நினைவே நின்றுவிடு
இல்லை எனை தின்றுவிடு
கனவே கலைந்துவிடு-இல்லை
நினைவை கலைத்துவிடு,

சந்தன நிறத்தவளை
சாம்பிராணி மணத்தவளை
வாழை குருத்தவளை
காணமுடியாத வாழ்க்கை.

நான் இன்னும் முழுக்கப்
படிக்காத இலக்கிய புத்தகம்
அவள் அள்ள குறையாத
அழகிய அட்சய பாத்திரம்

ஆண்மையைகட்டி இங்கு
நானும்-பெண்மையைகட்டி
அங்கு அவளும், நாங்கள்
நடத்தும் காதல் ராஜ்ஜியம்
கணக்குப் பார்த்தால்
எல்லாம் பூஜ்ஜியம்,

சிறிது கண்மூடினால்
சிரிக்கின்ற உனது முகம்
சிறிதளவும் குறையாமல்
நிலவுபோல அதுவரும்

வானத்து வெண்ணிலவே
இலக்கியத்து பெண்ணிலவே
உன் நினைவு தாக்குதடி
நிலைகுலைய வைக்குதடி.

வண்ணத்து பைங்கிளியே
என் எண்ணத்து பைந்தமிழே!
நிலவும் தேள்போல ஆனதடி,
என் நிழலும் உன்போல தோனுதடி

வெறுமையாய் என்காதல்சோலை
வெளி நாட்டில்தான் எனது வேலை
இப்படியே கழியுமோ வாழ்க்கை!
இது நித்தமும் வேதனை வேட்கை

ராஜகுமாரன் இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.