கடைசி வரை
துரத்திக் கொண்டே இருக்கிறேன்
ஓரடிக்கு முன்னால்
ஓடிக் கொண்டேயிருக்கிறது
வாழ்க்கை!

***

நினைவுகள்!

மனவெளியெங்கும்
இறைந்து கிடக்கின்றன
நினைவுகள்!
ஆகச் சிறந்த நினைவுகளை
சேகரிக்க முயல்கிறேன்
அடியில் சிக்கிக் கிடக்கும்
அவற்றின் மேல்
அடுக்கடுக்காக
அழுக்கு நினைவுகள்!
அழுக்குப்பசை
கையில் ஒட்டிக் கொண்டு
நகர மறுக்கிறது
பிசுப்பிசுப்பின்
கேவல இரசிப்பில்
பரிதாபமாக
நசுங்கிக் கொண்டிருக்கின்றன
ஆகச் சிறந்த நினைவுகள்!

- பா.சிவகுமார்

More articles by பா.சிவகுமார்

Comments

1 comment

1
Sathish Kumar
ஓரடி தூரத்தில் தான் ஒடிபிடிக்கும் இலக்கு இருக்கிறது

நல்ல கருத்து

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.