Poor Ladyஆசையா பெத்தெடுத்து
அரவணைப்பா வளர்த்தெடுத்து
குட்டிப்பொண்ணு அவ
குமரியா வளர்ந்தபின்னே

வாசலிலே வாழைகட்டி
வாயார உரைக்கூட்டி
பொண்ணு கல்யாணத்த
நல்லாத்தான் செய்தேனே

வெள்ளிபாத்திரத்த
அள்ளி அள்ளி கொடுத்துங்கூட
ரூபா நோட்டுகள
கட்டுகட்டாக் கொடுத்துங்கூட
சீர்சினத்தியின்னு
சிறப்பாத்தா செய்தேனே

இன்னும் போதலையின்னு
எம் பொண்ண அனுப்பிவெச்ச
ஏதேதோ கேட்டுகேட்டு
அடிச்சு உதைச்சுவிட்ட

என்னெ,
அம்மான்னு கட்டிகிட்டு
அழுதாளே, மாப்பிள்ள
அத பார்க்க எங்க
மனசுக்குத்தான் பொருக்கல

நீங்க கேட்டு நாங்க
என்னத்த கொடுக்கல
திரும்ப திரும்ப கேட்டா-அது
எங்களுக்கு முடியல

பெத்தவங்க நிலமயபாத்து
புருசனோட கொடுமையபார்த்து
என்னத்த நினைச்சாளோ
எங்கண்ணு- அய்யோ தீய
வெச்சுகிட்டாளே எம்பொண்ணு

அய்யா, பொண்ணும் மணியும்
பொட்டலமா நாந்தாறேன்
எம் பொண்ணபத்திரமா
நீ திருப்பி தாரீயா?

வாழவந்தவள பாடா
படுத்திவெச்சிட்டியே-இப்படி
வாழ இல மேல
படுக்கவெச்சிட்டியே

வாரிகொடுத்தேனே நல்ல
மகராசன் எடம்பார்த்து-அய்யோ
மார அடைக்குதய்யா
எம்மகராசி முகம் பார்த்து

அய்யோ! மகளே ராசாத்தி!

ராஜகுமாரன் இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.