Lovers In Nightநிலா வண்ணத்தால்
அடர்ப் பச்சைக் காட்டும்
வேப்ப மரத்தின் அடியில்
உன்னோடு
ஒரு சாமம் அளக்கும் போது
எட்டி பார்த்த என் பார்வையில்
செம்மறிக்கும் கருத்த மாட்டுக்கும்
இடைவெளி வழிய வழிய
காற்றசைத்த
கழுத்தோசை மணி
மீட்டியது அவ்விரவின் மேகத்தையும்
இசைத்தது
உன் நகத்தின் வரிகளையும்...

***

சிவப்பு
பொட்டு விட்டு
நிறைஞ்சி பிரியும் போது
ஓட்டை உடைசல் இலை வழியாக
உன் கன்னத்தில் விழும் ஒளிக்கு மாம்பழத்து நிறமென்றால்
என் நெஞ்சு மேல விழும் ஒளிக்கு
தாழம்பூ கூர்மை என்கிறாய்...

***

மெல்ல குத்தும் சூரிய ஒளியில்
என் காதோரம்
இருமுறை படர்கிறது உன் குரல்
ஆட்டுக்கு இறையாக்கிட்டு
உளுந்தகஞ்சி சோறாக்குறேன்னு...
என் கண்ணிலிருக்கும்
உன் பார்வையுள் நீ இருக்க,
நான் சொன்னதற்கு
மறுத்தசைத்த உன் விழியுருண்டை
என்ன பார்த்து சுத்த சுத்த
நானே செஞ்சேன் உளுந்தங்கஞ்சி...

- முருகன்.சுந்தரபாண்டியன்

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.