும், பற்று என்ற பெயரில் ஜாதி வெறியிருக்கிறது.

தாழையூத்து ஊராட்சிமன்ற தலைவி. கிருஷ்ணவேணி மீது கொலைவெறித்தாக்குதல் நடத்தியது கோனார் ஜாதி வெறி.

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=15863%3A2011-07-29-09-20-29&catid=1352%3A2011&Itemid=599

சிக்கலான, நம் தமிழ் சமூகத்தில், ஜாதிவெறி, பசை,பற்று என எல்லா குப்பைகளையும் தூக்கியெறிந்து விடுவது தான், மக்கள், மக்களாக வாழ சரியான வழி!

அதற்கான, ஒரே மருந்து பெரியார் மட்டுமே.

மருந்து கொடுத்த மருத்துவரை கொச்சைபடுத்தி விட்டு, கிருமிகளின் பின் தமிழ் சமூகம்...ஜாதிச்சண்டையில் தான் சீரழியவேண்டி இருக்கும்.
கடுங்கோன் பாண்டியன்
ஈரோட்டு கண்ணாடி அவர்களே...

ஆக சாதி சண்டைகள் இன்னும் ஒழியவில்லை என்பது உங்கள் வாதத்தில் தெரிகிறது. என்னுடைய கேள்வி இது தான்.
"பார்ப்பனியத்தை ஒடுக்கிய பெரியாரால் ஏன் சாதியை ஒடுக்க முடியவில்லை?"
"முதலில் சாதியத்தை களைந்துவிட்டு தானே பார்ப்பனியத்தை நோக்கி சென்றிருக்க வேண்டும்..? ஏன் பெரியார் ரிவர்ஸ் கியரில் சென்றார்?"
"பார்ப்பனர்கள் தமிழ் சமூத்தை கெடுத்தது பற்றி வாய் கிழிய பேசும் எந்த திராவிடனும், நாயக்கர்கள் காலத்தில் அதே பார்ப்பனர்களை கொண்டு இந்த தமிழ்சமூகத்தை சீரழித்தது பற்றி வாய் திறக்க மறுப்பது ஏன்? சொந்த ரத்த பாசம் தடுக்கிறதோ? உண்மையில் பார்ப்பனர்களை நாயக்கர்களே உயர்த்திப் பிடித்தனர், தமிழ் மன்னர்கள் அல்ல என்று சொல்கிறேன் நான். நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?"
viyasan
///ஆக மள்ளர் (பள்ளர்) தான் சேர,சோழ,பாண்டியர்களின்..மரபினர் என்பதற்க்கு பல கல்வெட்டு,செப்புபட்டயம், கோவில் முதல் மரியாதை.இப்படி பல ஆதாரங்கள் உள்ளது///

ஐயோ! இவ்வ‌ள‌வு நாளும் இந்த‌ப்ப‌க்க‌த்துக்கு நான் வ‌ர‌வேயில்லையே. இந்த‌ச் சாதிச்ச‌ண்டையைப் பார்க்க‌ சிரிப்பு வ‌ந்தாலும் கூட‌, இதில் என்னுடைய‌ ப‌ங்குக்கும் ஏதாவ‌து சொல்லிக் குட்டையைக் குழ‌ப்பாது விட்டால் என‌க்கு த‌லைவெடித்து விடும் போலிருக்கிற‌து. உண்மையில்த‌மிழ்நாட்டிலுள்ள‌
தேவ‌ர்க‌ள், க‌ள்ள‌ர்க‌ள், ம‌ள்ள‌ர்க‌ள், ப‌ள்ள‌ர்க‌ள், சுள்ள‌ர்க‌ள், நொள்ள‌ர்க‌ள் எல்லாம் சோழ‌ர்க‌ளே அல்ல‌. அவ‌ர்க‌ள் எவ‌ருமே ஆண்ட‌ப‌ர‌ம்ப‌ரையின‌ரும‌ல்ல‌. சோழ‌ர்க‌ள் உண்மையில் யாழ்ப்பாண‌த்து வெள்ளாள‌ர்க‌ளின் முன்னோர்க‌ள். சோழ‌ என்ற‌ சொல்லே சோறு >சோற‌ > சோட‌ (தெலுங்கில்) > சோழ‌ (ச‌மக்கிருத‌த்தில்). ல‌, ற‌, திரிபு ச‌ரித்திர‌த்தில் ஏற்றுக்கொள்ள‌ப்ப‌ட்ட‌ ம‌ருவ‌ல்க‌ளில் ஒன்று. சோறுடைய‌ நாடு, சோழ‌நாடாகிய‌து அதை ஆண்ட‌வ‌ர்க‌ள் சோழ‌ர்க‌ள். அப்ப‌டியானால் சோறு அல்ல‌து நெல் உற்ப‌த்திக்கு யார் பொறுப்பான‌வ‌ர்க‌ள்,வேளாள‌ர்க‌ள் அவ‌ர்க‌ள் தான் நிலச்சொந்த‌க்கார‌ர்க‌ள் அல்ல‌வா. நில‌ங்க‌ளுக்குச் சொந்த‌க்கார‌ர்க‌ள் தான் ஆள‌முடியுமே த‌விர‌, அந்த‌ நில‌த்தில் வேலை செய்த‌ ப‌ள்ள‌ர்க‌ளும் ம‌ள்ள‌ர்க‌ளும், க‌ள்ள‌ர்க‌ளும் ஆட்சியாள‌ர்க‌ளாக‌ இருக்க‌வே முடியாத‌ல்ல‌வா. அத‌னால் சோழ‌ர்க‌ள் நிச்ச‌ய‌மாக‌ வேளாள‌ர்க‌ள் தான், இருந்தாலும் அதை விரிவாக‌ப் பார்ப்போம், ராஜ‌ ராஜ‌ சோழ‌னின் தாய்க்கு என்ன‌ பெயர், வான‌வ‌ன் மாதேவி, அவ‌ர் வேளிர்குல‌ப்பெண். வேளிர்க‌ள், யாழ்ப்பாண‌ வெள்ளாள‌ர்க‌ளின் முன்னோர்க‌ள். யாழ்ப்பாண‌த்தில் பூன‌க‌ரியில் க‌ண்டுபிடிக்க‌ப்ப‌ட்ட‌ கி.மு 2ம் நூற்றாண்டு ம‌ட்பாண்ட‌ங்க‌ளில் பண்டைய‌ எழுத்துக்க‌ள் உள்ள‌ன‌, அதில் குறிப்பிட‌ப்ப‌ட்டுள்ள‌ குடிக‌ளின் தலைவ‌னுக்குப் பெய‌ர் வேள‌ன் . அதாவ‌து கி.மு 2ம் நூற்றாண்டுக்கு முன்ன‌தாக‌வே த‌மிழ் வேளிர்க‌ள் இல‌ங்கையில் பூர்வ‌குடிக‌ளாக‌ வாழ்ந்த‌ன‌ர். அடுத்த‌தாக‌ ராஜ‌ ராஜ சோழ‌னின் மெய்க்காவ‌ல் ப‌டையின‌ர் வேளிர் குல‌த்தின‌ர் என்ப‌தை யாவ்ரும் அறிவ‌ர்,யாரும் உயிருக்கு ஆப‌த்து வ‌ரும்போது தாய்வ‌ழிச்சொந்த‌த்தைத் தான் கூடுத‌லாக‌ ந‌ம்புவார்க‌ள். அதை விட‌ நாங்க‌ள் த‌மிழ‌ர்க‌ள் தாய்வ‌ழிமுறையான‌வ‌ர்க‌ள் அல்ல‌வா? யாழ்ப்பாண‌த்தில் அந்த‌ வ‌ழ‌மை இன்றும் தீவிர‌மாக‌ ந‌டைமுறையிலுண்டு. ராஜ‌ ராஜ‌ சோழ‌னும், ராஜேந்திர‌ சோழ‌னும் இல‌ங்கைக்குப் படையெடுத்த‌ போது பெரும்பாலான‌ வேளிர்க‌ளும், வேளாள‌ர்க‌ளும் ப‌டைவீர‌ர்க‌ளாக‌ இல‌ங்கைக்குச் சென்ற‌ன‌ர். இன்று பொல‌ன‌றுவை என‌ இல‌ங்கையில் அழைக்க‌ப்ப‌டும்
புலைந‌ரி அல்ல‌து ச‌ன‌நாத‌ம‌ங்க‌ல‌ம் என்ற‌ ந‌க‌ர‌ம் சோழ‌ர்க‌ளால் க‌ட்ட‌ப்ப‌ட்ட‌து. இஸ்லாமிய‌ ப‌டையெடுப்பினால் சோழ‌ர்க‌ளின் ஆட்சி வீழ்ச்சிய‌டைந்த‌தும், இல‌ங்கைக்குச் சென்ற‌ வேளிர்க‌ளும், வேளாள‌ர்க‌ளும் அங்கு ஏற்க‌ன‌வே இருந்த‌ வேளாள‌ர்க‌ளுட‌ன் இணைந்து அங்கேயே த‌ங்கி விட்ட‌ன‌ர். அதை விட‌ ப‌க்திக்கால‌த்தில் சைவ‌ வேளாள‌ர்க‌ளுட‌ன் ஒத்துழைத்து, ச‌ம‌ண‌ர்க‌ளையும், பெளத்தர்க‌ளையும் ப‌த‌ம் பார்த்த‌ பார்ப்ப‌ன‌ர்க‌ள், சோழ‌ர்க‌ளின் வீழ்ச்சியின் பின்னால், தெலுங்கு விஜ‌ய‌நக‌ர‌ ஆட்சியிலும் நாய‌க்க‌ர்க‌ளின் ஆட்சியிலும் அவ‌ர்க‌ளுக்கு வால் பிடித்து, அதாவ‌து இப்பொழுது முஸ்லீம்க‌ள் இல‌ங்கையில் செய்வ‌து போல், வெள்ளாள‌ர்க‌ளின் முதுகில் குத்தின‌ர். அத‌னால் இன்றும் யாழ்ப்பாண‌ வெள்ளாள‌ர்க‌ள் பார்ப்ப‌ன‌ர்க‌ளை ந‌ம்பிக் கோயிலைக் கொடுப்ப‌தில்லை, கோயில் சாவியை அவ‌ர்களே வைத்துக் கொண்டு, பார்ப்ப‌ன‌ர்களைக் க‌ருவ‌றைக்கும், ம‌ட‌ப்ப‌ள்ளிக்குமிடையில் ம‌ட்டும் அலைய‌ விடுவார்க‌ள். அதை விட‌ விஜய‌ந‌க‌ர‌ கால‌த்தில் வேளாள‌ர்க‌ளின் நில‌ங்க‌ளையெல்லாம் ப‌றித்து தெலுங்க‌ர்க‌ளான‌ ரெட்டிக‌ளுக்கும், நாய‌க்க‌ர்க‌ளுக்கும் கொடுத்து விட்டார்க‌ள்.அத‌னாலும் ப‌ல‌ வெள்ளாள‌ர்க‌ள் யாழ்ப்பாண‌த்துக்குக் குடியேறின‌ர். இன்றும் செம்பிய‌ன்ப‌ற்று போன்ற‌ சோழ‌ர்களின் பெயர்க‌ளைக் கொண்ட‌ ஊர்க‌ள் யாழ்ப்பாண‌த்திலுண்டு. சோழ‌ர்க‌ள் யாழ்ப்பாண‌த்து வெள்ளாள‌ர்க‌ள் என்ப‌தால் தான், சோழ‌ர்க‌ளின் வீழ்ச்சியின் பின்னால், அவ‌ர்க‌ளை சோழ‌ர்க‌ளின் எதிரிக‌ள் துன்புறுத்தியிருக்க‌ வேண்டும். சோழ‌ர்க‌ள் தேவ‌ர்க‌ளும், ப‌ள்ள‌ர்க‌ளும், ம‌ள்ள‌ர்க‌ளும், நொள்ள‌ர்க‌ளும், சுள்ள‌ர்க‌ளுமாக‌ இருந்தால் அவ‌ர்க‌ளையும் துன்புறுத்தியிருப்பார்க‌ள், அவ‌ர்க‌ளும் PILGRIMSஇங்கிலாந்திலிருந்து, அர‌ச‌ கொடுமைக‌ளிலிருந்து த‌ப்புவ‌த‌ற்காக‌ அமெரிக்காவுக்குப் போன‌து போல் யாழ்ப்பாண‌த்துக்கு ஓடியிருப்பார்க‌ள‌ல்லவா? ஆனால் க‌ள்ள‌ர்க‌ளும், ம‌ற‌வ‌ர்க‌ளும், தேவ‌ர்க‌ளும், ம‌ள்ள‌ர்க‌ளும் யாழ்ப்பாண‌த்தில் கிடையாது. அத‌னால் சோழ‌ர்க‌ள் யாழ்ப்பாண‌த்து வெள்ளாளார்க‌ளே என்ப‌து தெளிவாகிற‌த‌ல்ல‌வா? அதை விட‌ ராஜ‌ ராஜ‌ சோழ‌ன் த‌ன‌து தாயின் நினைவாக‌ வான‌வ‌ன்மாதேவி ஈச்ச‌ர‌முடையார் என்ற‌ கோயிலை தன‌து ப‌ர‌ந்த‌ பேரர‌சில் எங்கும் க‌ட்டாது எதற்காக‌ இல‌ங்கையில் க‌ட்டினான். ஏனென்றால் இல‌ங்கையில் தான் அவ‌ர‌து தாய்வ‌ழிச் சொந்த‌ங்க‌ள் வாழ்கின்ற‌ன‌ர். அத‌னால் அங்கு க‌ட்டுவ‌து தான் முறையாகுமல்ல‌வா?

