சுடும் வெப்பம் கடுங்குளிர்
தாங்கிப் பழகியபின்
பெரும்பாறையானேன்
பெயர்த்தெடுக்க முடியாத
கொடு நகரில்.
என்னை நீராட்டும்
நிலவொளிக்குத் தெரியும்
எனக்குள் படிந்திருக்கும்
நீரோடையின் தடங்கள்.

- சதீஷ் குமரன்

Pin It