மங்கிய வெளிச்சம் கவிழ்க்கும்
தெருவிளக்கினடியில்
இரவுகளைக் களித்திருப்போம்.

கிச்சா கினியா...,
கிச்சுகிச்சு தாம்பாளம்...,
ஒருகுடம் தண்ணி ஊத்தி
ஒரு பூ பூத்தது...,
நீண்டு கொண்டேயிருக்கும்
விளையாட்டுக்களின் இடையில்
ஒவ்வொரு அம்மாவும் வந்து
அழைத்துச் சென்றுவிடுவார்கள்
தத்தமது பிள்ளைகளை.

கிளை தழைகளற்ற ஒற்றை மரமென
தனிமைப்பட்டிருக்கும்
தெருவிளக்கு.
நிசப்தத்தைப் போர்த்தியபடி
சுருண்டு தூங்கி விட்டிருப்பேன் நான்.

எவ்வளவு எரிச்சாலும்
கூப்பன் அரிசி  வேவுறதுக்கு
நேரமாகுதென 
அடுப்படியிலிருப்பாள் அம்மா.

Comments

1 comment

1
mmmuthukumar
marvellous. so sad

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.