இதில் நான் சொல்ல‌வ‌ருவ‌தென்ன‌வென்றால் த‌மிழ‌ர்க‌ள் அனைவ‌ருமே எம‌து முன்னோர்க‌ளாகிய‌ சேர‌, சோழ‌, பாண்டிய‌ர்க‌ளைச் சொந்தம் கொண்டாட‌லாம். எல்லோரும் இப்ப‌டி ப‌ல‌ கார‌ண‌ங்களை உண்மையாக‌வும், திரிபு ப‌டுத்தியும் கூற‌லாம். அத‌னால் அவ‌ர்க‌ளைக் சொந்த‌ம் கொண்டாடி ஆளுக்காள் அடிப‌டுவ‌தை விட்டு, வேலையைப் பாருங்க‌ள். (இதைப்பார்த்துவிட்டு நான் ஆதிக்க‌சாதி, அது, இது ஆட்டுக்குட்டி என்றெல்லாம் சில‌ர் என‌க்கெதிராக‌ப் போர்க்கொடி தூக்கினாலும், தூக்குவார்க‌ள் அத‌ற்கு நான் பொறுப்ப‌ல்ல‌, :-) என‌க்கு சாதியில் ந‌ம்பிக்கை கிடையாது.
cheralathan
Please read the works of thevar in the legislative assembly.Also read parlimentary spech. Muthugulathur kalavarthil congress, kamarajin pangu patri ariyunkal.Immanuvel kollappattathu sep.11. 13 septemparil kamaraj then maavatta kaavalthurai uyar athikarikalai santhikirar. Sep.14 Ray keelathoovalil 4 maravarkalai sutuk kolkkiran. Arasa vanmurai patri vaai thirakkaamal irupathan marmam enna? sinthiyunkal.
cheralathan
singangal thangal varalrukalai pathivu seyyatha varai varalaru vettaikaranin pugalaithan paadikkondirukkum
அலெக்ஸ் பாண்டியன். கொ
அந்த பெரியாரால் தான் நாம் கல்வி கற்க பள்ளி க்கு சென்று, சமமாக மனிதர்களாக மதிக்கப்பட்டு, மேதாவிகளாக பேசும் உரிமையும் பெற்றோம் என்பதை மனதில் வைத்து பெரியாரை பற்றி விமர்சனம் செய்யுங்கள். பெரியார் ரிவர்ஸ் கியரில் பயணித்து தான் சமுகத்தை முன்னேற்றினார் எனில் முன்னேற்றத்தில் தவறு இல்லை. நீங்கள் வேண்டுமானால் டாப் கியரில் சமுக முன்னேற்றத்தை ஏற்படுத்திவிட்டு பெரியாரை பற்றி விமர்சியுங்கள். நீங்கள் டாப் கியரில் இலக்கை அடைவதற்கான தவறான எதிர் திசையில் சரியாக பயணிக்கிறீர்கள். பெரியார் அன்றே கூறிவிட்டார் இன்னும் 50 ஆண்டுகளில் தனது கோட்படுகளை தவறு என கூறுவார்கள். ஒரு வேளை எனது தற்போதைய கோட்பாடுகள் அந்த கால சூழ்நிலைக்கு தவறாக படலாம் என்றார். அவரின் காலத்தில் அவரால் இயன்றதை இந்த சமுகத்திற்கு செய்திருக்கிறார். நீங்கள் இந்த சமுகத்திற்கு என்ன செய்துவிட்டீர்கள் பெரிதாக பெரியாரை விமர்சிக்க வருகிறிர்கள். எங்கே உங்கள் சமுக சீர்திருத்த பணிகளை இங்கே பட்டியலிடுங்கள் பார்ப்போம். எனவே பெரியாரை விமர்சிப்பதை விட்டு விட்டு அவரின் தொண்டினை போற்ற வேண்டும்.
கடுங்கோன் பாண்டியன்
@viyasan:
மூவேந்தர்களின் வரலாற்றை நீங்கள் யாரில் இருந்து ஆரம்பிக்கிறீங்க? சோழனில் இருந்தா? நீங்க உங்க தரப்பை மட்டுமே சொல்லிவிட்டு, அடுத்ததை கேக்காம இருந்தா எப்படி? மூவேந்தர்களில் மூத்தவன் 'பாண்டியன்'. இன்னைக்கு தான் அது இந்தியா. அவன் காலத்தில் 'நாவலந்தீவு'. கடலில் அமிழ்ந்த குமரிக்கண்டத்தில் உள்ள தென்மதுரையே பாண்டியனின் தலை நகரம். பாண்டியனுக்கு பின்னர் வந்தவர்கள் தான் சோழன், சேரன் எல்லாம். 'பாண்டியன்' என்ற பெயர் எப்படி வந்தது என்று தெரியுமா? 'பாண்டி' என்றால் என்ன அர்த்தம் என்றாவது தெரியுமா? 'பாண்டியம்' என்றால் என்ன அர்த்தம் என்று தெரியுமா? இதற்க்கு பதில் சொல்லிவிட்டு 'சோழனுக்கு' செல்லுங்கள்...!!!
viyasan
//'பாண்டி' என்றால் என்ன அர்த்தம் என்றாவது தெரியுமா? 'பாண்டியம்' என்றால் என்ன அர்த்தம் என்று தெரியுமா? இதற்க்கு பதில் சொல்லிவிட்டு 'சோழனுக்கு' செல்லுங்கள்...!!!//

க‌டுங்கோன்பாண்டிய‌ன் அவ‌ர்க‌ளே,

ந‌ல்ல‌து, நீங்க‌ள் சொல்லுங்க‌ளேன் கேட்போம். என‌து நோக்கம் ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ள் அல்ல‌து யாழ்ப்பாண‌ வெள்ளாள‌ர்க‌ள் ம‌ட்டும் தான் சோழ‌ர்க‌ளின் ப‌ர‌ம்ப‌ரையின‌ர் என்று வாதாடுவ‌த‌ல்ல‌. அப்ப‌டி தீர்க்க‌மாக‌ யாராலுமே, இக்கால‌த்து குறிப்ப்பிட்ட‌ சாதியின‌ர் மட்டும் தான் மூவேந்த‌ர்களின் வ‌ழி வ‌ந்த‌வ‌ர்க‌ள், உய‌ர்ந்த‌வ‌ர்க‌ள், ஏனைய‌ த‌மிழ‌ர்க‌ளெல்லாம் குறைந்த‌வ‌ர்க‌ள் என யாராலும் நிரூபிக்க‌ முடியாது. அத‌ற்குப் ப‌ல‌ கார‌ண‌ங்க‌ளுண்டு, த‌மிழ‌ர்க‌ள் எழுத்து வ‌டிவில் ம‌ற்ற‌ இன‌ங்களைப் போன்று வ‌ர‌லாற்றைக் குறித்து வைத்துச் செல்ல‌வில்லை. சோழ‌ர்க‌ள், அதிலும் ராஜ‌ ராஜ‌ சோழ‌ன் தான் ஒவ்வொரு விட‌யத்தையும் ஒன்று விடாமல் க‌ல்வெட்டில் ப‌தித்து விட்டுப் போன‌ த‌மிழ‌ரச‌ர்க‌ளில் முத‌ன்மையான‌வ‌ன். ப‌ல‌ நூற்றாண்டுக‌ள் த‌மிழ‌ர‌ல்லாதாரின் ஆட்சி எங்க‌ளின் வ‌ர‌லாற்று அடையாள‌ங்க‌ளைச் சிதைத்து விட்ட‌து. திட்ட‌மிட்டு ஓலைச்சுவ‌டிக‌ள், த‌மிழெதிரிக‌ளால் அழிக்க‌ப்ப‌ட்டு விட்ட‌ன‌. மற்ற இன‌ம‌க்களைப் போல், குடும்ப‌ பெய‌ர்க‌ளின‌டிப்ப‌டையில் ப‌ல‌ த‌லைமுறைக‌ளைத் தேடுவ‌த‌ற்கும், பெரும்பான்மையான‌ த‌மிழ‌ர்க‌ளிட‌ம் ஒரு த‌லைமுறைக்கு மேல் குடும்ப‌பெயரைத் தொட‌ரும் வ‌ழ‌க்க‌ம் கிடையாது. பெயரை வைத்து இன்னாருடைய‌ ம‌க‌ன் என ஒரு த‌லைமுறையை ம‌ட்டும் தான் கூற‌முடியும். அத‌னால் இக்கால‌த்தில் யாரும் த‌ம‌க்கு ம‌ட்டுமென‌ சேர‌, சோழ‌ பாண்டிய‌ர்க‌ளை உரிமை கொண்டாட‌வும் முடியாது, அதை நிரூபிக்க‌வும் முடியாது. அத‌னால் எம‌து த‌மிழ் முன்னோர்க‌ளும், அவ‌ர்க‌ளின் புக‌ழிலும், பெய‌ரிலும், அவ‌ர்க‌ள் விட்ட‌ த‌வ‌றுக‌ளிலும் கூட‌ த‌மிழ‌ர்க‌ள் எல்லோருக்கும் ப‌ங்குண்டு என்ப‌தை எடுத்துக் காட்டுவ‌த‌ற்காக‌த் தான், நாங்க‌ள் ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ள் கூட‌, சோழ‌ர்க‌ளின் வாரிசுக‌ள் என‌ சொந்த‌ம் கொண்டாட‌லாம் என்ப‌தை சுட்டிக் காட்டேனே த‌விர‌, நாங்க‌ள் ம‌ட்டும் தான் சோழ‌ர்க‌ளைச் சொந்த‌ம் கொண்டாட‌லாம் என‌ நான் கூற‌வில்லை. அதை விட‌, த‌மிழ்நாடு ப‌ல‌நூற்றாண்டுகளாக‌ தெலுங்க‌ர்க‌ள், க‌ன்ன‌ட‌ர்க‌ள், ப‌ல‌ த‌மிழ‌ர‌ல்லாத‌ இந்திய‌ர்க‌ளின் ஆதிக்க‌த்தின் கீழிருந்த‌து, எத்த‌னை க‌ல‌ப்பு ந‌ட‌ந்த‌தோ யாருக்குத் தெரியும். எவ்வாறு சோழ‌ர்க‌ளுக்கும் ஈழ‌த்துக்கும் தொட‌ர்புண்டோ அதே போல் பாண்டிய‌ர்க‌ளுக்கும், சேர‌ர்க‌ளுக்கும் ஏன் சிங்க‌ள‌வ‌ர்க‌ளுக்கும் கூட‌த் தொட‌ர்புண்டு. சிங்கள‌வ‌ர்க‌ளால் ச‌க்க‌ர‌வ‌ர்த்தியாக‌ப் புக‌ழ‌ப்ப‌டும் சிங்க‌ள அர‌ச‌ன் ப‌ராக்கிர‌ம‌பாகு, சிங்க‌ள் இள‌வ‌ர‌சிக்கும், தமிழ்ப் பாண்டிய‌ இள‌வர‌ச‌னாகிய மானாபார‌ண‌பாண்டிய‌னுக்கும் பிற‌ந்த‌வ‌ன். ஆனால் நீங்க‌ள் என்னுடைய‌ க‌ருத்தைப்ப‌ற்றி வாதாட‌ப் போவ‌தாக அட‌ம்பிடிப்ப‌தால், நான் ஏன் சோழ‌ர்க‌ளை உதார‌ணமாக‌ எடுத்தேன் என்ப‌தைப் பார்ப்போம். கும‌ரிக்க‌ண்ட‌த்துக்கான‌ ஆதார‌ங்க‌ள் க‌ட‌லுக்க‌டியிலும், ச‌ங்க‌கால‌ப் பாடல்க‌ளிலும் இருந்தாலும் கூட‌, க‌ட‌ந்த‌ 2000 ஆண்டுகால‌ த‌மிழ‌ர்க‌ளின் வ‌ர‌லாற்றை அதிலும் ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ளின் வ‌ர‌லாற்றை தெளிவாக‌, கும‌ரிக்க‌ண்ட‌த்தை விட‌ இல‌குவாக‌, எளிதாக‌ நிரூபிக்க‌ முடியும் அதனால் தான் சோழ‌ர்களிலிருந்து தொட‌ங்கினேன். யாழ்ப்பாண‌ வேளாள‌ர்க‌ளின் ம‌ட்டும‌ல்ல‌, வேளாள‌ர்க‌ள் அனைவ‌ர‌தும் முன்னோர்க‌ளாக‌க் க‌ருத‌ப்ப‌டும் வேளிர் குல‌ம், இராஜ‌ இராஜ‌னின் கால‌த்திலிருந்து உருவாக‌வில்லை. அவ‌ர்க‌ள் முற்கால‌ச் சோழ‌ர் கால‌த்திலேயே உள்ள‌ன‌ர், த‌மிழ‌ர்க‌ளில் மிக‌ப்ப‌ழ‌ங்குடியின‌ர்க‌ள் வேளிர்க‌ள். அவ‌ர்க‌ளைப் ப‌ற்றி அசோக‌ ச‌க்க‌ர‌வ‌ர்த்தியில் க‌ல்வெட்டுக்க‌ளும், அவ‌ர்க‌ள் சுத‌ந்திர‌ ஆட்சியைக் கொண்டிருந்த‌வ‌ர்க‌ளாக‌க் குறிக்கின்ற‌ன‌. இராஜ‌ இராஜ‌ சோழனின் தாயார் ம‌ட்டும‌ல்ல‌, க‌ரிகால‌ சோழ‌னின் தாயார் கூட‌ வேளிர்குல‌ப் பெண் தான் அதைவிட‌ இல‌ங்கையை கி.மு 2ம் நூற்றாண்டில் ஆண்ட‌ எல்லாள‌ன் அல்ல‌து ஏலேல‌ சோழ‌ன் கூட‌ வேளிர் குல‌த்த‌ர‌ச‌னே. அத‌னால் தான் ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ள் வேளாள‌ர்க‌ளின் முன்னோர்க‌ளாகிய‌ வேளிர் குலத்தில் வ‌ந்த‌ சோழ‌ர்க‌ள் என‌க் குறிப்பிட்டேன். ஆனால் நான் இதையெல்லாம் கூறிய‌த‌ற்குக் கார‌ண‌ம் மூவேந்த‌ர்க‌ளைச் சொந்த‌ம் கொண்டாடி சாதிச்சண்டை பிடிப்பது வெறும் வீண் செய‌ல், அவ‌ர்க‌ளைத் த‌மிழ‌ர்க‌ள் எல்லோரும் இப்ப‌டி ஏதாவது ஆதார‌ங்க‌ளைக் காட்டிச் சொந்த‌ம் கொண்டாட‌லாம் என்ப‌தைக் காட்ட‌த் தான் , ஆனால் நீங்க‌ள் தும்பை விட்டு வாலைப் பிடித்து விட்டீர்க‌ள் போல் தெரிகிற‌து.
அலெக்ஸ் பாண்டியன். கொ
கடுங்(கோல் மால்) சகோதரனே ! பெரியாரின் ரிவர்ஸ் கியரை வண்டி பற்றி பேசினீர்களே, உங்கள் டாப் கியர் வண்டி செயல் இழந்து விட்டதா? உங்களின் சமுதாய சீர்திருத்த பணிகளை பட்டியலிடவும்,
ஈரோட்டுக் கண்ணாடி
தோழர் கடுங்கோன் பாண்டியன்,

சாதியை ஒழிப்பு பற்றி கேட்கப்பட்ட கேள்விக்கு, அண்ணல் அம்பேத்காரின் பதில் இது தான்.

