தலைகுனிந்தபடி வயிற்றுக்காக
மேயுமிந்த செம்மறிகளுக்கு
தேவையிருப்பதுண்டோ
சீருடைகள்,
லெகின்ஸ், சுடிதார், துப்பட்டா
வரிசைகள்,
பொது தரிசனம்,
சிறப்புத் தரிசனம்,
விஐபி தரிசனம்...
வயிறு நிரம்பாத ஆடுகளுக்கு
எதற்கு வைகுண்டம்?
தரிசு நிலத்தில் பசியாறும்
ஆடு மேய்ப்பவனுக்கு
நல்மேய்ப்பர் எனப் பட்டமாம்
சொல்லாழி வெண்சங்கே...

- சதீஷ் குமரன்

Pin It