முயலுக்கு மூன்று கால்
இல்லையில்லை ரெண்டரை என
சொல்ல வேண்டும்

காதுகளை எதற்காகவும் திறவா
வாய் மட்டும் செத்தும்
திறந்து கிடக்கும்

கேள்வி கேட்டு பதிலும் சொல்லி
கேட்ட கேள்வி விட்டு
சொல்லும் பதிலும் விட்டு
தவளை முதுகில் தான் சிந்தனை

உண்மையில் கவனமற்ற சிரிப்பெல்லாம்
உண்மையில் நூல் அறுந்த பட்டம்
வானில் தெரியும் வரை கவர்ச்சி
பிறகு சிக்கி சின்னாபின்னமாகி விடும்

கவிதை மனதுக்கும் கலங்கிய மனதுக்கும்
நூல் தான் இடைவெளி
மற்றும் தன்னை மட்டுமே
இவ்வுலகம் தூக்கி சுற்றவில்லை

ஜய்ஞ்சக்கா போடுவோர் மேலிருக்கும்
ஈர்ப்புக்கு ஒருபோதும் விடிவில்லையெனில்
தலையில் நடக்கிறாய்
கால்களில் சிந்திக்கிறாய்

- கவிஜி

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.