தலித்திய சிந்தனையாளர்களாலும் வலதுசாரிகளாலும் இருமுனை தாக்குதலுக்கு ஆளாகி வரும் தந்தை பெரியார் பற்றி ப.திருமாவேலன் எழுதி ஜூலை 2018ல் வெளியாகியிருக்கும் நூல் ‘ஆதிக்க சாதிகளுக்கு மட்டுமே அவர் பெரியாரா?’ தந்தை பெரியார் மீது வலதுசாரியினர் காரமான விமர்சனங்களை வெளிப்படுத்தி வந்தாலும் இந்நூல் தலித் சிந்தனையாளர்கள் தந்தை பெரியார் மீது 1990களிலிருந்து வெளிப்படுத்தி வரும் விமர்சனங்களுக்கு மட்டுமே மறுப்பாக அமைந்திருக்கிறது.
முதலில் தந்தை பெரியார் மீது வைக்கும் விமர்சனங்களைத் தொகுத்துரைக்கும் நூல், பின்னர் ஒவ்வொரு விமர்சனத்தையும் பெரியாரின் எழுத்துகளிலிருந்தும் பெரியார், திராவிடர் கழகம் குறித்து பிறர் எழுதியவற்றிலிருந்தும் எடுத்துக் காட்டி மறுத்திருக்கிறது. நூலில் காட்டியிருக்கும் மேற்கோள்களும் காரணத்தை சரியாக விளக்கி விமர்சனத்தை மறுக்கும் திறமும் நூலாசிரியரின் கடுமையான உழைப்பைக் காட்டுகின்றன.
நூலாசிரியர் தலித் சிந்தனா வட்டத்தில் காத்திரமாகச் செயல்பட்டு வந்தவர், வருகிறவர்களில் குறிப்பாக தி.பெ.கமலநாதன், அன்பு பொன்னோவியம், ரவிக்குமார், சிவகாமி, மா.வேலுசாமி, பூவிழியன், கௌதம சன்னா உள்ளிட்ட பலரின் விமர்சனங்களுக்கு எதிர்வினையாற்றி இருக்கிறார். தலித் சிந்தனையாளர்கள் முன்வைக்கும் விமர்சனம் 1) பெரியார் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு தான் தலைவரே தவிர தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அல்ல. 2) பெரியார் தலித் மக்களுக்கு போராடியவர் இல்லை. 3) பெரியார் சாதி ஒழிப்பு போராளி அல்ல 4) பெரியார் ஒரு அரசியல்வாதி 5) தலித் விரோதியான பெரியார் தமிழகத் தலித் தலைவர்களை மதிக்கவில்லை 6) பெரியார் ஆளும் அரசாங்கத்தை மட்டுமே ஆதரித்தார். 7) ஆதிக்க சக்திகளை எதிர்த்து அவர் போராடியது இல்லை. 8) இடைநிலை சாதியினரின் சாதிவெறியைக் கண்டிக்கத் தவறினார் என்பது உள்ளிட்ட விமர்சனங்களைத் தொகுத்திருக்கும் திருமாவேலன், இம்மாதிரியான விமர்சனங்களை வெளிப்படுத்துவோர் பெரியாரை ஒழுங்காகப் படிக்காதவர்கள் என்கிறார். தொடர்ந்து 1) பெரியார் கீழ்வெண்மணி கொலையைக் கண்டிக்கவில்லை 2) தலித் மக்களைக் கொச்சையாகப் பேசினார் 3) பார்ப்பனர்கள் இடத்தில் இடைநிலைச் சாதியைக் கொண்டு வந்து நிறுத்தினார் என்கிற விமர்சனத்திற்கும் போதுமான அளவில் எதிர்வினை ஆற்றி இருக்கிறார்.
பெரியார் பார்ப்பனரல்லாத அனைவருக்குமே தலைவர். தீண்டப்படாதவர்களின் முன்னேற்றம் தான் பார்ப்பனரல்லாதவர்களின் முன்னேற்றம் என்பதே அவரது தொடர் செயல்பாடாக இருந்தது எனக் குறிப்பிடும் நூலாசிரியர், இரட்டைமலை சீனிவாசனுக்கு அயோத்திதாசர் உறவுக்காரராக இருந்தும் இரட்டைமலை சீனிவாசன் ஏன் அயோத்திதாசரை குறிப்பிடவில்லை? எனக் கேட்கிறார். கேள்விக்குப் பதிலாக வேறொரு கேள்வியைத் தான் கேட்டு வைக்கிறார்.
