எழுத எழுத
இறுதிப் பத்தி வராத
கவிதை பற்றிய அக்கறை இல்லை!
பொருள் மறந்து
வரிக்குள் அடங்கி விடாத
வார்த்தைகள் பெரும் வித்தைகளின்
சூட்சமமாகவும் இருக்கலாம்!
நான்காம் முறை அடித்து
ஐந்தாம் முறை திருத்திய
ஓர் எழுத்து, அனிச்சை செயலாய்
இளைப்பாறவும் சென்றிருக்கலாம்!
குறிப்பெடுத்த குறிப்புகள்
இலைமறை காயாய்
கவிக்குள்ளே நீண்ட யுத்தமும் சென்றிருக்கலாம்!
மொத்தமாய் பிராத்தனையினூடே
எழுதிய கவிதை
உனதானதாகவும் இருக்கலாம் தானே?!

- ஆனந்தி ராமகிருஷ்ணன்

More articles by ஆனந்தி ராமகிருஷ்ணன்

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.