மார்புக் கூட்டில் மகிழம் பூக்களின்
மல்யுத்தம் மஞ்சள் மாலையில்
மறைந்திருந்து நீ பார்த்த முதல் ...
பகலிலும் விழாக் கோலம் பூணும் சொப்பனங்கள்
சாரல் நினைவுகளில் என் நித்திரையை
இரவுகளில் நீ ஆட்கொண்டதால் ...
என்னில் விளையாடும் சதுரங்கத்தில்
உன்னால் வெட்டுப்பட்டு விழும்போதெல்லாம்
சொர்க்கத்திலேயே விழ நேர்கிறது ...
இளஞ்சோலை நினைவுகளை இளமையாக்கிக் கொண்டே
நிதம் யுத்தம் செய்து என் செல்களை மட்டுமே
உயிரிழக்கச் செய்யும் உன் வெற்றிகள் ...
உன் விழி என்மீது படரும் நிமிடங்களில்
என் இதயத்தின் மௌன வாசலில்
தீபச் சுடர்களின் அரங்கேற்றம் .....
சீ ....போடீ!!! கோர்வையாக்க இயலவில்லை
எழுதும் என் கவிதையை
இதிலும் நீ வாசம் செய்வதால் ....

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.