*
அழுத்தமாய் இருந்துப் பழகு என்கிறான்
ஒரு வாக்குறுதிக்குள் படர்ந்து விரவும்
இருள் பற்றி யோசிக்காமல் இருந்ததில்லை

நம்பிக்கையின் வேர்களில் கசியும் ஈரம்
தண்ணீரல்ல ரத்தம் என்பதை
பூக்கத் துடிக்கும் மெளனத்திடம் சொல் என்கிறான்

தனித்துவிடப்பட்ட துயரத்தின் பழஞ்சுவரில்
பெய்து முடித்த மழை நீர் மிச்சம் கூரையிலிருந்து
இழுத்தபடி ஒழுகும் கசடென உணர்வதை
நிறுத்த முடிவதில்லை

ஓய்ந்தடங்கா மனக் கூச்சல்களோடு
வெறிக்க நேரும் வெற்றிடத்தில்
இதுவரை யாரும் புலப்பட்டதில்லை

பெயரற்ற முகங்களின் நினைவடுக்குகள் தோறும்
இடம்பெயரத் தடுக்கும் சந்தர்ப்பங்கள் ஒவ்வொன்றும்
மீட்சியின் பாதையென விட்டு வைத்திருப்பது

இத்தனிமைப் பழஞ்சுவரை மட்டுமே

******    
- இளங்கோ ( இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். )

Comments

1 comment

1
சோமா
பெயரற்ற முகங்களின் நினைவடுக்குகள் தோறும்
இடம்பெயரத் தடுக்கும் சந்தர்ப்பங்கள் ஒவ்வொன்றும்
மீட்சியின் பாதையென விட்டு வைத்திருப்பது....நிலைத்திருக்கிறது இளங்கோ-வுக்கான பார்வை...

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.