கீற்றில் தேட...

மழைநாளில்
கன்னம் சிவந்திருக்கும் வீடு
வெயில் நாளில்
வண்ணம் சேர்ந்திருக்கும் வீடு
வேறென்ன
அடையாளம் வேண்டும்
வந்து சேர்

*
சட்டென சிறிதானது எப்படி
சட்டென பெரிதானது எப்படி
பூனையும் புலியும்
எதிர் எதிரே நிற்க
மாயக்கண்ணாடியாய்
இடையில் நான்

*
சதா தாவிக்கொண்டிருக்கும்
மனம் ஒரு தவளை
தானே சென்று
சிக்கிக் கொள்ளும்
பதுங்கி இருக்கும்
பாம்புசூழ் உடல் இது

- கவிஜி