கைதவறி விழுந்த கைபேசி
கொஞ்சம் கொஞ்சமாய்..
தன் வண்ண‌ங்களை
இழந்து கொண்டிருந்தது..!

ஒளிமிக்க அதன் திரையில்
மெல்ல மெல்ல
பிரியமானவர்களின் பெயர்களும்
செய்திகளும் தொலைந்து போயின.!

குரல்களின் வழியாக மட்டுமே
அறிய முடிகிறது
அன்பானவர்களின் விசாரிப்பை..!

பழுது பார்ப்பவனின் நுட்பத்தால்
சரிசெய்யப்பட்டு
இப்போது இயல்பு நிலைக்கு
திரும்பி விட்டது..!

இதற்கு முன்
ஒரு போதும் உணர்ந்ததே இல்லை
பார்வையற்ற ஒருவனின்
வண்ணங்களற்ற வாழ்க்கையும்
சரி செய்யப்பட வாய்ப்பின்றி
தொடரும் அவனின்
மிக நீண்ட துயரையும்..!

Comments

4 comments

4
ரோஷான் ஏ.ஜிப்ரி-இலங்கை.
யாரும் திரும்பிப்பார்க்காத விடயத்தை
மிக எளிமையாக நயம் ததும்ப தந்த அமீர் அப்பாஸ் அவர்களுக்கு
எனது நன்றியும்,வாழ்த்தும்.
ஆயிஷா பாரூக்
அருமை!
அமீர் அப்பாஸ்
கவிதையை பாராட்டியதற்கும், விமர்சனம் செய்ததற்கும், நன்றி தோழர்களே..!
saudi siky
ithanai arumaiyana uvamai unarvai unarthiamaiku nandri..

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.