ஆந்த்ராக்ஸ், பிளேக், சின்னம்மை, சிக்குன்குனியா, போன்றவை மனிதர்களைத் தாக்கும் நோய்க் கிருமிகளாக மட்டுமில்லாமல் நாட்டைத் தாக்கும் போர்க்கருவிகளாகவும் பயன்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய பேரிடர் மேலாண்மை ஆணை யத்தின் சார்பாக உயிரி ஆயுதங்கள் குறித்தான வழிகாட்டுதல் புத்தகம் சமீபத்தில் மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ்பாட்டீல் முன்னிலையில் வெளியிடப்பட்டது. குறைந்த செலவில் எளிதாக தயாரிக்க முடியும் என்பதால் உயிரி ஆயுதங்களாக கிருமிகளை பயங்கரவாதிகள் பயன்படுத்த முடியும் என்று அதில் கூறப்பட்டுள்ளது. ஏழை மனிதனின் அணு ஆய்தம் எனப்படும் உயிரி ஆயுதக் கிருமிகள், ஒரு கிலோ மீட்டர் சுற்றளவில் வசிக்கும் பொது மக்களை தாக்க ஒரு அமெரிக்க டாலர் செல விட்டால் போதும் என்றும் கூறப்பட்டுள்ளது.

156 பக்கங்கள் கொண்ட இந்த வழிகாட்டுதல் புத்தகத்தில், வரும் காலங்களில் இத்தகைய கிருமிகளின் தாக்குதல்களைச் சமாளிக்கும் வகையில் மருத்துவ அறிவியல் வளர்க்கப்படவேண்டும் என்று தெரிவிக்கின்றது. வேளாண்மையையும் தாக்கும் வகையில் கிருமிகள் பயன்படுத்தப்படலாம் என்றும், இதனால் பெரும் பொருளாதாரச் சீரழிவை ஏற்படுத்த முடியும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்பாக சூரத் நகரில் பிளேக் நோய் தாக்குதல், 2005 ஆம் ஆண்டில் பரவலாகக் காணப்பட்ட சிக்குன் குன்யா தாக்குதல், இந்தாண்டு துவக்கத்தில் மேற்கு வங்கத்தில் தாக்கிய பறவைக்காய்ச்சல் நோய் போன்றவற்றையும், சுட்டிக் காட்டியுள்ள அறிக்கை, இத்தகைய நோய்கள் காட்டுத் தீயைப் போன்று பரவக் கூடியதாக உள்ளது என்றும் சுறுகிறது.

(நன்றி : மாற்று மருத்துவம் அக்டோபர் 2008)

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.