நூலாசிரியர் தொகுத்திருக்கும் செய்திகளை மட்டும் வைத்துப் பார்க்கும்போது பெரியார், தமிழகத் தலித் தலைவர்களை விட அம்பேத்கரை அதிகமாக ஆதரித்திருக்கிறார் என்கிற முடிவுக்கு வர முடிகிறது. அயோத்திதாசரை விரல்விட்டு எண்ணக்கூடிய அளவுக்கு மிகக் குறைவான இடங்களிலேயே குறிப்பிட்டிருக்கிறார். எம்.சி.ராஜா, சுவாமி சகஜானந்தா ஆகியோர் ஒப்பீட்டளவில் அயோத்திதாசரை விட அதிகமாகவே குறிப்பிடப்படுகின்றனர். பெரியார் அயோத்திதாசரை அதிகமாக குறிப்பிடாமைக்கு அயோத்திதாசர் சடங்குகள் மீது நம்பிக்கை உடையவராக இருந்தார் என்பது காரணமாக இருக்கலாம் என்பதான நூலாசிரியரின் பதில் வலுவற்றதாக இருக்கிறது.
அயோத்திதாசர் சடங்குகள் மீது நம்பிக்கை கொண்டு இருந்ததிலும் பெளத்தத்தின் தொடர்ச்சியை உறுதிப்படுத்துவதிலும் பெரியாரின் சித்தாந்தத்தோடு முரண்பட்டு இருந்த போதிலும், பார்ப்பன எதிர்ப்பாளராக இருந்தார் என்கிற வகையிலாவது அயோத்திதாசரைப் பற்றி பெரியார் பேசியிருக்க வேண்டும். பேசியிருப்பதான குறிப்புகள் இல்லாத நிலையில் நூலாசிரியர் ‘பெரியார் அயோத்திதாசரை மறைத்து விட்டார்’ என்பதற்கு வைக்கும் மறுப்பு பலவீனமாக இருக்கிறது.
பெரியார் தலித்துகளை சூத்திரர்களின் அங்கமாகவே கருதினார் என்பதற்கு நூலாசிரியர் தருகின்ற சான்றுகளில் ‘நீங்கள்’, ‘உங்கள்’ என்கிற சொற்கள் அதிகமாக இருக்கின்றன. சூத்திரர்களைப் பற்றிய இடங்களில் அத்தகைய சொற்பயன்பாடு இல்லை. மாறாக, சில இடங்களில் ‘நாம்’ என்கிற சொல் பயன்பாட்டைக் காணமுடிகிறது. ‘நீங்கள்’, ‘உங்கள்’, ‘நாம்’ என்னும் மூன்று விதமான சொற்களின் பயன்பாடு தலித் சிந்தனையாளர்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டை மெய்ப்பிப்பது போன்றே உள்ளது.
பெரியாரின் நோக்கங்களான பார்ப்பன எதிர்ப்பு, சூத்திரர்கள் மேன்மை, சாதிய இழிவை நீக்குதல் என்பனவற்றுள், இன்றைக்குக் சூத்திரர்கள் மேன்மை அடைந்திருக்கிறார்கள். பார்ப்பனர்களின் ஆதிக்கம் பெருமளவு குறைந்திருக்கிறது. ஆனாலும் சாதியக் கொடுமைகள் குறையாமல் அதிகரித்திருக்கிறது. இந்தப் புள்ளியில் இருந்துதான் பெரியார் சூத்திரர்களுக்காகவே உழைத்தார், தலித்துகளுக்காக உழைக்கவில்லை என்கிற விமர்சனத்தைத் தலித் சிந்தனையாளர்கள் எழுப்புகிறார்கள். இதற்குப் பதிலுரைக்க இந்த நூலைப் பொறுத்த மட்டில் திருமாவேலனுக்கு இன்னும் வலுவான வேறு சான்றாதாரங்கள் தேவையாக இருக்கின்றன.
- ஞா.குருசாமி
அவர் ஏற்றிவைத்த அறிவின்பாற்பட்ட வாதச்சுடர்கள் பொதுப்புத்தியில ் கனலாகப் பரவியது. பெரியாரியத்தை எதிர்க்க முடியாமல் பலகாலம் தெற்கின் வெப்பத்தை தாங்கமாட்டாமல் தென்திசையை எமதிசையெனப் பதுங்கிக் காத்திருந்தவர்க ளுக்கு,
பெரியார் எனும் தனிமனிதரின் மதிப்பீடு மற்றும் அவருடைய தனிப்பட்ட வாழ்க்கை பற்றிய சாமானியரின் பார்வையில் பிறழ்ச்சிகளை ஏற்படுத்துவதின் மூலமே பெரியாரை தமிழ்ச்சமூகத்தி லிருந்து அப்புறப்படுத்தி ட முடியும் என சரியாக கணித்துவிட்ட அடிப்படைவாதிகளு க்கு நாம் இரையாகிக் கொண்டே இருக்கிறோம் என்பதை சரியான நேரத்தில் நினைவுறுத்தியிர ுக்கிறது இந்நூலும், இதன்மீதான பேரா.ஞா.குருசாம ி அவர்களின் விமர்சனமும்...
தன்விரல் கொண்டு தம்கண்களையேக் குருடாக்கிக் கொள்கிறோமா...? சிந்திக்க வேண்டிய நிர்பந்தம் நம்முன்...
