உயிர் தளரச் சுமந்தும்
மரிக்கத்தானே வேண்டியிருந்தது
இயேசுவும்

இறக்கிவை ரூப அரூபச் சுமைகளை
நெருங்கியமர் என்னை
ஏற்றுத் திளை என் உபசாரத்தில்

உரையாடலுக்குப் பின்
அநாதையாய் வீசி நட சுமைகளை

பீளையும் குரும்பியுமன்றி
வேறேதும் அண்டாத அவயவங்களும்
கசடு போக்கி சுத்திகரித்த மூளையுமாகி
எதன் கண்காணிப்புமற்று
உள்வயமானதாகட்டும் எஞ்சிய பயணம்

ஆனால்
சுமை நீங்கிய நினைப்பே
கனத்து வலிக்குமானால்
குற்றஞ்சாட்டாதே என்னை.


ஆதவன் தீட்சண்யா (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.