onian“அவன் கிடக்கிறான் வெங்காயம்” என்று அலட்சியமாக சொல்லிவிடலாம். ஆனால் கண்ணீர் விடாமல் அந்த வெங்காயத்தை வெட்டுவது முடியாது.

வெங்காயம் Allium குடும்பத்தைச்சேர்ந்த ஒரு தாவரம். வெங்காயத்தை வெட்டும்போது செல்கள் உடைபடுகின்றன. வெங்காயத்தில் உள்ள alliinases என்னும் என்சைம்கள் சிதைவடைந்து amino acid suphoxides களை உற்பத்தி செய்கின்றன. அமினோ ஆசிட் சல்பாக்ஸைடுகள் மேலும் சிதைவடைந்து சல்ஃபீனிக் அமிலத்தை உற்பத்தி செய்கின்றன. சல்ஃபீனிக் அமிலம் நிலையற்றது. எனவே இவை syn-propanethial-S-oxide என்னும் வாயுவாக மாறி காற்றில் பரவுகிறது. கண்களை அடையும் இந்த வாயு கண்ணில் உள்ள நீர்ப்பசையுடன் சேர்ந்து கந்தக அமிலமாக மாறுவதால் கண்களில் உள்ள நரம்பு முனைகளில் எரிச்சல் உணர்வு தூண்டப்படுகிறது. அமிலத்தின் வீரியத்தைக் குறைப்பதற்காக கண்ணீர்ச் சுரப்பிகள் இயங்கி கண்ணீரை சுரக்கின்றன. இறுதியில் கண்ணீரின் உதவியால் எரிச்சலை உண்டாக்கும் கந்தக அமிலம் வெளியேற்றப்படுகிறது.

பெருமளவில் நீரை வெங்காயத்துடன் சேர்ப்பதால் எரிச்சலூட்டும் syn-propanethial-S-oxide வாயுவைத் தவிர்க்கலாம். ஓடும் நீரில் வெங்காயத்தை வெட்டுதல், ஈரப்படுத்தி வெட்டுதல் ஆகிய நுணுக்கங்களாலும் கண்ணீர் விடாமல் வெங்காயம் வெட்டலாம்.

வெங்காயத்தின் வேர்ப்பகுதியில் எரிச்சலை உண்டுபண்ணும் வாயு அடர்த்தியாக இருப்பதால் வேர்ப்பகுதியை கடைசியாக வெட்டலாம். மிகவும் கூர்மையான கத்திகொண்டு வெங்காயத்தை வெட்டுவதால் வெங்காயத்தின் செல்களுக்கு ஏற்படும் சேதம் குறைக்கப்படுகிறது. இதனால் எரிச்சலூட்டும் வாயு வெளிப்படுதலும் குறைக்கப்படுகிறது.

சல்ஃபீனிக் அமிலம் வெளிப்படுவது Allium குடும்பத்தைச்சேர்ந்த தாவரங்களுக்குள் வேறுபடுகிறது.

ஜீன்களை செயலிழக்கச் செய்யும் உயிரி தொழில்நுட்பம் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கண்ணீரில்லா வெங்காயம் நியூசிலாந்தில் உள்ள பயிர் மற்றும் உணவு நிறுவனத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த விந்தை 2008 ஜனவரி 31 ம் தேதியன்று நிகழ்த்தப்பட்டுள்ளது.

அனுப்பி உதவியவர்: மு.குருமூர்த்தி

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.