Soldierபோர்களத்திலிருந்து
புறப்பட்ட கடிதம்
பூவையின் கைகளில்
புகலிடமாகிறது

இரத்தம் தோய்ந்த
வெள்ளை காகிதத்தில்
நீல வண்ணத்தில்
அவன் எண்ணங்கள்.

ஒரு கடிதம் எழுத
முடியவில்லையா
கண்ணே இது உன்
நியாயமான கேள்விதான்

ஒரு விழி அயர்ந்திருக்கும்
அதை மறுவிழி பார்த்திருக்கும்
காற்றுவந்தால் கூட என்
சட்டைகாலர் விறைத்துப்பார்க்கும்,

பீரங்கி முழங்கியிருக்கும்
பூமி நடுங்கியிருக்கும் - அங்கு
சத்தம் காதைபிளந்திருக்கும்
கொஞ்சம் இரத்தம் ஒழுகியிருக்கும்

எல்லையோர பாதுகாப்பில்
கொள்ளைபோகும் தேசம் காக்க
பல நாள் உறக்கம் கெட்டு - தாய்
மண்ணின் வீர முழக்கமிட்டு
பெண்ணே நான்

பூந்தோட்டத்தில் நிற்கவில்லை
காதலும் கவிதையும் செய்வதற்கு
போர்களத்தில் நிற்கின்றேன்
தேசம் வெற்றி கொள்வதற்கு

பகையை புகையாய் விரட்டிய்டித்து
பாரத கொடியை இமயத்தில்
நாட்டிவைத்துவெற்றிகொண்டு
நாடுதிரும்பியதும்

நெஞ்சல் பூத்த காதலோடு
உன்னை சந்திக்கவருகிறேன்
அப்போது என்னை கட்டி
அணைத்துக்கொள்ளடி
உன் காதல் திகட்ட திகட்ட.

ராஜகுமாரன் இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.