ஆற்றின் நடுவே குறுகி
நீண்டிருக்கும் நீர்ப்பாறையை
தொட்டு வருவது தான் போட்டி
தொடுவதற்கு முன்னமே
தொட்ட நினைப்போடு
திரும்புகிறவர்கள் அதிகம்
தொட்டு விட்டு
தொட்டோமா இல்லையா
குழம்புகிறவர்களும் இருக்கிறார்கள்
தொட்ட பிறகு திகைத்து
மூச்சிரைத்து
அங்கேயே நிற்பவர் சிலர்
தொட்டு விட்டு திரும்பி வந்து
தோற்றோரும் உண்டு
தொட்டும் தொடாமல்
தொட்டது போல
தொடத் தொட
தடதடக்கும் அதே போட்டியில்
நீர்ப்பாறையும் தொட்ட
ஒருவனைத் தான்
போட்டி முடிந்தும்
தேடிக் கொண்டிருக்கிறார்கள்
- கவிஜி
கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- ஒரே நேர்கோட்டில் யூதர்கள் - பார்ப்பனியம்
- காசா குழந்தைகளுக்கு ஒரு கடிதம் - கிரிஸ் ஹெட்ஜெஸ்
- சுயமரியாதைத் திருமணம் : உயர்நீதிமன்றத்தின் விபரீத தீர்ப்பு
- ஆளுநரின் ஆணவத்துக்கு சாட்டை அடி
- குட்டையாகும் ஆல்ப்ஸ் மலை
- ‘சூர’சம்ஹாரம்
- பெரியார் மீது இழிசொற்களை சுமத்தி பல்கலையில் பார்ப்பன யாகம்
- ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் - மலைவாழ் மக்களின் துயரத்தை காசக்கும் தந்திரம்
- தோழர் சங்கரய்யாவுக்கு வீர வணக்கம்
- பரோடா பெண்கள் முன்னேற்றம் - புதிய சட்ட விபரம்
- விவரங்கள்
- கவிஜி
- பிரிவு: கவிதைகள்