மதம் ஒழியாதவரை,
கடவுள் ஒழியாதவரை,
சாதியும் ஒழியாது.

பெரியாரும், அம்பேத்காரும் ஒரே மாதிரியாக சிந்தித்தனர்.

அம்பேத்காரும், பெரியாரும் பார்ப்பனீயத்தை ஒழிப்பதில் தான் தீவிரம் காட்டினார்கள். அது தான் ஜாதி ஒழிப்பிற்கான வழியாகவும் தேர்வு செய்தனர்.

பெரியார், தேஷாபிமானம், பாஷாபிமானம் கூட இல்லாதவர். அவரிடம் ஜாதி அபிமானம் தேடுவது தேவையில்லாதது.

பெரியார், பார்ப்பனர்களுக்கு, கோதானம்,பூதானம், என்று வர்ணாஸ்ரமத்தின் காலடியில் கிடந்த அனைத்து மன்னர்க்ளையும், பார்ப்பன அடிமைத்தனத்திற்கு வழி செய்த கம்பன் உள்ளிட்ட எல்லா தமிழ் புலவர்களையும் அம்பலப்படுத்தியவர்.

பெரியாரிடம் இனப்பார்வை தான் உண்டே தவிர, ஜாதிப்பாரவை கிடையாது.

தோழர், பெரியாரை படித்து விமர்சியுங்கள். அவரை விட, தமிழ் சமுதாயத்தை உயர்த்திய தலைவரை, பரிந்துரையுங்கள்.

ஏற்றுக்கொள்ள பெரியார் தொண்டர்கள், அணியமாக இருக்கிறார்கள்.

ஆனால், பெரியார் கன்னடர்; பிற்படுத்தப்பட்ட மக்களுக்கே உழைத்தவர். அம்பேத்கார் தாழ்த்தப்பட்ட மக்களின் தலைவர் என்ற குறுகிய வட்டம் தேவையில்லையே!
கடுங்கோன் பாண்டியன்
இலக்கிய வழக்கு - உலக வழக்கு
பாண்டி - எருது
பாண்டியம் - விவசாயம்
பாண்டியன் - உழவர்களின் தலைவன்.

மூவேந்தரில் மூத்தவன் பாண்டியன். வரலாறை அங்கே இருந்து தான் ஆரம்பிக்க வேண்டும். அதை விடுத்து குலோத்துங்க சோழனுக்கு முன்பு, பின்பு என்று தனக்கு தோதாக உள்ள சோழ வரலாற்றில் இருந்து மூவேந்தர் வரலாற்றை ஆரம்பிப்பது அழகல்ல. பாண்டியன் தனது முன்னோர் என்று இங்கே வாதிடும் எவரும் அதற்க்கான குறைந்த பட்ச ஆதாரங்களை இங்கே தருமாறு வேண்டுகிறேன்.
கடுங்கோன் பாண்டியன்
பெரியார் பார்ப்பனியத்தை எதிர்த்தார்....ஒகே....
எந்த பார்ப்பனர் மற்றொரு நாட்டின் மீது படை எடுத்தார்கள்?
தமிழகத்தில் வடுக ஊடுருவலுக்கு முன்பு பார்ப்பனர்கள் இருந்தார்களா? அவர்களின் அப்போதைய நிலை என்ன? வடுக ஊடுருவலுக்கு பிங்கு பார்ப்பனர்களின் நிலை என்ன, மண்ணின் மைந்தர்களின் நிலை என்ன? வெறுமனே பார்ப்பனியம் மட்டுமே பேசும் திராவிட யோக்கிய சிகாமணிகள், ஏன் அந்த பார்ப்பனியத்தை தூபம் போட்டு உள்ளே இழுத்து வந்த தங்கள் முன்னோரை பற்றி பேசுவதில்லை? வடுகன் இங்கே வராமல் இருந்திருந்தாலோ, பார்ப்பனியம் செழுமை அடைமாமல் இருந்திருந்தாலோ, பெரியாருக்கு வேலையே இல்லையே...? வயித்துல குத்துனது நான் தான், காயம் போடுறதும் நான் தான். காயத்துக்கு மருந்து போடுறதை பத்தியே பேசும் நீங்கள், குத்தினது யாரு என்று ஏன் பேச மறுக்குறீங்க?
viyasan
//குலோத்துங்க சோழனுக்கு முன்பு, பின்பு என்று தனக்கு தோதாக உள்ள சோழ வரலாற்றில் இருந்து மூவேந்தர் வரலாற்றை ஆரம்பிப்பது அழகல்ல.///

க‌டுங்கோன் பாண்டிய‌ன்,

உங்க‌ளுக்கு கேள்வி கேட்க‌ ம‌ட்டும் தான் தெரியும் போலிருக்கிற‌து. பாண்டிய‌ர் என்ற‌ பெய‌ருக்கு விரிவான விள‌க்க‌ம் த‌ருவ‌து ம‌ட்டும‌ல்ல‌, நீங்க‌ள் தான் பாண்டிய‌ர்க‌ளின் நேர‌டி வாரிசுகள் என்ப‌தையும் ஆதார‌ங்க‌ளுட‌ன் காட்டுவீர்க‌ளென எதிர் பார்த்தேன். ஆனால் நீங்க‌ள் என்ன‌டாவென்றால் இப்பொழுது தான் ம‌ற்ற‌வ‌ர்க‌ளிட‌மிருந்து ஆதார‌ங்க‌ளைத் திர‌ட்டத் தொட‌ங்கியிருக்கிறீர்கள் போல் தெரிகிற‌து. நான் சோழ‌ர்க‌ளின் வ‌ர‌லாற்றைப் ப‌ற்றிப் பேசினேனே த‌விர‌ மூவேந்த‌ர்க‌ள் அனைவ‌ரையும் ப‌ற்றிப் பேச‌வில்லை. அத்துட‌ன் குலோத்துங்க‌ சோழ‌னையும் நான் குறிப்பிட‌வில்லை. நான் கூறிய‌தெல்லாம் சோழ‌ர்க‌ள் வேளாள‌ர் குல‌த்தைச் சேர்ந்த‌வ‌ர்க‌ள் என‌வும் வாதாட‌ முடியும் என்ப‌து தான். அதற்காக‌ சோழ‌ அர‌ச‌ப‌ர‌ம்ப‌ரை உருவாக‌ முன்னால் வேளாள‌ர்க‌ள் த‌மிழ்ம‌ண்ணில் இருக்க‌வில்லையென்று அர்த்த‌ம‌ல்ல‌. உங்க‌ளுக்குத் தான் த‌மிழ்ச்சோழ‌ அர‌ச‌ ப‌ர‌ம்ப‌ரை ராஜ‌ ராஜ‌ சோழ‌னுக்கு முன்பான‌து என்ற‌ உண்மையும், முற்கால‌ச் சோழ‌ர்க‌ளின் ஆட்சி 2000ம் ஆண்டுக‌ளுக்கு முன்பே தொட‌ங்கிய‌தும் காவிரிக்குக் க‌ல்ல‌ணை க‌ட்டிய‌ க‌ரிகாற்சோழ‌னின் தாயாரும் ஒரு வேளிர்குல‌ப்பெண் தான் என்ப‌தும் தெரியாது போல் தெரிகிற‌து. வேளாள‌ர்க‌ளின் முன்னோர் தான் வேளிர்குலத்தின‌ர். மூவேந்த‌ரில் மூத்த‌வ‌ன் பாண்டிய‌ன் என்பது எல்லோருக்கும் தெரியும். பாண்டி என்ற‌ சொல் எருது என்ற‌ க‌ருத்தில் ம‌ட்டும‌ல்ல‌ ப‌ண்டை(ய) அதாவ‌து ப‌ழ‌மை என்ற‌ சொல்லிருந்து வ‌ந்த‌தாக‌வும் கூறுவ‌ர். த‌மிழ்நாட்டில் இன்றும் வ‌ழ‌க்கிலுள்ள‌ பிள்ளைமார் , முத‌லியார் என்ற‌ சாதிப்பெய‌ர்க‌ள் முறையே பாண்டிய‌ர்க‌ளாலும், பல்ல‌வ‌ர்க‌ளாலும் வேளாள‌ர்க‌ளுக்கு அளிக்க‌ப்ப‌ட்ட‌ ப‌ட்ட‌ங்க‌ள். அத‌னால் தான் ஈழ‌த்தில் இன்றும் பிள்ளைமார்க‌ளையும், முத‌லியார்க‌ளையும் ஒன்றாக இணைத்து வெள்ளாள‌ர் என‌ அழைக்கப்ப‌டுகின்ற‌ன‌ர். உதார‌ண‌மாக‌, யாழ்ப்பாண‌ வைப‌வ‌மாலையில் தொண்டைநாட்டிலிருந்து வேளாள‌ப்பிர‌புக்க‌ள் யாழ்ப்பாண‌த்துக்கு குடியேறியதாக‌க் குறிப்பிடப்ப‌ட்டுள்ள‌து ஆனால் அவ‌ர்க‌ள் அனைவ‌ருக்கும் த‌னிநாய‌க‌ முத‌லியார், மாப்பாண‌ முத‌லியார் என அடைமொழியுள்ள‌து.சேர‌நாட்டில் அவ‌ர்க‌ளுக்கு நாய‌ர்க‌ள் என்ற‌ பட்ட‌மளிக்கப்ப‌ட்ட‌து, ஆனால் சோழ‌ர்கள் வேளாள‌ர்க‌ளுக்கு அப்ப‌டி ஏதாவது ப‌ட்ட‌மளித்த‌தாக‌த் தெரிய‌வில்லை.ஏனென்றால் யாரும் த‌ம‌க்குத் தாமே ப‌ட்ட‌மளித்துக் கொள்வ‌தில்லை. இதனாலும் கூட‌ சோழ‌ர்க‌ள் சைவ‌வேளாள‌ர்க‌ள் தானென‌ வாதாட‌ முடியும‌ல்ல‌வா? :-)
க‌டுங்கோன் பாண்டிய‌ன்
//க‌டுங்கோன் பாண்டிய‌ன், உங்க‌ளுக்கு கேள்வி கேட்க‌ ம‌ட்டும் தான் தெரியும் போலிருக்கிற‌து. பாண்டிய‌ர் என்ற‌ பெய‌ருக்கு விரிவான விள‌க்க‌ம் த‌ருவ‌து ம‌ட்டும‌ல்ல‌, நீங்க‌ள் தான் பாண்டிய‌ர்க‌ளின் நேர‌டி வாரிசுகள் என்ப‌தையும் ஆதார‌ங்க‌ளுட‌ன் காட்டுவீர்க‌ளென எதிர் பார்த்தேன்.//

பள்ளர்களே பாண்டியர்கள் -- நிலை நாட்டும் நீதி மன்ற தீர்ப்பு
==========================================
"செங்கோட்டையில் நடந்த பள்ளர்களுக்கும், மறவர்களுக்கும் இடையே தொடர் சாதிய மோதலையோட்டு 1920 கலீல் பாண்டியர் என்னும் பட்டம் தங்களுக்கே உருயதேன்ரும், பள்ளர்கள் தங்களைப் பாண்டியர் என்று அழைத்துக் கொள்ளக் கூடாதென்றும் மறவர்கள் சார்பாக திருவிதாங்கூர் சமஸ்தானத்திற்கு உட்பட்ட கொல்லம் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருந்தனர். அந்த வழக்கில் செங்கோட்டைப் பள்ளர்கள் சார்பில் தாக்கல் செய்யப் பட்ட வளரார்று ஆவணங்கள், நிலா ஆவணங்கள், அரசுப் பதிவுகள் ஆகிய ஆதாரங்களை ஏற்று 'பள்ளர்கள் தான் பாண்டியர்கள்' என்று கொல்லம் நீதி மன்றம் தீர்ப்பு தந்துள்ளது."

---
Quilon District Court Judegement, Travancore State.
நாவலாசிரியர் பூமணி (நேர்காணல்)
க‌டுங்கோன் பாண்டிய‌ன்
வியாசன் அவர்களே...
பாண்டியன் யார் உள்ளிட்ட விசயங்களை அடக்கி ஏற்க்கனவே ஒரு விவாதத்தில் சில பல கருத்துகளை, ஆதாரங்களை கூறி உள்ளேன். நேரம் இருந்தால் வாசிக்கவும்.

http://www.vinavu.com/2012/09/25/sundarapandian-review/#tab-comments
viyasan
///பாண்டியன் யார் உள்ளிட்ட விசயங்களை அடக்கி ஏற்க்கனவே ஒரு விவாதத்தில் சில பல கருத்துகளை, ஆதாரங்களை கூறி உள்ளேன். நேரம் இருந்தால் வாசிக்கவும். ///

க‌டுங்கோன் பாண்டிய‌ரே,

வின‌வு இணைய‌த்த‌ள‌த்திலும் உங்க‌ளின் (வித‌ண்டா) வாத‌ங்க‌ளை வாசித்துப் பார்த்தேன், வழ‌க்க‌ம் போல் எல்லாமே டுப‌க்கூர் தான். :-) இந்த‌ சாதிச்ச‌ண்டையே வெறும் வெட்டிப்பேச்சு என்ப‌து தான் என்னுடைய‌ க‌ருத்து, இருந்தாலும் நீங்க‌ள் தேவேந்திர‌குல‌ ப‌ள்ள‌ர்க‌ள்/ம‌ள்ள‌ர்க‌ள்/குள்ள‌ர்க‌ளின் தொல்லை இணைய‌த்த‌ள‌ங்க‌ளிலும் YOUTUBE இலும் தாங்க‌ முடிய‌வில்லை. இல்லாத‌ பொல்லாத‌ எல்லாவ‌றையும் ம‌ட்டும‌ல்ல‌ பிர‌மிட்டுக்க‌ளையும் போட்டு, பார‌திதாச‌னின் பாட்டையும் சேர்த்து த‌மிழ‌ர்க‌ளைப் ப‌ழ‌மைவாத‌ம் பேசுப‌வ‌ர்க‌ள் ம‌ட்டும‌ல்ல‌, வ‌ரலாற்றில் பொய்க‌ளையும் கூறுப‌வ‌ர்க‌ள் என்று ம‌ற்றவ‌ர்க‌ள் கூறும‌ள‌வுக்குத் த‌மிழ‌ர்க‌ளைச் சந்தி சிரிக்க‌வைத்த‌வ‌ர்க‌ள் உங்க‌ளைப் போன்ற‌வ‌ர்க‌ள். பள்ள‌ர்/ம‌ள்ளர்க‌ளின் அந்த‌ YOUTUBE ஐ பார்த்து சிங்க‌ளவ‌ர்க‌ள் கூட‌ சிரித்த‌து என‌க்குத் தெரியும். சொல்லுற‌து தான் சொல்லுறீங்க‌ கொஞ்ச‌ம் நம்புகிற‌ மாதிரி சொன்னால் என்ன‌? அதை விட‌ ப‌ள்ள‌ர்க‌(ம‌ள்ள‌ர்)ளிட‌ம் என‌க்கு எந்த‌ வித‌ காழ்ப்புண‌ர்வும் கிடையாது, ச‌ரியா?

