கோவிலில் கடவுளைப்
பார்த்த கணம் —
என்ன வேண்டுவதென்றே தெரியவில்லை.

மனதிற்குப் பிடித்தவளை
கனவில் சந்தித்த கணம் —
என்ன பேசுவதென்றே தெரியவில்லை.

பழைய நண்பனின் குரலை
அலைபேசியில் கேட்ட கணம் —
என்ன உரையாடுவதென்றே தெரியவில்லை.

என்ன செய்வதென்றறியா கணத்தில் தானே
எல்லாமே முழுமையடைகின்றன.

- அ.சீனிவாசன்