Houseவிற்றுவிட்ட வீட்டிலிருந்து
எல்லோரும் வந்தாகிவிட்டது
மனங்களைத் தவிர

கணவன் வாழ்ந்த இடத்திலேயே
கண்மூட ஆசைப்பட்ட
அம்மாவின் கனவு சிதைத்த
வறுமையின் மீதுதான்
வருத்தமெல்லாம்

கடைசிவரை அவள்
அரற்றிக் கொண்டிருந்தது
ஊர் ஊராய்ச் சுற்றி
அப்பா மரவெடுத்துச் செய்த
கதவு ஜன்னல்கள் குறித்துதான்

நேற்றவள்
ஊர்வலத்தின்போது நிகழ்ந்தது
இடிந்த வீடுமுன்
விற்பனைக்கு நின்று
அவை வழியனுப்பி வைத்தது.

மாறன்

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.