என‌து முத‌லாவ‌து கேள்வி, அதென்ன‌ உங்க‌ளின் சாதிப்பெய‌ரிலுள்ள‌ 'தேவேந்திர‌குல‌ம்' என்ப‌து, அது எங்கிருந்து வ‌ந்த‌து? தாழ்த்த‌ப்ப‌ட்ட‌ சாதியின‌ர் மகாபார‌தத்துட‌னும், ஆரிய‌க்க‌ட‌வுள‌ர்க‌ளுட‌னும் த‌ம்மைத் தொட‌ர்பு ப‌டுத்தி, சில‌, ப‌ல‌ க‌தைக‌ளை இட்டுக்க‌ட்டி, த‌ம்மை ச‌த்திரிய‌ர்க‌ளாக உய‌ர்த்திக் காட்ட முனைவ‌தும் ஆரிய‌ம‌ய‌மாக்க‌ல் (*Sanskritization Process) தான். அந்த‌ வ‌ழ‌க்க‌ம் இந்தியாவில் ம‌ட்டும‌ல்ல‌ இல‌ங்கையிலுமுண்டு. அதாவ‌து ஆரிய‌ர்க‌ளுட‌ன் தொட‌ர்பை ஏற்ப‌டுத்தினாலாவ‌து வ‌ருணாசிர‌ம‌த்தின் அடிப்ப‌டியிலான‌ சாதிக்க‌ட்ட‌மைப்பில் தாம் உயர்ந்த‌வ‌ர்க‌ளாக‌க் க‌ருத‌ப்பட‌லாம் என்ற‌ ந‌ப்பாசையினால் தான் இந்த‌ ப‌ழ‌க்க‌ம் ஏற்ப‌ட்ட‌து. அதே போன்ற‌து தான் "ஷ‌த்திரிய‌ குல‌ வ‌ன்னிய‌ர்" என்ற‌ டுபாக்கூரும். நீங்க‌ள் எல்லாம் உண்மையான‌ த‌மிழ‌ர்க‌ளென்றால், உங்க‌ள‌து வேர்க‌ள் உண்மையிலேயே திருக்கோயில்(த‌மிழீழ‌ம்) தொட‌ங்கி திருவேங்க‌ட‌ம் இடையிலுள்ள த‌மிழ்ம‌ண்ணிலிருந்தால் உங்க‌ளுக்கும் தேவேந்திர‌னுக்கும் (ஆரிய‌த்துக்கும்) எந்த‌வித‌ தொட‌ர்புமிருக்க‌ முடியாது. அத‌னால் தேவேந்திர‌ குல‌ம் என்ற‌ பெய‌ரிலுள்ள‌ இந்திர‌ன் என்ற‌ சொல்லே உங்க‌ளின் வேர்க‌ள் த‌மிழ்ம‌ண்ணில் இல்லை என்ப‌தைத் தான் காட்டுகிற‌து. உண்மையில் நீங்க‌ள் த‌மிழ‌ர்க‌ள் தான், த‌மிழ்ம‌ண்ணின் மைந்த‌ர்க‌ள் தான் என‌ நிரூபிக்க‌ விரும்பினால், அந்த‌ 'தேவேந்திர‌' என்ற சொல்லைத் தூக்கிக் குப்பையில் போடுங்க‌ள்.

இந்திர‌ன் என்ப‌து த‌மிழ்ச்சொல் அல்ல‌. இந்திர‌ன், வ‌ருண‌ன் எல்லாம் வேத‌கால‌ ஆரிய‌ர்க‌ளின் க‌ட‌வுள். "வேந்தன் மேய தீம்புனல் உலகமும்" - தொல்காப்பிய வ‌ரிக‌ளில் மருதநில கடவுளாக வேந்தன் குறிப்பிட‌ப்ப‌டுகிற‌து. ஆனால் த‌மிழ்க்க‌லாச்சார‌த்தில் ஆரிய‌ர்க‌ளின் தாக்க‌ம் ஏற்பட்டதன் விளைவால் தான் பிற்கால‌ நூல்க‌ள் இந்திர‌னை ம‌ருத‌ நில‌க்க‌ட‌வுளாக‌ வ‌ர்ணிக்கும் வழ‌க்க‌ம் ஏற்ப‌ட்ட‌து. வேந்தனே ஆரிய கலப்பினால் இந்திரனாக மாறியிருப்பதாக தமிழ் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்

ஆனால் வின‌வில் உங்க‌ளின் வாத‌ம் என்ன‌வென்றால், "மாயோன் மேய காடுறை உலகமும் சேயோன் மேய மைவரை உலகமும் வேந்தன் மேய தீம்புனல் உலகமும் வருணன் மேய பெருமணல் உலகமும் முல்லை, குறிஞ்சி மருதம் நெய்தல் எனச் சொல்லிய முறையால் சொல்லவும் படுமே(அகத்.5) — என்ற‌ தொல்காப்பிய‌ வ‌ரிக‌ளில் ம‌ருதநில‌த்தை ம‌ட்டும் 'வேந்தன் மேய‌' என்றிருப்ப‌தால் ம‌ள்ள‌ர்க‌ள் அல்ல‌து ப‌ள்ள‌ர்க‌ள் ம‌ட்டும் தான் வேந்த‌ர்க‌ள் அல்ல‌து அர‌ச‌ர்க‌ள் என்கிறீர்க‌ள்.

இது வின‌வு இணைய‌த்தில் உங்க‌ளின் கேள்வி "வேங்கடசாமி நாட்டாரின் கொள்கை படி, மருத நிலத்தில் இருந்தவனே அரசன்,வேந்தன் எனப் படுவான். முத்து தேவரின் கொள்கைப் படி , மலையை ஆண்ட சேரனும், நெய்தலை ஆண்ட பாண்டியனும் எப்படி அரசன்,வேந்தன் ஆனான்? எப்படி நெய்தலிலும், குறிஞ்சி,முல்லையிலும் நாகரிகம் தோன்றி, அரசு உருவாக்கம் நடந்தது? பதில் சொல்லுங்க தியாகு…"??

உங்க‌ளின் இந்த‌க் கேள்வியிலிருந்து என்ன‌ தெரிகிற‌தென்றால் உங்க‌ளுக்கு அந்த‌ தொல்காப்பிய‌ பாயிர‌த்தின் க‌ருத்தும் தெரியாது த‌மிழிலும் அந்த‌ள‌வுக்கு ப‌ரிச்ச‌ய‌ம் கிடையாது என்ப‌து தான். "சேயோன் மேய மைவரை உலகமும்" என்று தொட‌ங்கும் தொல்காப்பிய‌ வ‌ரிக‌ள் ஐந்திணை நில‌ங்க‌ளுக்குமுரிய‌ க‌ட‌வுளர்க‌ளைக் குறிக்கிற‌தே த‌விர‌ அதை ஆண்ட‌ அர‌ச‌ர்க‌ளை அல்ல‌து அர‌ச‌ குல‌த்தைய‌ல்ல‌. 'வேந்தன் மேய தீம்புனல் உலகமும்' என்ற‌ இர‌ண்டாவ‌து வ‌ரிக‌ளிலுள்ள‌ வேந்த‌ன் என்ற‌ சொல்லினால் தான் நீங்க‌ள் குழ‌ம்பிப் போய் ம‌ற்ற‌வ‌ர்களையும் குழ‌ப்புகிறீர்க‌ள்.அத‌ற்கிடையில் வெற்றிச்ச‌வால்க‌ள் வேறு. த‌மிழில் வேந்த‌ன் என்றால் அர‌ச‌ன் என்று ம‌ட்டும் பொருள் அல்ல‌. வேந்த‌ன் என்றால் க‌ட‌வுளையும் குறிக்கும். உதார‌ணமாக‌ "கொன்றை வேந்தன் செல்வன் அடியினை என்றும் ஏத்தித் தொழுவோம் யாமே" என்கிறார் அவ்வையார். இங்கு வேந்தன் என்ப‌து இறைவ‌னை, அதாவ‌து கொன்றை ம‌ல‌ர்க‌ளை
ச‌டையில் சூடும் சிவனது செல்வ‌னாகிய‌ பிள்ளையாரை (அல்ல‌து முருக‌னை) குறிக்கிற‌து. அத‌னால் த‌மிழில் வேந்த‌ன் என்ப‌து அர‌ச‌ர்க‌ளை ம‌ட்டும‌ல்ல‌ க‌ட‌வுளையும் குறிக்கும் என்ப‌தும் தெளிவாகிற‌த‌ல்ல‌வா? மேலும் த‌மிழில் இறைவ‌ன் என்ற‌ சொல் கூட‌ க‌ட‌வுளையும், அர‌ச‌னையும் குறிக்கும். இதிலிருந்து தேவேந்திர‌குல‌ வேளாள‌ர்க‌ளுக்கும் அல்ல‌து ப‌ள்ள‌ர்க‌ளுக்கும், ம‌ள்ள‌ர்க‌ளுக்கும் "வேந்தன் மேய தீம்புனல் உலகமும்" என்ற‌ தொல்காப்பிய‌ வ‌ரிக‌ளுக்கும் எந்த‌ வித‌ தொட‌ர்புமில்லை என்ப‌து புல‌னாகிற‌த‌ல்லவா? நீங்க‌ளாக‌ இக்கால‌த்தில் ஆரிய‌ம‌ய‌மாக்க‌லின் (Sanskritization Process) ‍ ப‌டி உங்க‌ளுக்கு தேவேந்திர‌குலம் என்ற‌ ஆரிய‌ப்பெய‌ரைத் தொட‌ர்புப‌டுத்தி ஒரு க‌தையை இட்டுக் க‌ட்டி விட்டு, பின்பு அந்த‌ப்பெயரை ப‌ழ‌ந்த‌மிழ் இல‌க்கிய‌ங்க‌ளிலுள்ள‌ பாட‌ல்க‌ளுட‌ன் தொட‌ர்பு ப‌டுத்திக் கொண்டு, நாங்க‌ள் தான் த‌மிழ்ம‌ண்ணை ஆண்ட‌வ‌ர்க‌ள் என்ப‌தும் ம‌ற்ற‌ த‌மிழ‌ர்க‌ள் எல்லாம் வ‌ந்தேறிக‌ள் என்ப‌தும் உங்க‌ளின் தாழ்வும‌ன‌ப்பான்மையைக் காட்டுவ‌து ம‌ட்டும‌ல்ல‌, தேவையில்லாம‌ல் த‌மிழ‌ர்க‌ளைப் பிரித்து ப‌கைமையை உண்டாக்குவ‌துமாகும். எந்த‌ ச‌ங்க‌ இல‌க்கிய‌ங்க‌ளிலாவ‌து ப‌ள்ள‌ர்க‌ளும்/ம‌ள்ள‌ர்க‌ளும் தேவேந்திர‌ குல‌ம் அதாவ‌து ஆரிய‌ர்க‌ளின் வேத‌கால‌க் க‌ட‌வுளான‌ இந்திர‌னின் குல‌த்திலிருந்து வ‌ந்த‌வ‌ர்க‌ள் என‌க் கூற‌ப்ப‌ட்டிருப்ப‌தை என்ப‌தை உங்க‌ளால் காட்ட‌முடியுமா?

(*Sanskritization or Sanskritisation is a particular form of social change found in India and Nepal. It denotes the process by which castes placed lower in the caste hierarchy seek upward mobility by emulating the rituals and practices of the upper or dominant castes. It is a process similar to passing in sociological terms. This term was made popular by Indian sociologist M. N. Srinivas in the 1950s, although earlier references to this process can be found in Castes in India: Their Mechanism, Genesis and Development by Dr. B. R. Ambedkar.)

தொட‌ரும்..... :-)
karthickpandian
this is devarin history
karthickpandian
இராமநாதபுரம் சமஸ்தானத்தை ஆண்ட மன்னர்களில் ‘கிழவன் சேதுபதி’ சிறப்பானவன். அவன் வரலாற்றை திரு மீ.மனோகரன் எழுதியிருக்கிறார். அதில் பிரிட்டோ பாதிரியார் பற்றிய விவரங்கள் கிடைக்கின்றன. பண்டைய தமிழ் மூவேந்தர்களுக்கு அடுத்ததாக தமிழகத்தில் நீண்ட நெடிய பாரம்பரிய ஆட்சியைப் புரிந்தவர்கள் இராமநாதபுரம் சேதுபதிகள். இராமபிரான் ராமேஸ்வரத்தில் சேதுவை நிறுவிய காலத்தில் இவர்களை அந்த சேதுவைக் காக்கும் அதிபர்களாக நியமித்ததன் காரணமாகத்தான் இவர்கள் சேதுபதி என்று அழைக்கப்பட்டார்கள். மறவர் இனம் ஏழு பிரிவுகளாக இருந்ததில், இவர்கள் அதில் ஒரு பிரிவினர். இவர்கள் மறவர் நாட்டின் அதிபதியாக பலகாலம் விளங்கி வந்தவர்கள். வீரத்துக்கும், விவேகத்துக்கும், பக்திக்கும், தமிழுக்கும், ஆன்மீகத்துக்கும் இவர்கள் ஆற்றியுள்ள பணி அற்புதமானது.

