திரையரங்கு நோக்கி
நடந்துகொண்டிருந்த எங்களை
சடுதியில் வந்து
நனைத்துச் சென்றுவிட்டது
இந்தக் கோடை மழை
க்ரீம் அப்பி போட்ட பவுடரின்
சாயம் வெளுத்துவிட்டதாகப்
புலம்புகிறாள் மகள்
பேன்ட்டின் பின்புற தூய்மைக்கு
இனி உத்தரவாதமில்லையென்று
சிரிக்கிறாள் மகன்
படம் முடிந்து திரும்புகையில்
வராதிருக்க வேண்டுகிறாள்
மனைவி
குடையைக் கேடயமாக்கி
ஜெயித்து வந்தவனை
நிராயுதபாணியாக்கி வீழ்த்திய
மழையின் வெற்றி ருசியைச்
சுவைத்தபடி
எட்டி நடைபோடுகிறேன் நான்
- மாறன்
கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- ‘குடிஅரசு’க்கு வயது 100
- இடஒதுக்கீட்டின் எதிரி ஆர்எஸ்எஸ், பாஜக அடிபணிந்தது!
- நிலை தடுமாறும் நீலகிரி
- திருப்பூர் சங்கீதா மீது பொய் வழக்கு - குற்றவாளிகளுக்கு துணைபோகும் காவல் ஆய்வாளர்
- கௌரவ விரிவுரையாளர்கள் வாழ்வு, விடியலைப் பெறுமா?
- “திராவிட புரட்சிக் கவி” பாரதிதாசன்
- பிராகிருத நாடகத்தில் தென்னிந்தியக் குறிப்புகள்
- பிரளயம் தோன்றிடுமே!
- பார்ப்பன பத்திரிகைகளும் சர். ஷண்முகமும்
- பெரியார் முழக்கம் மே 02, 2024 இதழ் மின்னூல் வடிவில்...