இடஒதுக்கீடு இல்லாமற்போனால் இன்னமும் முதல் தலைமுறைப் பட்டதாரியைக் காணாத குடும்பங்களுக்க ு நாமே தீயிடுகிறோம் என்பதை உணர்க!
கல்வியும், வேலையும் பொருளை உறுதிசெய்யும் கூறுகள், பொருளியல் ரீதியிலாக நிலைப்படும்போது அடையாளங்கள் தாமே அழிந்திடுதலை களத்தில் காண்கிறோமே?
மேலேறியோர் பலர் கீழிருத்தலை அறிந்திருந்தும் ஏணியை உதைத்திடுதல் சரியாமோ?
பெரியாரியம் என்பது புதிய கோட்பாடு அன்று ஏற்கனவே உள்ளதுதான்
இதை புத்தரும் மகாவீரரும் 2500 ஆண்டுகளுக்கு முன்பே முயற்சித்துப் பார்த்த தத்துவம் ஆனால் அது தமிழர்கள் மண்ணில் எடுபடவில்லை ஏதோ 300 வருடங்கள் அந்த தத்துவம் நிலைபெற்று மீண்டும் அது காலாவதியானது தமிழில் சூனியவாதம் என்பார்கள் திருவிசை அவர்களே சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து சொல்ல வேண்டும் தமிழர்களின் கோட்பாடு சுழற்சி தத்துவம் மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்து அறிவாம் இது இலக்கியம் பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவில்லை கால வகையினானே இது இலக்கணம் எனவே நிலையானது ஒன்றுமில்லை எல்லாமே மாற்றத்துக்கு உரியவை
ஆகவே பெரியாரின் கோட்பாடுகளும் அடிப்படைவாதம் உலகில் எதுவுமே சமமாக இல்லை ஏற்றத்தாழ்வுகள் இருந்துகொண்டேதா ன் இருக்கும் இந்த ஏற்றத்தாழ்வுகள் தான் உலகை இயங்க வைக்கிறது இதைத்தான் கால்மாக்ஸ் சொல்கிறார் முரண்பாடுகள் எனவே கால்மாக்ஸின் கோட்பாடு அல்லது அடிப்படை தத்துவம் முரண்பாடுகள் உலகின் வினைகள் ஒன்றுக்கொன்று சமனாகவும் எதிராகவும் இருந்தாள் உலகம் இயங்காது சாதாரண கண்ணுக்கு அதை சரியாக தோன்றினாலும் ஞானக்கண் ஆல் அதை உணர வேண்டும் இதைத்தான் தமிழிலே இல்லத்திலிருந்த ு உள்ளது தோன்றாது என்பார்கள் அதாவது நியூட்டனின் இயக்கவியல் மூன்றாவது விதி அது குறுகிய எல்லைக்குள் சரியாகத்தான் இருக்கும் ஆனால் அனுவுக்கு அணுவிலும் அப்பாலுக்கு அப்பால் அதாவது விண்வெளி விஞ்ஞானம் அவருடைய தத்துவம் ஏற்புடையதன்று அங்கு ஐன்ஸ்டீன் தத்துவம்தான் ஏற்றுக்கொள்ளப்ப டுகிறது ஆகவே நியூட்டனின் கோட்பாடு பிழையன்று ஆனால் அதன் எல்லை சிறியது
ஒரு தொழிற்கூடத்தை எடுத்துக்கொண்டா ல் அங்கு ஒரு முதலாளி சில முகாமையாளர்கள் பல தொழிலாளர்கள் காணப்படுவார்கள் எல்லோரும் முதலாளிகளாக இருந்தாள் யார் தொழில் செய்வது எனவே இந்த கட்டமைப்பு இருந்துகொண்டேதா ன் இருக்கும் இவர்களுக்குள் ஏற்படும் முரண்பாடு அந்த தொழில் நிறுவனத்தை இயக்கம் சரியான வழியில் முரண்பாடு வந்தால் தொழில் நிறுவனம் வளரும் பிழையான வழியில் போனாள் தொழில் நிறுவனம் அழிந்துவிடும்
ஊமையாக பிறந்த குமரகுருபரர் பின்னர் பேச ஆரம்பித்து கல்விப் பெறுகிறார் கல்வியால் ஏற்பட்ட செருக்கு அவரை இவ்வாறு சொல்ல தூண்டுகிறது என்றாள் முதலில் அரியாசனத்தில் அரசரோடு எனக்கு சரியாசனம் வேண்டும் என்றும் கேட்டவர் இறுதியில் மண்கண்ட வெண்குடைக் கீழாக மேற்பட்ட மன்னரும் என் பண்கண்ட அளவில் பணிய வேண்டும் என்று கேட்கிறார் ஆசைக்கு அளவில்லை சமநீதி கேட்டவர் அது கிடைத்தவுடன் அதற்கு மேலாக தான் அவருடைய ஆசை போகிறது
RSS feed for comments to this post