இத்தகைய பாரம்பரியமிக்க சேதுபதிகளில் பலரும் புகழ்வாய்ந்தவர்கள். கிழவன் சேதுபதி, முத்துராமலிங்க சேதுபதி, பாஸ்கர சேதுபதி இப்படிப் பலர். இவர்களில் பாஸ்கர சேதுபதி சுமார் நூறு ஆண்டுகளுக்குள் வாழ்ந்தவர். சுவாமி விவேகானந்தரை அமெரிக்காவில் சிகாகோவில் நடந்த சர்வ மத மாநாட்டுக்கு அனுப்பி வைத்தவர். அவர் 1897ல் தாய்நாடு திரும்பிய போது இலங்கை வந்து அங்கிருந்து ராமேஸ்வரம் வந்து காலடி வைத்த போது, சுவாமிஜியின் காலடி பாரத புண்ணிய பூமியில் படுவதற்கு முன் தன் தலைமீது காலடி வைக்க வேண்டுமென்று கேட்டுப் பெற்றவர். பற்பல தானதர்மங்களைச் செய்தவர். அந்தக் காலத்திலேயே சென்னை கிருத்துவக் கல்லூரியில் எஃப்.ஏ. எனப்படும் இண்டெர்மீடியட் பாஸ் செய்தவர். ஆங்கிலம், தமிழ் இவற்றில் பாண்டித்தியம் வாய்ந்தவர். கலை இலக்கியங்களைப் போற்றியவர். இப்படிப்பட்ட பெருமைக்குரியவர்களெல்லாம் வாழ்ந்த குலம் ‘சேதுபதிகள்’ குலம்.

ஆயினும் இவர்களது வரலாற்றை ஆய்ந்து பார்க்க விரும்பினால், நம்மவர்கள் எவரும் எழுதிவைக்காத நிலையில் போர்த்துகீசிய பாதிரிமார்களும், கிறிஸ்தவ மதப் பிரச்சாகர்களும் எழுதிவைத்தவைகளைத்தான் நம் வரலாற்றாசிரியர்கள் எழுதி வருகிறார்கள். இப்படி ஒருதலைப் பட்சமான செய்திகளை பாதிரிமார்களின் குறிப்புகளிலிருந்தும், ஆங்கில ஏகாதிபத்தியத்தின் கெசட்டுகளிலிருந்தும் எடுத்தாளும் நம்மவர்கள் இதிலுள்ள உண்மைகளை வெளிக்கொணர்வதற்கு மாறாக, அவர்களது செயல்களைப் போற்றியும், இங்கிருந்த இந்து மன்னர்களின் செய்கைகளைக் குறை கூறியும் எழுதி வைத்திருப்பது தலைக்குனிவை ஏற்படுத்துகிறது.இந்த மண்ணின் மானம் காக்க, தனது இன்னுயிர் ஈந்த மறவர் குல மன்னன் ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி. ராமநாதபுரம் செல்லமுத்து சேதுபதி மன்னருக்கு சகோதரி மகனாக 1760 மார்ச் 30-ம் தேதி ராமநாதபுரம் அரண்மனையில் பிறந்தார். அவர் பிறந்த 72-ம் நாளிலேயே அவருக்கு இளவரசர் பட்டம் சூட்டப்பட்டது.
1772 மே மாதத்தில் ஆர்க்காடு நவாப் மகன் உம்ரத்துல் உம்ரா, ஆங்கிலத் தளபதி ஜோசப் ஸ்மித் ஆகியோர் இணைந்து ராமநாதபுரம் கோட்டையைத் தாக்கிய போரில் ஆயிரக்கணக்கான வீர மறவர்கள் மடிந்தார்கள்.
12 வயது சிறுவனாக இருந்த இளவரசரும், அவரது தாயார், சகோதரிகளும் திருச்சிக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கே சிறை வைக்கப்பட்டார்கள். அவர் சிறையிலே இருந்த 10 ஆண்டு காலத்தில் மறவர் சீமையில் தொடர்ந்து கலவரங்களும், குழப்பங்களும் கொந்தளித்ததால் 1782-ல் இளவரசர் சேதுபதி 22 வயதில் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டு, ராமநாதபுரம் மன்னராகப் பொறுப்பேற்றார்.
சேது நாட்டை ஆக்கிரமித்து தன்னையும், தனது குடும்பத்தாரையும் பத்தாண்டு காலம் சிறையில் அடைத்த ஆர்க்காடு நவாப்பையும், ஆங்கிலேயக் கும்பெனியாரையும், பழிவாங்கத் துடித்த சேதுபதி, டச்சுக்காரர்களின் உதவியுடன், ராமநாதபுரத்துக்கு அருகிலே இருந்த காட்டுப் பகுதியில் பெரிய பீரங்கிகள் தயாரிக்கும் ஆயுதச் சாலையைத் தொடங்கினார். அதன்மூலம் தனது படை பலத்தையும் பெருக்கினார். சேதுபதிச் சீமையில் தானியங்களை விற்பனை செய்வதில் சுங்கவரி விதித்தல் கூடாது என்ற கும்பெனியாரின் கோரிக்கையையும் முத்துராமலிங்க சேதுபதி மறுத்துவிட்டார்.
ஆர்.தியாகு
இதில் ஒரு செய்தியை கட்டுரையாளர் கவனிக்கவேண்டும்.

திரு.தினகரன் ஒரு காங்கிரஸ்காரர் அதுவும் காமராஜரின் சினேகிதர் மற்றும் காரனமறவர் பிரிவை சேர்ந்தவர்.

இப்படிப்பட்ட பின்புலத்தோடு தினகரன் முத்துராமலிங்கத்தேவரை விமர்சனம் செய்து புத்தகம் எழுதியுள்ளார். தினகரன் எழுதிய அநத புத்தகத்தை வெளியிட்டது காங்கிரஸ் அமைச்சர் ஆவார்.

ஆறுபுத்தி உள்ளவர்க்கு இந்த கதையும் கற்பனையும் தினகரன் எதற்காக பயன் படுத்தினார்?? என அறிவாராக...

திரு.உ.மு.ரா.தேவர் கொண்டையன்கோட்டை மறவர் என்பதனாலும் மறவர் இனத்திலேயே தாழ்ந்தனிலையில் உள்ள காரண மறவர் இனத்தை சேர்ந்த தினகரான் இப்படி உட்ப்பிரிவு குறித்து எழுதியது தன் புத்திக்குபின் இருக்கிற காமராஜ் என்பது தெரிவது வியப்பல்ல..!

அதுலையும் ஓட்டை..'கிழவன் சேதுபதி' செப்பியநாடு மறவ்ர் இனத்தை சேர்ந்தவர்..அவரை எப்படி கொண்டையன் கோட்டை மறவரோடு முடிச்சிட்டார் என்பது அவரது அறிவுக்கு நல்ல சான்று.

இதன் பிற்ப்பாடு தினகரனே கண்ணகி இதழ் ஆசிரியர் 'சக்தி'மோகன்(ஜ.என்.ஏ இரானுவத்திலிருந்து வந்தபின்பு தேவருடன் இனைந்து செயலாற்றியவர்) காமராஜரை தேவர் கடுமையான விமர்ச்சனம் தொடுத்தால் நண்பர்கள் கூற்றுப்படியும் காமராஜிரின் கூறுப்படியும் எவ்வாறு எழுத நேர்ந்தது எனவும்..காமராஜரை விமர்ச்சிப்பதை விட்டால்..நான் மாற்றுப்புத்தகம் எழுதி மண்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன் என் குறியிருக்கிறார்.

தேசம் என்பது யாவரையும் உள்ளடக்கியதுதான் ஆனால் அம்பெத்கர் என்ன ஒட்டுமொத்த ஜனத்துக்குமா போராடினார்??
ஒட்டுமொத்த சுதந்திர இந்திய விடுலைக்காக போராடினாரா..?
அப்படியிருந்தும் ஏன் அவரை தேசியதலவர் என அழைகிறீர்கள்???
தேசிய விடுமுறை எதற்கு?? சிந்தியுங்கள்??

- ஆர்.தியாகு
Bhagat
தேவரை சுதந்திரப் போராட்ட வீரர் என்று புளுகும் செயல் பற்றி.. தேவர், 1934க்கு பிறகுதான் காங்கிரஸ் கூட்டங்கள், மாநாடுகளுக்கு வர ஆரம்பிக்கிறார். அது அவரின் தவறும் இல்லை.. அப்போது அவரின் இளம்வயதைக் கணக்கில் கொண்டால், அது பெரிய தவறில்லைதான். காங்கிரசின் பெரிய போராட்டங்களில் ஒன்றான உப்புக்காய்ச்சும் சடங்கில் தேவர் கலந்து கொண்டதில்லை. நேரடியாக 1937 தேர்தலில் காங்கிரசு சார்பில் ராமநாதபுரம் அரசரை எதிர்த்து நின்றார். அவர் வெற்றிபெற்றாலும், சில இடங்களில் ஓட்டுபோடாத தலித் மக்களைத் தாக்கிடத் தூண்டுதலாய் இருந்தார். இது சம்பந்தமான வழக்கில் தேவருக்கு பாதகமாய் தீர்ப்பு சொன்ன நீதிபதியின் கால் வெட்டப்பட்டது. ஒரு டெபுடி தாசில்தார் கொல்லப்பட்டார். வெள்ளைக்கார அரசு, தேவர் வாயைத்திறந்து பேசினாலே கலவரம் வருவதால் பேசக்கூடாது என்று உத்தரவு போட்டது. அதன் பின் காங்கிரசும் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் ஈடுபட்டபோதும் அதில் தேவர் கலந்து கொள்ளமுடியவில்லை. ஏனென்றால் அப்போதும் அவர் வாய்ப்பூட்டு சட்டத்தில் சிக்கி இருந்தார். அக்காலகட்டத்தில் தேவர் ஒரு மில் ஸ்டிரைக்கில் கலந்திருந்தார். அப்புறம், சி டி ஆக்டை (குற்றப்பரம்பரை சட்டம்) நீக்க வேண்டும் என்று ஒரு போராட்டம். 1947ம் வந்து விட்டது.. 1948, 1949 களில் ராமநாதபுரத்தில் சாதிக்கலவரங்கள்... தேவரும் பார்வர்டு பிளாக்கில் 1949ல் ஐக்கியமாகி விடுகிறார். இடைப்பட்ட காலத்தில் 1946 தேர்தலில் எம் எல் ஏ ஆகி, அட்டெண்டன்ஸ் இல்லாததால் தகுதி நீக்கம் ஆகி விட்டார். இதுதாம் 1947க்கு முன் தேவரின் நிலை. இதில் தேவர் சுதந்திரப்போராட்டத்தில் எங்கே நிற்கிறார்?
Bhagat
அம்பேத்கரின் சமூக ஜனநாயகம்

