உச்சிக்கிளையை உடைத்துவிட்டு
எனை
ஊனமாக்கிவிட்டதாய் முடிவுக்கு வராதே
இனி
அத்தனை கணுக்களும்
ஆயிரமாய்த் தளிர்க்கும்
பொறு...

இருளின் கரிய உதடுகள் ஊதி
விடியல் அணைந்து விடாது
உன் சிறைக் கம்பிகள் உரசி
என் சிறகுகள் உதிர்ந்து விடாது

நீ அமைந்த மேடையில் நடிக்க
எம்மிடம் இருப்பது
குழுக்களல்ல - படை

திசைகளைக் கடக்கும்
தீர்க்கம் கொண்டவைகளை
இனியும்
உன் தெருவில் வேடிக்கை பார்க்குமென்ற
தீர்மானத்தில் கிடக்காதே

வைகறையைப்
பிரகடனப் படுத்திய உன்னிடம்
எஞ்சி நின்றது
வெறும் நட்சத்திரக் குப்பைகள்தான்

புதிய வரலாறு என்றுன்னைப் புரட்டினால்
அதே பஞ்சாங்கமும்
மஞ்சள் எழுத்துக்களும்தான்

வேண்டாம்-
எங்களுக்கான போரை
நாங்களே நடத்திக் கொள்கிறோம்
நீ எமக்கு
எதிரியாகவே இரு

பச்சியப்பன்

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.