கீற்றில் தேட...

1.

மகனே
வளர வளர நீ
நானாகிறாய்!

தளர தளர நீயாகிறேன்
நான்!!

2.

செடிக்குத்
தண்ணீர் ஊற்றியவன்
கரங்களில் கூடுதலாய்
மணக்கின்றது மலர்!

3.

அதென்ன ரகசியம்
பட்டாம்பூச்சிக்கு பூவுக்கும்
ஊடலே வருவதில்லை?

4.

பூவோடிரு!

பூவோடு சேரும் நாரே
மணக்கும்போது
நாம் ஏன் சிறக்கமாட்டோம்?

- அ.சீனிவாசன்