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=20391&Itemid=139

சாதி வெறியையும், முட்டாள்தனத்தையும் கழற்றி வைத்து விட்டு இக்கட்டுரையைப் படிக்கவும்.
தமிழரசன்
"வியாசன்" அவர்களே! தமிழ்ச் சாதிகளுக்குள் பிளவு உண்டாகக் கூடாது என்ற எண்ணத்தை நான் மதிக்கிறேன்.ஆனால் ,தேவேந்திரர்கள் (மள்ளர்கள்)பற்றிய உங்களது கருத்தை நான் மறுக்கிறேன்.நீங்கள் "கடுங்கோன் பாண்டியன்" "வினவு" தளத்தில் கூறியவைகளை விதண்டாவாதம் என்றும், அக்கருத்துக்களை மறுக்கவும்,மள்ளர்கள் கூறுவதை பொய் பித்தலாட்டம் என்றும், சிங்களர்களே! சிரிப்பதாகவும் கூரியுருக்கிறீர்கள்.சரி.நீங்கள் சிரிக்கும் அளவிற்கு மள்ளர்கள் கூறிய வரலாற்றை சுட்டிக் காட்டவும்.வரலாற்றைப் பற்றி பேசுவது என்ற முடிவெடுத்தாகி விட்டது.சரி என்னுடைய கேள்விகள்?
உங்களுக்கு தமிழ் இனம் ஆரியர்களுக்கு மிகமுந்தியது என்பதில் ஏதேனும் சந்தேகம் இருக்கிறதா?சந்தேகம் இருந்தால், (தமிழனின் தொடக்கமான லெமூரியக் கண்டத்தைப் பற்றி தெரிந்து கொள்ளவும்).இதை எதற்கு கூறுகிறேன் என்றால், ஆரியர்கள் காசுபியன் கடல் பகுதியில் இருந்து சிந்து சமவெளிப் பகுதிக்கு வரும் முன்னால் அவர்களுக்கு என்று ஒரு மதம் இல்லை,அவர்களது கலப்பு மொழியான வேத மொழிக்கு எழுத்து வடிவம் இல்லை,அவர்களுக்கு என்று ஒரு கடவுள் இல்லை.அவர்கள் கடவுள் என்று வணங்கியது சோம பானத்தையும்(கள்ளை ),சிறு தெய்வங்களையுமே ஆகும்.பின்னர் அவர்கள் தமிழர் மதங்களான சிவன் மதத்தையும்,திருமால் மதத்தையும் ஏற்றுக்கொண்டனர்.அதற்குப் பிறகுதான் தென் இந்தியாவின் தெற்குப் பகுதியில் அவர்களது மொழியான சமற்கிருதம் தமிழின் உதவியோடும்,தமிழர்களது அரும் பெரும் கண்டுபிடிப்பு செல்வங்களையும் தன்னுடையதாக உள்வாங்கிக் கொண்டு மூலமான தமிழ் ஆதாரங்களை அழித்தது (ஆற்றில் விடுவது ,ஏடுகளை எரிப்பது-பாண்டிதுரைதேவர் அரும்பாடு பட்டு சேர்த்து வய்த்த நூல்களை மதுரையில் எரிந்தது!!!!!!,தேவாரத்தை மறைத்தது என பல உதாரணங்களை சொல்லிக் கொண்டே போகலாம் ) .உதாரணமாக தமிழ் இலக்கண நூலாக தொல்காப்பியம் மட்டுமே கிடைத்துள்ளது(அதுவும் ஆரியர் எழுதியது).சரி இதை ஏன் கூறுகிறேன் என்கீறீர்களா?
ஏனென்றால், உங்கள் கூற்றில் // இந்திர‌ன் என்ப‌து த‌மிழ்ச்சொல் அல்ல‌. இந்திர‌ன், வ‌ருண‌ன் எல்லாம் வேத‌கால‌ ஆரிய‌ர்க‌ளின் க‌ட‌வுள்.//கூறியுள்ளீர்கள் . அது தவறு என்கிறேன் நான்.அதற்குண்டான என்னுடைய கருத்துக்கள்.
1. வருணன் என்ற கடவுளின் மூலம் எங்குள்ளது என்றால், வருணன் என்று சொல்வார்களே அந்த வருணன் என்ற சொல் தமிழிலே வாரணன் என்று திரியும் (வாரணம் - கடல் ,வாரணன் - கடலோன் )அது நெய்தல் நிலத்தெய்வம்.வாரணன் கடல் - அது மேரினிசம் (marinism ) என்றிருக்கிறது .இலத்தினேலே மேரினிசம் தர்சி (marimism terce ) என்றாலும் கடல்.ஆரியர்கள் பிற்காலத்திலே போய் இந்தக் கடல் தொடர்பு அற்றுப் போனதினாலே வாரணன் என்பதை வருணன் என்று பெயர் வைத்துவிட்டார்கள்.இப்பொழுது கூட வருணசெபம் என்று மழை தெய்வத்தை வணங்கிக் கொண்டிருப்பார்கள்.ஆனால் ,தெற்கே வந்த பிற்பாடு தமிழரோடு தொடர்பு கொண்ட பிற்பாடு கடல் தெய்வம் என்றே வழங்கிவிட்டார்கள்.ஆனால் இங்கே தொல்காப்பியத்திலே "வருணன் மேய பெருமணல்"உலகம் என்று இருக்கிறது.அது "வாரணன் மேய ஏர் மணலுலகம் " என்று இருந்திருக்க வேண்டும் முற்காலத்திலே
2.சமற்கிருதக் கடவுளான சரஸ்வதியின் மூலம் தமிழ் மொழியில் உள்ள "வாணி"என்பதாகும் .
3. இந்திரன் தமிழ்க் கடவுளா?
இப்பொழுது நான் நிருபிக்க வேண்டியது இந்திரன் யார் என்பதும், அதனுடைய மூலம் என்ன என்பதைப் பற்றியும்தான்.நீங்கள் இந்திரனை ஆரியக் கடவுள் என்கிறீர்கள்.அதனால்,அவனுடைய பெயரை பயன்படுத்தும் தேவேந்திரர்களை(மள்ளர்களை )அவன் ஆரியக் கடவுள் என்பதால்,அப்பெயரினை பயன்படுத்த வேண்டாம் என்கிறீர்கள்.சரியான நிலைப்பாடுதான்.ஆனால்,இந்திரன் என்பவன் யார்? அவன் எவ்வாறு கடவுள்களுக்கு எல்லாம் தலைவனானான்?அவனுடைய மூலம் தமிழர் வழிபாடுதான் என்பதை நான் நிருபித்தால்,"தேவேந்திரகுலத்தவர்கள் இப்பெயரினை பயன்படுத்துவது சரியல்ல என்ற உங்களது கருத்தை திரும்பப் பெற்றுக் கொள்வீர்களா"?
இந்திர வழிபாடு என்பது என்ன:-
இந்திரன் ஒரு வானியல் உருவகமாகும். ஞாயிறு பெயரும் பாதையே ஞாயிற்றுமண்டிலம். வான்கோளின் நடுவரையிலிருந்து எப்சிலான் (e) என்ற கோணத்திலிருக்கும் நீள்வட்டப் பாதையே அஞ் ஞாயிற்றுமண்டிலம். இந்த ஞாயிற்றுமண்டிலத்தின் உச்ச நிலையே இந்திரனின் குடியிருப்பு என்று தொல்தமிழ் வானியலார் கற்பித்தனர். வடக்குநோக்கிப் பெயர்கிற ஞாயிற்றின் வடசெலவு (உத்தராயனம்) முடிந்து அதன் தெற்குநோக்கிய பெயர்ச்சியாகிய தென்செலவு (தட்சிணாயனம்) தொடங்கும் புள்ளிநிலையை இக் கால வானியல் வேனில்முடங்கல் (Summer Sols-tice) என்று குறிப்பிடுகின்றது.ஞாயிற்றின் பெயர்ச்சியிலான உச்சநிலை என்பதால், அப் புள்ளிநிலையைக் குறிக்கும் இந்திரனை வானுறையும் தேவர்களுக் கெலாம் தலைவனாக்கினர். இதையொட்டித் தொல்தமிழ் வானியலார் ஆக்கிய வானியல் புனைகதைகளே இந்திரனைப் பற்றிய தொன்மக்கதைகளாக வழிவழியாக வந்தன.
வடகோளரையில் வேனில்முடங்கலுக்குள் ஞாயிறு புகுவது சூன் 20/21ஆம் நாளாகும். இது முதுவேனில் பருவத்தில் நிகழும். இடியுடனும் மின்னலுடனும் பெய்யும் கோடைமழை இக் காலத்தது. இதனால்தான், இடியும் மழையும் இந்திரனோடு தொடர்புடையனவாயின. இதனையொட்டியும் தொன்மங்கள் புனையப்பட்டன.செத்தோரையெல்லாம் விண்ணில் திகழும் உடுக்களாக்கி மடிந்தும் மடியாமல் அவர்கள் அங்கு வாழ்கின்றனரென்ற தமிழரின் தொல்முன்னோர்களின் கற்பனையே ஒரு நம்பிக்கையானது. இதனால்தான், செத்தபின் வானுலகம் புகுவதென்னும் நம்பிக்கை புரையோடியுள்ளது.செத்தோரெல்லாம் உடுக்களாகிவிடுவரென்றால், அவ் வுடுக்களே தேவர்களாயிருத்தல் வேண்டுமன்றோ? எண்ணரியனவான உடுக்கள்(star) எல்லாவற்றையுமா தேவர்களாக்க முடியும்? முடியாதே! அதனால்தான், நினைவில் வைத்துப் போற்றத்தக்க ஒரு சிலர் மட்டுமே தெய்வங்களாக்கப்பட்டனர். ஞாயிற்றுமண்டிலத்தின்மீது 27 உடுத்தொகுதிகள் (Constellations) உண்டு. ஆரல் (கார்த்திகை) தொடங்கி அடுப்புக்கொண்டை (பரணி) வரை என்றமையும் அந்த இருபத்தேழு உடுத்தொகுதிகள் அனைத்தையுமா தேவர்களாக்கினர்? இல்லையே!இந்திரனின் தலைமையில் வானுறையும் தேவர்கள் 33 பேர் என்பதுதான் கணக்கு. இந்திரன் ஞாயிற்றுமண்டிலத்தின் மீதான ஒரு ஞாயிற்றுநிலை மட்டுமேயென்றபோதும், அவன் தலைமையிலான தேவர்கள் எல்லாருமே வானில் உலவும் உடுக்களாகவோ ஞாயிற்றுநிலைகளாகவோ இல்லை. பின்னர், யார்தான் அம் முப்பத்து மூன்று தேவர்கள்? எழுத்துகளே தேவர்களாயின!உயிரெழுத்துகள் பன்னிரண்டு, மெய்யெழுத்துகள் பதினெட்டு, ஆய்தவெழுத்து ஒன்று, குற்றியலிகரமும் குற்றியலுகரமும் இரண்டு என்று தமிழிலுள்ள முப்பத்து மூன்று எழுத்துகளே முப்பத்து மூன்று தேவர்களாகக் கற்பிக்கப்பட்டனவென்பதை இன்றைய ஆய்வுகள் தெள்ளத்தெளிவாகப் புலப்படுத்துகின்றன.இந்திரனுக்கும் தமிழின் எழுத்திலக்கணத்திற்கும் இடையில் கண்ணும் இமையும் போன்ற உறவுள்ளமை இதனால் புலப்படும். இதை வைத்தே, ஐந்திரம் என்னும் தமிழ் இலக்கணநூலை யாத்தவன் இந்திரனே என்று சொல்லப்பட்டது. ஐந்திரம் என்ற அந்த இலக்கணநூல் நமக்கேன் கிடைக்கவில்லை? இந்திரன் வழிபாட்டையும் இந்திரனை இறைவனாகக் கொண்ட சமயத்தையும் கூண்டோடு ஒழித்தபோது, அவன் இயற்றியதாகக் கூறப்பட்ட ஐந்திரம் என்ற தமிழிலக்கண நூலும்கூடச் சுவடும் தெரியாதவாறு அழித்தொழிக்கப்பட்டிருக்க வேண்டுமன்றோ?கன்னட மொழியில் முதன்முதலில் தோன்றிய நூல் கி. பி. 9ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட கவிராச மார்கம் என்ற இலக்கண நூலாகும். அதற்குமுன் கன்னட மொழியில் இலக்கியமென யாதும் இருந்ததில்லை. கவிராச மார்கம் என்னும் அம் முதல்நூல் உள்ளபடியே பல்லவன் முதலாம் நரசிம்மவர்மனின் அரசவையில் சங்கதப் புலவனாயிருந்த தண்டி என்பான் சங்கத மொழியில் ஆக்கிய காவ்ய தர்சா என்ற நூலின் மொழிபெயர்ப்பாகும். அதாவது, கன்னட மொழியில் முதன்முதலில் தோன்றிய நூல் ஒரு மொழி பெயர்ப்பு நூலேயாகும்.சங்கதம் என்னும் எசுப்பராந்தோ அல்லது செயற்கைமொழி கி. பி. 2ஆம் நூற்றாண்டில்தான் தோன்றியது. அந்த மொழியிலான முதல்நூலும்கூட ஒரு மொழிபெயர்ப்பு நூலாக இருந்தது போலும். அந் நூல், தமிழிலான ஐந்திரம் என்னும் இலக்கணநூலின் மொழிபெயர்ப்பாகவே இருந்திருக்க வேண்டும். இதனால்தான், சங்கத மொழிக்கான முன்னோடி இலக்கண மரபு ஐந்திர இலக்கண மரபேயென ஏ. சி. பர்னெல் கூறுவார். தமிழ் ஐந்திரத்தைச் சங்கத மொழி யில் மொழிபெயர்த்துக்கொண்டபின், அதன் தமிழ் மூலத்தையே அழித்திருக்க வேண்டும். அடுத்து அந்தச் சங்கத மொழிபெயர்ப்பை யும்கூட அழித்துவிட்டனர் போலும்.மறைந்த தமிழ் நான்மறையின் திருட்டு வடிவம்தான் சங்கத மொழியிலான இருக்கு முதலான நான்கு வேதங்கள் என்பது என் நிலைப்பாடு. அந்த இருக்குவேதத்தில் இந்திரன் தலைமையில் 33 தேவர்கள் வானில் உறைவதாகச் சொல்லப்பட்டுள்ளது. ஆனால், இந்திரன் உள்ளிட்ட 31 தேவர்களின் பெயர்கள் மட்டுமே அதில் காட்டப்படுகின்றது. பாகத மொழியிலோ சங்கத மொழியிலோ குற்றியலிகரமும் குற்றியலுகரமும் இல்லாததால், இருக்குவேதத்தில் வரும் தேவர்களின் எண்ணிக்கை 33 ஆயினும், அதில் 31 தேவர் களின் பெயர்கள் மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளன. பன்னிரு உயி ரெழுத்துகளைப் பன்னிரு கதிரவர்(ஆதித்தர்)களெனக் கூறுகின்ற இருக்குவேதம், அதே கதிரவனைக் குறிக்கின்ற மித்திரன், சவித்தா, சூரியன் என்பவற்றையும்கூட முப்பத்தொரு தேவர்களில் அடக்குவது கூறியது கூறல் என்ற பிழையாகும். தமிழிலான முப்பத்து மூன்று எழுத்துகளே முப்பத்து மூன்று தேவர்களாவர் என்கின்ற உண்மையை அறியாமையாலோ அதை வேண்டுமென்றே மறைப்பதற்காகவோ பிராமணர்கள் இக் குழறுபடியைச் செய்து வைத்துள்ளனர்.சுவடும் தெரியாது போனதேன்?சமயம் என்னும் கருத்துருவைத் தழுவிய விளக்கங்களும் வழி பாடுகளும் சடங்குகளும் தோன்றுவதற்கு மீமிக முன்னால் குருட்டு நம்பிக்கைகளும் அந் நம்பிக்கைளைச் சார்ந்த சடங்குகளும் வழிபாடுகளுமே தொல்மாந்தரிடம் பரவலாயிருந்தன. இந் நம்பிக்கைகளின் வழிவந்த சமயக் கோட்பாடுகள் மக்களின் அரசியல்-பொருளியல்-குமுகியல் கட்டுமானங்களையும் வாழ்வியல் நெறிகளையும் முற்றாக ஆட்கொண்டு அவற்றை ஆட்டிப்படைக்கவும் செய்துவந்ததே நடப்புண்மை. நம்பிக்கை என்ற உளத்தியல் கூறு, வாழ்வியல் என்ற புறமெய்ம்மையைத் தன் பிடிப்புக்குள் இறுக்கி வைத்துக்கொண்டு அப் புறமெய்ம்மையின் மீதே ஆளுமை செய்கின்ற போங்கை வரலாற்றின் வழிநெடுகிலும் காண்கின்றோம்.உருத்திரன் வழிபாடு சிவனியச் சமயமாவதற்கும், மாயோன் வழிபாடு மாலியச் சமயமாவதற்கும் மிக முன்னரே தோன்றி மிகப் பரவலாயிருந்த வழிபாடே இந்திரன் வழிபாடு. இந்த இந்திரன் வழிபாடு பன்னூறு ஆண்டுகளாக அரசர்களுக்குரிய அரசு வழிபாடாகவும் இருந்தது. இந்திரனுக்கு ஊர்தோறும் கோயில்கள் இருந்தன. கோயில்கள் இருந்ததால், பூசாரிகளும் இந்திர விழாக்களும் இருந்திருக்கத்தானே வேண்டும்? இந்திரன் வழிபாட்டிற்கு இணையாகப் பின்னர் வளர்ந்ததே ஐயனார் வழிபாடு. ஆசீவகத்தின் முனைவர்களான மற்கலி, பூரணர், கணி நந்தாசான் ஆகியோரின் உருவகம்தான் ஐயனார் வழிபாடு. கி. பி. 3ஆம் நூற்றாண்டில் தொடங்கி கி. பி. 7ஆம் நூற்றாண்டில் முகட்டினைத் தொட்ட சிவனிய, மாலிய இறைப்பற்றி (பத்தி) இயக் கத்தின் எழுச்சியால் ஒருகால் மிகப் பரவலாகவும் அரசர் போற்றிய வழிபாடாகவுமிருந்த இந்திர வழிபாடு, அதன் சுவடுகளும்கூடத் தெரியாவண்ணம் முற்றிலுமாகத் துடைத்தொழிக்கப்பட்டது. இந்தி ரனுக்கு இணையாக வளர்ந்தோங்கிய ஐயனாரையாவது ஊருக்கு அப்பால் ஏரி குளங்களுக்கு அருகில் ‘புறம்பணையான்’ என்றாவது வைத்தனர். ஆனால், இந்திரனை மட்டும் சுவடு தெரியாது அழித்தொழித்ததோடு நில்லாது, அந்த இந்திரனைப் பழிக்கவும் தூற்றவும் செய்த கதைகளும் தொன்மங்களாகப் புனைந்துரைக்கப்பட்டன.
