மாவீரன் முத்துக்குமாருக்கு தஞ்சையில் சிலை திறப்பு இளந்தமிழர் இயக்கம் அறிவிப்பு
சென்னை-17. 29.04.2010.
தமிழீழ மக்கள் மீது, சிங்கள - இந்தியக் கூட்டுப் படைகள் நடத்திய தமிழின அழிப்புப் போர் முடிவுற்று ஓராண்டாகிறது. ஆண்கள், பெண்கள், குழந்தைகள், முதியோர் என தமிழர்கள் கூட்டம் கூட்டமாக இரக்கமின்றி குண்டுகள் வீசப்பட்டுக் கொன்றொழிக்கப்பட்ட அந்த இறுதி நாட்களைப் போல் கொடூரமான நாட்களை, உலகில் எந்தவொரு இனமும், எந்தவொரு விடுதலைப் போராட்டமும் சந்தித்ததில்லை.
இனவெறியின் கோரப்பசிக்கு பலியான எம் தமிழ் உறவுகளுக்கும், தமிழீழத் தாயக விடுதலைக்காக போர்க்களத்தில் நின்றுப் போராடி உயிர் ஈகம் செய்த தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் போராளிகளுக்கும் இளந்தமிழர் இயக்கம் தனது வீரவணக்கங்களைத் தெரிவித்துக் கொள்கிறது. முள்ளிவாய்க்கால் பேரழிவை துக்க தினமாக நினைவு கூர்வதுடன், அந்நாளை இன விடுதலைப் போராட்டத்திற்கு சூளுரை மேற்கொள்ளும் நாளாக கடைபிடிக்குமாறு இளந்தமிழர் இயக்கம் கேட்டுக் கொள்கிறது.
முள்ளிவாய்க்கால் பேரழிவை நினைவுகூறும் விதமாகவும், தேர்தல் அரசியலை சாராத மாற்று அரசியல் எழுச்சியே தமிழினத்திற்கு விடுதலையைப் பெற்றுத்தரும் என்று வலியுறுத்தும் வகையிலும், மாற்று அரசியலை முன்னிறுத்தி, தன் இன்னுயிரை தீக்கிரையாக்கிய ஈகி முத்துக்குமாருக்கு இளந்தமிழர் இயக்கம் சார்பில், முதன் முறையாக மார்பளவு சிலை தஞ்சையில் நிறுவப்படவுள்ளது. இச்சிலை தமிழ்நாட்டுத் தமிழர்களின் எழுச்சிக்கு குறியீடாகவும், மாற்று அரசியல் வெளிக்கான தொடக்கப் புள்ளியாகவும் அமையட்டும்.
More articles by க.அருணபாரதி
- தமிழ்த் தேசியம் பேசினால் இனப்படுகொலை உருவாகுமா? (26 செப் 2019)
- ராம்குமாரைக் கொல்ல சொல்லும் நமக்கு ரவுடிகளைப் பற்றிப் பேசத் தகுதியிருக்கிறதா? (07 ஜூலை 2016)
- நலத்துறையில் தனியார்மயம் வதைபடும் மக்கள் - வெளிப்படும் உண்மைகள் (26 மே 2016)
- தோற்றுப் போன செயலலிதாவும் – ‘மாற்று’ அரசியலும் (21 மே 2016)
- இலங்கைக்கு இந்தியா போர்க்கப்பல் வழங்குவது யாருக்கு எதிராக? (06 மே 2016)