முளைக்காத வித்துஇந்திரனின்மேல் இவ்வளவு பெரிய கடுப்பு ஏன் வந்ததென் பதைத் தமிழ் அறிவர்கள் கண்டறிய முற்படவேயில்லை. இருபதாம் நூற்றாண்டில் தோன்றிய ஆய்வுநெறிகளும் விளக்கங்களும் தமிழ்த் தெய்வமான இந்திரனுக்கு ஏன் இந்தக் கதி என்பதைத் தெரிந்து கொள்ள முனையவில்லை. அக்கால் ஆழ வேரோடி யிருந்த ஆரிய-திராவிடக் கருத்தியலே இதற்கான முதற்கரணம். ஆரிய-திராவிடக் கருத்தியல், இந்திரனை ஆரியக் கடவுளாகவே கருதியது. வந்தேறித் திராவிடர்கள் கற்பித்த ஆரியத்திற்கு எதிரான கோட்பாடு போட்ட கோட்டைக் கடக்கத் தமிழர்களில் ஆய்வா ளர்கள் எவரும் துணிந்தாரில்லை. இந்திரன் என்ற தமிழ்த் தெய்வத்தை அவர்கள் ஆரியருக்கே நீரட்டித் தந்துவிட்டனர். ஆரியக் கருத்தியலாருடன் சேர்ந்து ‘திராவிடர்’களும் இந்திரனை ஆரியனாகவே பார்ப்பதென்பது அவர்களின் வந்தேறி நலன்களுக்கு ஏற்புடையதாயிருந்தது. இதனால், வடுகம் எடுத்த இருவேறு தோற்றங்(அவதாரங்)களே ஆரியமும் திராவிடமும் என்றாயின.முந்தைய சென்னை மாகாணத்திலிருந்த பழைய வடுக ஆள வந்தார்க்கு அந்த ஆரிய-திராவிடக் கருத்தியல் ‘திராவிடம்’ என்ற பற்றுக்கோட்டைக் காட்டியது; அவர்கள் அதைக் குரங்குப்பிடி யாய் பற்றிக்கொண்டனர்.பண்டைய உரோமப் பேரரசை ஓயாமல் அலைக்கழித்துப் பின்பு அந்த உரோமையே கைப்பற்றித் தாங்களே உரோமானியமய மான செருமானிய அநாகரிகரைப்போல், அநாகரிகர்களாயிருந்த வடுகர்களும்கூடப் பண்டைத் தமிழரசுகளை அவ்வாறே அலைக் கழித்துப் பின்னர் அந்தத் தமிழரசுகளையே வீழ்த்தித் தமிழ்மயமாயினர் என்பதும் வரலாறு.இவ்வாறு தமிழரசுகளை வீழ்த்திய வடுக அநாகரிகர்கள், வானியல் உருவகங்களின் வழிவந்த பண்டைத் தமிழரின் பெருந் தெய்வ வழிபாட்டு வடிவங்களாகிய இந்திரன், மாயோன் (மால்), சேயோன் (கார்த்திகேயன் வடிவில் முருகன்), உருத்திரன் (சிவன்) ஆகிய தெய்வங்களைத் தமதாக்கிக்கொண்டனர். கீழைக்கங்கைக் கரையிலிருந்த நன்னர்(நந்தர்)களின் அரசை வீழ்த்தியதோடு நில் லாத இவ் வடுகர்கள், தென்னிந்தியாவில் முடங்கிய சேர, சோழ, பாண்டியப் பேரரசுகளையும் வீழ்த்தி ஆளவந்தார்களாகிக் குந்திக் குதிர்ந்து வந்தேறி ஆட்சியியல் கட்டுமானத்தைக் கண்டபின் - குறிப்பாகப் பல்லவ வடுகரின் காலத்தில்- வடக்கிலிருந்து வந்த அருகத்தையும் புத்தத்தையும் சேர்த்து இந்திரன் வழிபாட்டையும் ஒழிக்கத் துணைபோயினர்.
திருநாவுக்கரசர் “ஆனைஇனத்தின் துகைப்புண்ட அமணரா யிரமும் மாய்த்தற்பின்” - அதாவது, யானையைச் சமயக்குறியீடாகக் கொண்ட ஆயிரம் ஆசிவகரைப் பழையாறையில் கொன்று கொலைவெறியாட்டை நடத்திய பின்னரும் - திருஞானசம்பந்தரின் தூண்டுதலால் பாண்டியநாட்டில் எண்ணாயிரம் சமணர்களைக் கழுவி லேற்றிய பின்னரும் - அக்கால் கட்டவிழ்த்துவிடப்பட்ட மீப்பெரும் சமய வன்முறை வெறியாட்டிலிருந்து தப்பிப் பிழைத்த அருகரின் ஊர்கள் சில தமிழகத்தில் இருக்கத்தான் செய்தன; அருகர் கோயில் களும் எஞ்சிக் கிடக்கத்தான் செய்தன. ஆனால், இந்திரனுக்கான கோயில்கள் எல்லாமே சிவன் கோயில்களாகவும் பெருமாள் கோயில்களாகவும் செய்யப்பட்டன. இந்திரனுகென்று ஒரு கோயிலையும் விட்டுவைத்தாரில்லை. ஆசீவகம் என்னும் அறிவுச் சமயம் இருந்த இடம்கூடத் தெரியாதவாறு முற்றாக அழித்தொழிக்கப்பட்டது.இவ்வாறு நேர்ந்ததற்கான கரணங்களைத் தேட வேண்டும்.வடுக வந்தேறியத்தின்கீழ் இந்திரன் வழிபாடு ஒழிக்கப்பட்ட வரலாற்று நிகழ்வைக் கோடிட்டுக் காட்டுவதால், அந்த இந்திரன் வழிபாட்டை உயிர்ப்பிக்கவோ புதுப்பிக்கவோ வேண்டுமெனக் கூறுவதாகாது. தமிழரினத்தின் வீழ்ச்சிக்குக் கரணமாயிருந்த வடுகப் படையெடுப்புகளுக்குப்பின் புதிதாக முளைத்த அல்லது புகுத்தப்பெற்ற சமய நம்பிக்கைகளும்கூடத் தமிழர்களின் வீழ்ச்சிக்கும் தாழ்ச்சிக்கும் வழிகோலியதை இக்ககாலத்துத் தமிழர்கள் தெரிந்துகொள்ள வேண்டுமென்னும் எண்ணத்தில்தான் இந்திரன் வழிபாட்டைப்பற்றிக் கருத்துரைக்க முனைந்தோம்.இந்திரனை வரன்முறையற்ற பெண்வெறியனாகவும் காமு கனாகவும் தொன்மங்கள் காட்டுகின்றன. இந்திரன் வழிபாடு அருவருக்கத்தக்க காமக்களியாட்டங்களுடனும் சடங்குகளுடனும் தொடர்புடையதாயிருந்திருக்க வேண்டும் என்பதை அவற்றின் ஊடாக நன்கு குறிப்பறிய முடிகின்றது. இக் காமக்களியாட்டங்கள் வரம்பு மீறிச் சென்றதால், கடுந்துறவுவழி நின்ற ஆசிவகமும் அருகமும் புத்தமும் அந்த இந்திர வழிபாட்டை எதிர்த்துக் களம் கண்டிருக்க வேண்டும். இச் சூழலை வடுகப் பிராமணியம் பயன்படுத்திக் கொண்டது. இது இந்திர வழிபாட்டுக்கு எதிரானதொரு சூழலைத் தோற்றுவித்திருக்கும். மேலும், அக்குத்தின்றி நெடுஞ்ஞாண் கிடையாகத் தரையில் வீழ்ந்து இறைவனிடம் அடிபணிகின்ற (சரணாகதி) நெறியான இறைப்பற்றி (பத்தி) நெறி, அடிமைகளாய் வழியறியாது திகைத்து நின்ற தமிழர்களிடம் மீப்பெரிய தாக்கங்களை ஏற்படுத்தியதும்கூட இந்திர வழிபாடு ஒழிக்கப்படுவதற்கான கரணங்களில் ஒன்றாயிருந்திருக்கும்.
மேற்கண்ட கருத்துகள் அறிஞர் குணா அய்யாவின் சகரவளக் கோட்டம் என்ற சிறந்த ஆய்வு நூலில் இருந்து எடுத்தாளப்பட்டிருக்கிறது
இன்னும் உங்களுக்கு விளக்கம் தேவைப்பட்டால் அறிஞர் குணாவின் "சக்கரவளக் கோட்டம்" என்ற நூலினை தவறாமல் படிக்கவும்.
//அப்ப‌டியானால் சோறு அல்ல‌து நெல் உற்ப‌த்திக்கு யார் பொறுப்பான‌வ‌ர்க‌ள்,வேளாள‌ர்க‌ள் அவ‌ர்க‌ள் தான் நிலச்சொந்த‌க்கார‌ர்க‌ள் அல்ல‌வா. நில‌ங்க‌ளுக்குச் சொந்த‌க்கார‌ர்க‌ள் தான் ஆள‌முடியுமே த‌விர‌, அந்த‌ நில‌த்தில் வேலை செய்த‌ ப‌ள்ள‌ர்க‌ளும் ம‌ள்ள‌ர்க‌ளும், க‌ள்ள‌ர்க‌ளும் ஆட்சியாள‌ர்க‌ளாக‌ இருக்க‌வே முடியாத‌ல்ல‌வா. //
வேளாள‌ர்க‌ள் நில உடமையாளர்களாக இருந்தார்கள் என்பதற்கு ஆதாரம் என்ன? மள்ளர்களும் ,கள்ளர்களும் அவர்களுடைய நிலத்தில் உழைத்தவர்கள் என்றால்,மருத நிலத் தலைக் குடிமக்களாக வேளாளர்களை குறிக்காமல்,அவர்களிடம் உழவுத்தொழில் செய்த மள்ளர்களை குறிப்பது ஏன்?மட்டுமல்லாமல் மள்ளர்கள் வழி வழி நில உடமையாளர்களாக (வடுகர்களால் நிலப்பறிப்பு செய்த பின்னரும்) இன்றுவரை உள்ளார்களே!!!!எப்படி?ஆதாரம் ,இந்த இணைப்பில் உள்ள நிலம் சார்ந்த உரிமைகளை ஆய்ந்தறியவும் .(http://mallarchives.blogspot.in/2012_11_04_archive.html)
உங்களுடைய கருத்துப்படி வேளாளர்கள் நிலத்தில் மள்ளர்கள் வேலை செய்வதாக இருந்தால் ஊர்த்தலைவனாக குடும்பனை ஏன் குறித்தார்கள்? உண்மையில் இன்றைக்கு நீங்கள் சொல்லும் வேளாளர்கள் உண்மையில் வெள்ளாளர்களா ?(வேளாளருக்கும் வெள்ளாளருக்கும் வேறுபாடு தெரியும் என்று நினைக்கிறன் ) . தமிழ் சாதியில் உண்மையாக வெள்ளாளர்கள் என்று கூறப்படுபவர்கள் (நீர்க்கட்டி, நீர்க்காணிக்கர்) என்ற மள்ளர் குலப் பிரிவினரே ஆவர் என்பதில் உங்களுடைய கருத்து என்ன ?பாண்டியர்களது ஆட்சி பறிபோன பின்பு மிக அதிகமாக வடுகர்களால் பண்பாட்டு அடிப்படையிலும்,பொருளாதாரத்திலும் ,ஆட்சி அதிகாரத்திலும் பாதிக்கப்பட்டது எச்சாதியினை சார்ந்தவர்கள்?இன்றுவரை பாதிக்கப்பட்டுக் கொண்டிருப்பது யார்?உங்கள் கூற்றில் உள்ளது போல பிள்ளைகளும் ,முதலியார்களுமா ???பிள்ளைகளும் ,முதலிகளும் ஆட்சி அதிகாரத்தில் இருந்திருப்பின் ஆட்சி அதிகாரம் பறிக்கப்பட்டபின்பு பிள்ளைகளும் ,முதலிகளும் அவ்வாட்சியை மறுப்பேதும் செய்யாமல் எற்றுக்கொண்டனரா?அவர்கள் வடுகர் ஆட்சியில் எந்த இடருக்கும் உட்படவில்லையே?ஏன் ?உண்மையில் பிள்ளைகள் ,முதலிகள் அரச குலத்தவர்களாக இருந்திருப்பார்களேயானால் கண்டிப்பாக அவர்கள் வடுகராட்சியில் பாதிக்கப்பட்டிருப்பார்களே!!!!எனக்குத் தெரிந்தவரை அவ்வாறான வரலாற்றுச் செய்தியை நான் கேள்விப்பட்டதே இல்லையே!!! உங்களது கருத்து" பிள்ளைகளை சோழ வழியினர்" என்று நிறுவது இல்லையெனினும் நீங்கள் "மள்ளர்களது" கருத்தை மறுத்தலுக்காக கையாண்டுள்ளதால் உங்கள் கூற்றை நான் மறுத்து இருக்கிறேன் .மற்றபடி எனக்கு சாதியில் நம்பிக்கை இல்லை.
//நீங்க‌ளாக‌ இக்கால‌த்தில் ஆரிய‌ம‌ய‌மாக்க‌லின் (Sanskritization Process) ‍ ப‌டி உங்க‌ளுக்கு தேவேந்திர‌குலம் என்ற‌ ஆரிய‌ப்பெய‌ரைத் தொட‌ர்புப‌டுத்தி ஒரு க‌தையை இட்டுக் க‌ட்டி விட்டு, பின்பு அந்த‌ப்பெயரை ப‌ழ‌ந்த‌மிழ் இல‌க்கிய‌ங்க‌ளிலுள்ள‌ பாட‌ல்க‌ளுட‌ன் தொட‌ர்பு ப‌டுத்திக் கொண்டு, நாங்க‌ள் தான் த‌மிழ்ம‌ண்ணை ஆண்ட‌வ‌ர்க‌ள் என்ப‌தும் ம‌ற்ற‌ த‌மிழ‌ர்க‌ள் எல்லாம் வ‌ந்தேறிக‌ள் என்ப‌தும் உங்க‌ளின் தாழ்வும‌ன‌ப்பான்மையைக் காட்டுவ‌து ம‌ட்டும‌ல்ல‌///////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////
உங்களுடைய கூற்றுப் படியே வைத்துக் கொண்டாலும் ,நீங்கள் மனிதர்களுக்குள் "தமிழன்"என்று பிரித்து பேசுவதும், தமிழனுடைய வரலாறு பல வரலாற்று சிறப்பு மிக்கதாகவும் ,தமிழருடைய நாகரீகம் உலகில் மூத்தது என்று கூறுவதும் தமிழனுடைய தாழ்வு மனப்பான்மையை காட்டுகிறதா ?இல்லையே.
// உண்மையில் நீங்க‌ள் த‌மிழ‌ர்க‌ள் தான், த‌மிழ்ம‌ண்ணின் மைந்த‌ர்க‌ள் தான் என‌ நிரூபிக்க‌ விரும்பினால், அந்த‌ 'தேவேந்திர‌' என்ற சொல்லைத் தூக்கிக் குப்பையில் போடுங்க‌ள்.//
இந்திர வழிபாட்டை நான் தமிழர்களுடையது என்கிறேன்.அதற்குண்டான ஆதாரத்தை அறிஞர் குணா அவர்களின் ஆய்வை மேற்கோள் காட்டியுருக்கிறேன் .அதனை நான் ஏற்றுக்கொள்கிறேன்.உங்களது கருத்தென்ன ?
உண்மையில் நீங்க‌ள் த‌மிழ‌ர் தான், த‌மிழ்ம‌ண்ணின் மைந்த‌ர் தான் என‌ நிரூபிக்க‌ விரும்பினால், உங்கள் பெயரான "வியாசன்"' என்ற சமற்கிருதச் சொல்லைத் தூக்கிக் குப்பையில் போடுங்க‌ள்.
வியாசன் தமிழ்ப் பெயரா?
வடுகர் ஆட்சியை எதிர்க்கும் நீங்கள், அவர்களால் "மள்ளர்களுக்கு" இடப்பட்ட "பள்ளர் "என்ற இழி பெயரைப் பிடித்து தொங்குவது ஏன்?
"மள்ளர்களை"இழிவுபடுத்த வடுகர்களால் ஊக்குவிக்கப்பட்டு எழுதப்பட்ட பள்ளு இலக்கியங்களை தமிழ்நாட்டு பாட நூலிலேயே வைத்து தமிழர்களாலேயே தமிழர்களுக்கு கற்பிக்கப்படும் கேட்டினை நாம் எவ்வாறு சரி செய்யப் போகிறோம் ?????
(இதைப்பார்த்துவிட்டு நான் தேவேந்திர சாதி , அது, இது ஆட்டுக்குட்டி என்றெல்லாம் சில‌ர் என‌க்கெதிராக‌ப் போர்க்கொடி தூக்கினாலும், தூக்குவார்க‌ள் அத‌ற்கு நான் பொறுப்ப‌ல்ல‌, :-) என‌க்கு சாதியில் ந‌ம்பிக்கை கிடையாது....தொடரும்...
எனக்கு தமிழ் தட்டச்சு தெரியாததால் எழுதுப்பிழை மிகுந்திருப்பதற்கு வருந்துகிறேன்....
muventhan
மள்ளர் குள்ளர் என்பதெல்லாம் வார்த்தை விளையாட்டு.
'ஆண்ட பரம்பரை' சீரியலை எல்லா சாதி செனலும் விரும்புகிறது. கொய்யால.... எல்லாரும் இந்நாட்டு மன்னர்
சரவணன் - பேராவூரணி
கட்டுரை எழுதுபர் நன்றாக ஆராய்ந்து எழுத வேண்டும்...மப்பு போட்டுவிட்டு தப்பும் தவறுமாக காழ்ப்புணர்வில் எழுதுவது உங்களுக்கு எத்தனை சலுகை கொடுத்தாலும்..முன்னேற வழியில்லை என தெரிகிறது..

* தேவர் இறந்த வருடம் 1963..கட்டுரையாளர் 1962 என கூறிக்கிறார்.

* தேவர் எழுதிய உயிலில் தலித்கள் பெயரும் உண்டு அதுப்போக சிட்டவண்ணாண் குளம் மற்றும் அதன் சுற்றுப்புறத்தில் வாழம் தலித்கள் இவர் நிலத்தைதான் வைத்து வாழ்கிறார்கள் இன்றும் அந்த நிலம் நிலங்கள் தேவரின் பெயரிலேயே உள்ளது..

* முதுகலத்தூர் கலவரம் என்ற ஒரு புத்தகத்தை அதுவும் காமராஜரின் நண்பர் எழிதிய புத்தகத்தை அதுவும் உங்கள் கட்டுரையைப்போலவே பொய்யை மட்டும் சொல்லும் ஒரு புத்தகத்தை என்னும் எத்தன நாளு கட்டுறையாளார் சொல்லிக்கொண்டே இருப்பாரோ தெரியல...

நீங்கள் கட்டுரை எழுத வந்தால் ஆதாரத்துடன் எழுதுங்கள்..நாளை உங்கள் தலித்களே.. மப்பில் எழுதிய உங்கள் உளறல்களை உதாசீனப்படுத்தும்..

தவறு சொல்பவனே மிகுந்த ஜாக்கிரதையாக ஆதாரம் தரவேன்டும்.. வாய்க்கு வந்ததை எல்லாம் ஒருவன் சொல்வான் எனில் அவன் பெயர் பைத்தியம்.
Maravan
பசும் பொன் தேவரைப் பற்றி முழுமையாக அறியாதவர்கள். தயவு செய்து கட்டுரை எழுத வேண்டாம்.
பெருமாள் தேவன்
அறிவுக்குயில் அவர்களே, அடிமைகளின் வரலாற்றை நீங்கள் புனையலாமே?
பெருமாள் தேவன்
--// சில இடங்களில் ஓட்டுபோடாத தலித் மக்களைத் தாக்கிடத் தூண்டுதலாய் இருந்தார். இது சம்பந்தமான வழக்கில் தேவருக்கு பாதகமாய் தீர்ப்பு சொன்ன நீதிபதியின் கால் வெட்டப்பட்டது. ஒரு டெபுடி தாசில்தார் கொல்லப்பட்டார். வெள்ளைக்கார அரசு, தேவர் வாயைத்திறந்து பேசினாலே கலவரம் வருவதால் பேசக்கூடாது என்று உத்தரவு போட்டது.//

புனைவுகளை படித்தவர்கள் எழுதுவது.
பெருமாள் தேவன்
//மேற்காணும் செய்திகளே திரு.உ.முத்துராமலிங்கத்தின் இந்து வெறி உணர்ச்சிக்கு சான்றாகும். இதனை மறைத்து அவரை ஒரு தேசியத் தலைவராக்கும் முயற்சியாகத்தான் 'இஸ்லாமியப் பால் குடி'' என்கிற கதை கட்டமைக்கப்பட்டது. இதனை அவரது வரலாற்றை எழுதியவர்களே மறுக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.//

சரி தலித்கள் எந்த மதத்திற்கு வால் பிடிக்கிறார்கள். அம்பேத்கர் புத்த மதத்திற்கு வால் பிடித்தார். பெரியார் இஸ்லாம், கிறிஸ்தவத்திற்கு வால் பிடித்தார்.

இஸ்லாமிய பால்குடி கதை என்று தேவரின் வரலாற்றை எழுதியவர்களே எழுதிய பின்னர் இந்த கதையை பரப்புபவர்கள் யார்?
Azhagu Kaalingaraayar...
ஒரு ஆட்டு குட்டிய வாங்கி கொடுத்ததால் 'காமராஜர்' முதல்வர் ஆனார் என்று கூறினால் சின்ன குழந்தை கூட சிரிக்கும் ....

ராமசாமி படையாட்சியார், மானிக்கவேலு நாயக்கர் எனும் வன்னியர்கள் இல்லை என்றால் இன்று காமராஜர் என்ற ஒரு முதல்வரே இல்லை

அந்த இருவரும் தஙகள் கட்சி வசம் இருந்த 26 சட்டமன்ற உறிப்பினர்களின் ஆதரவை தந்ததால் தான் காமராஜர் அரியனை ஏரினார்...

அந்த காலத்தில் மெட்ராஸ் மாகானம்(தமிழ் நாடு, ஆந்த்ரா, கர்னாடகம், கேரளா) முழுவதும் சேர்த்தே 160 தொகுதிகள் தான
kallalangudi kallar sangam
ஜாதி சண்டையை தூன்டிவிடும் உங்கலுக்கு, ஜாதியை வெற்த்த தலைவர் பட்ரி என்ன தெரிஉம்
வரலாட்ரை சரியாக படித்து பாருங்கள்
தேவரை பட்ரி உங்கலுக்கு என்ன தெரிஉம்.....
ஆர்.தியாகு
//திரு.உ.மு.தேவர் தனது நிலங்களை தலித்துகளுக்கு பகிர்ந்தளித்தார்.// என்பது உண்மை 11 தலித் கிராமங்கள் இதில் பெரிதும் பயன் அடைந்திருக்கின்றன.. நீங்கள்தான் இருப்பதை இல்லை என்பதைப்போல் எழுதியுள்ளீர்கள்!

விருநகர் மாவட்டம் சிட்டவண்ணாகுளம்
திருச்சூழி
வீரசோழபுரம் தவிர 8 கிராமங்கள்...

நாங்கள் அந்த பள்ளர் கிராமங்களுக்கு உங்களை அழைத்துப்போக யார். உண்மையை அறியும் ஆர்வமிருந்தால் வரலாம்!
john
HI Everybody,
DO you who is pandi,pandian ,pandiyar?

pandi is Nadar
pandian is kondiyan kottai maravar not other maravars
pandiyar is pallar

so pandiyan king is kondiyan kottai maravar

sethupathis is semmba nattu maravar which means chola nattu maravars they were rulers of chola king and migrated to ramnad and tirunelveli. please read history properly and comment.
DEVAR
First keetru has to ask apology for publishing this article. சில பைத்தியக்கார தெரு நாய்கள் இணையத்தில் ஒரு தேசியத் தலைவரை தவறாக சித்தரிப்பதினால் அவரின் புகழும் தியாகமும் மறைந்து விட போவதில்லை. ஆயிரம் கை கொண்டு மறைத்தாலும் ஆதவன் மறைவதில்லை.
PEOPLE DON’T SEE THIS WEBSITE BECAUSE IT IS NOT KEETRU. IT IS CASTE WBSITE.
Simply I can say the publisher and writers are FOOL. One of the best CASTE CLASH GREATING WEBSITE IS ”KEETRU”. DEVAR WHO IS THE MAN EXAMLE FOR UNITY,GODNESS, EAGERNESS, SIMPLICTY, TRUTHFULL. Stupid people like you ( KEETRU) cannot change the history. Mind your words and stop to publish this type of news otherwise you will get severe LOSS.
bosesivamathan
nee(Keetru) katturai elutha variya illa enga saathi ya thavara eluthanumndrathukaga variya unmai therincha eluthu muttal thanama ethavathu eluthuna naalla theriyathudi
Mani
தவரான தகவலை எல்லுதுவதும் அதை பதிவு செயிது வெலியிடுவதும் தவரு ....
Muthupand
இணையத்தில் ஒரு தேசியத் தலைவரை தவறாக சித்தரிப்பதினால ் அவரின் புகழும் தியாகமும் மறைந்து விட போவதில்லை. ஆயிரம் கை கொண்டு மறைத்தாலும் ஆதவன் மறைவதில்லை.
பசும் பொன் தேவரைப் பற்றி முழுமையாக அறியாதவர்கள். தயவு செய்து கட்டுரை எழுத வேண்டாம்.
Thamemon Ansari
குயில் கூவும் ஆனால் கூடுகட்டாது ஆனால் அறிவுக்குயில் பொய்யாக கூவுகிறது இட்டுக்கட்டுகிறது.

ஆதாரம் இதோ நான் இருக்கிறேன் எனது தந்தை வழி பாட்டியின் தாயை பெற்றவர்தான் சாந்த் பீவி என்று அழைக்கப்படும் ஆயிஷா பீவி இவருக்கு சிக்கந்தரம்மாள் என்ற பெயரும் உண்டு இவர்தான் பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு பால் கொடுத்தவர் அதன் மூலம் என் பாட்டிக்கு திருமணத்தின் போது தாய்மாமன் சீராக பல ஏக்கர் நிலங்களையும் தந்துள்ளார்

ஒருவரை பற்றி நல்லதை கூறாவிட்டாலும் பொய்யை கூறாமல் இருப்பது நல்லது

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.